இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன் பார்வைக்கு அஞ்சி ...

என் கவிதைகள் கண்ணீரை பேனா மையாக்கி .... கண்ணால் பேசியவை வரிகளாய்  ... வலிகளாய்  பிறக்கின்றன ....!!! என்னவளே ... நீ காலை மாலை பூக்கும் ... மலராக இருந்து விடு ... அப்போதுதான் வாடமாட்டாய் ...!!! உன் பார்வைக்கு அஞ்சி ... நீ அருகில் வரும்போது ... மறு தெருவுக்கு போகிறேன்...!!! + கே இனியவன் கஸல் கவிதை ;763

நீ சந்தோசமாய் இரு ....!!!

நீ தொலைந்தால் தானே... நான் கவலைப்படுவேன் ... நீ என்னை நினைத்து ஏன்.. கண்ணீர் விடுகிறாய் ,,,,? உன் வாழ்க்கைக்காக ... என் வாழ்க்கையை பறித்தவள் -நீ சந்தோசமாய் இரு ....!!! உன்னை நான் நேரில் ... ரசிப்பதை விட கவிதையில் ... ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...!!! + கே இனியவன் கஸல் கவிதை ;762

கண்ணுக்குள் ஈரம்

காதலுக்கு கண் இல்லை கண்ணூறு உண்டு .... ஊர் கண் படவில்லை ... நம் கண்ணே பட்டு விட்டது ...!!! ஒவ்வொருவனுக்கும் ... அவனவன் காதல் தான் ... ஆயுள் பாசக்கயிறு .....!!! கண்ணுக்குள் ஈரம் ... காதல் - உன்னுக்குள் ஏன் ஈரமில்லை உயிரே ...!!! + கே இனியவன் கஸல் கவிதை ;761

நிச்சயம் நீ அழுதிருப்பாய் ...

வெள்ளத்தில் கரைந்த மண்  போல் என் காதல்  கண்ணீரில் கரைந்து போனது ....!!! பேச்சும் மூச்சுமாய் .... இருந்த நம் காதல் ... இறுதி மூச்சை இழுத்த .. வண்ணம் இருக்கிறது ....!!! இதயம் மட்டும் ... வெளியில் இருந்திருந்தால் ... நிச்சயம் நீ அழுதிருப்பாய் ... என்னை ஏற்றிருப்பாய்....!!! கே இனியவன் கஸல் கவிதை ;760

நானோ சிக்கி தவிக்கிறேன் ...!!!

உன் இதயத்தில் காதல் நெல் விதைத்தேன் ... புல்லாய் வளர்கிறது ....!!! சிலந்தி வலைபோல் ... அழகாக இருக்கிறது நம் காதல் -. நானோ சிக்கி தவிக்கிறேன் ...!!! எத்தனையோ.... வடிவமாய் உன்னை .. தரிசிக்க விரும்புகிறேன் ... நீ காலனாய் வருகிறாய் ....!!! கே இனியவன் கஸல் கவிதை ;759

தொலைத்துவிட்டேன் ....!!!

எதையுமே விரும்பாத ... உன்னை நான் விரும்பி ... தொலைத்துவிட்டேன் ....!!! கருங்கல்லில் -நீர் ... வடியும் என்பதை ... உன் காதலில் இருந்து ... நம்பிவிட்டேன் ....!!! பெண்ணை பற்றி நான் .... கவிதை எழுதியதில்லை ... உன்னை பற்றியே கவிதை ... எழுதுகிறேன் ....!!! கே இனியவன் கஸல் கவிதை ;758

இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!!

நீ என்னை விரும்மபில்லை .... என் கவிதையையும் ... விரும்பவில்லை - நீ இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!! தூரத்தில் அழகானது .... நிலா மட்டுமல்ல .... காதலில்லாமல் இருக்கும் ... என்னவளும் தான் ....!!! கவிதை எழுதி எழுதி ... ஞானியாகிவிட்டேன்.... தன்னை மறந்த நிலைதானே ... ஞானம் .....!!! கே இனியவன் கஸல் கவிதை ;757

காதலை வைத்திரு ...!!!

என் காதல்  இனிமையானது ... இதயம் பாலாப்பழம்போல் ... முட்களால் மூடியுள்ளது ....!!! எனக்கு ஒரு உதவிசெய் .... என்னை விட்டுவிடு ... காதலை வைத்திரு ...!!! இழந்தது  கோடி கணக்கான ... சொத்தென்றால் கலங்க ... மாட்டேன் - கோடி இன்பம்  தந்த காதலை ....!!! கே இனியவன் கஸல்  கவிதை ;756

இதயம் பள்ளமாகவே ... போய் விட்டது ....!!!

என்னை கொஞ்சம் ... கொஞ்சமாக வருத்தவே ... கவிதை எழுதுகிறேன் ....!!! நீ புரிய முடியாத புதிர் நான் புரிந்தும் புரியாத காதல் புதிர் ...!!! நீ என்னோடு ... நடந்து வந்த தூரம் ... பாதையில் குழி வரவில்லை .. இதயம் பள்ளமாகவே ... போய் விட்டது ....!!! கே இனியவன் கஸல் கவிதை ;755

பிரிவும் காதல் தான் ....!!!

கல்லை உரசி ... நெருப்பு மூட்டியது அறிவு நீ என் கண்ணை... உரசி காதல் தந்தாய் ... அதுதான் சாம்பலானதோ...? எனக்கும் உனக்கும் .... உறவும் காதல் தான்.... பிரிவும் காதல் தான் ....!!! சீ ....உனக்கு காதலிக்க கூட  .. தெரியாது என்று ... இழிவாக பேச ... வைத்துவிட்டாய் .....!!! கே இனியவன் கஸல் கவிதை ;754

காதலுக்கு மரணம் இல்லை ...

உன்னை நினைத்து அன்பாகத்தான் கவிதை ... எழுதுகிறேன் ... எப்படியோ வலியாக... மாறி விடுகிறது ...!!! காதலுக்கு மரணம் இல்லை ... எப்படி நம் காதல் புதைகுழிக்குள் நடக்கிறது  ....!!! என்னை விட உலகில் ஏழை யாரும் இல்லை இன்ப வரிகளே வருகுதில்லை ......!!! கே இனியவன் கஸல் கவிதை ;753

கருவிழி வெண்மையாகிவிட்டது ...!!!

உன்னை  காதலித்ததில் .... நன்றாக அழுவதற்கு ... கற்றுக்கொண்டேன் ...!!! நீ வார்த்தையால் .. சொன்னதை நான் ... கண்ணீரால் எழுதுகிறேன் ...!!! உனக்காக  காத்திருந்த இரவுகளால்  என் கருவிழி ... வெண்மையாகிவிட்டது ...!!! கே இனியவன் கஸல்  கவிதை ;752

கே இனியவன் கஸல்

காற்றை போல் உனக்கு ... வாசமுமில்லை நிறமுமில்லை ..... காதலில் பயன் படுத்தாதே .....!!! இரவின் கனவும் ... உன் நினைவுகளால் .. கண்ணீர் வரவைகிறது ...!!! நான் உன் கண் இமையை.... ரசிக்கிறேன் நீயோ ... அழித்து விடுகிறாய் ....!!! கே இனியவன் கஸல் கவிதை ;751

எனது 750 வது கஸல் கவிதை

என்  மனதின் பலவீனம்  மறக்கதெரியாது ... உனக்கோ அது பலம் ...!!! முகப்பருவை பார்த்து ... கவலைபடுகிறாய்... அது என் நினைவுகளின் ... அடையாளம் ....!!! காதல்  எனக்கு உள் சுவாசம்  உனக்கு வெளிச்சுவாசம் .. நம் கடந்த காலம் ... புதைகுழிக்குள் ....!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 750 எனது 750 வது கஸல் கவிதை  இத்தனை வரை ரசித்த ரசிக உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 

என் காதல் உன் இதயத்தில் ...!!!

உன் வலியை கிறுக்குகிறேன்... கவிதையாக மாறுகிறது ... நான் கவிஞனாம் ... வலி தெரியாதவர்கள் ...!!! உனக்கு எழுதிய கவிதை ... கடதாசியை குப்பை வண்டி ... ஏற்றி செல்கிறது ... மனம்  தப்பி விட்டது ....!!! தேவாலையத்தில் .... யோசிக்கிறேன் -இறைவா கேளுங்கள் தரப்படும் என்றீர் அவளிடம் கேட்டேன்.... தரவில்லையே ...!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 749

தினமும் ஏமாறுகிறேன்

பட்ட மரத்தில் ஆங்காங்கே  ஒட்டி இருக்கும் பாசி படர் போல் என் காதல் உன் இதயத்தில் ...!!! தினமும் ஏமாறுகிறேன் நினைவிலும் கனவிலும் .. நீ பேசுவாய் என்று ....!!! நீ மௌனமாய் இரு என் ஆயுள் மௌனமாகி ... வருவதை உணர்திரு ....!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 748

வலியை தா ....!!!

இன்பம் துன்பம் ... நடுவில் நம் .. காதல் இரு தலை ... எறும்பு போல் ...!!! என் இதயம் சுமை .. தாங்கி எவ்வளவு ... வேண்டுமென்றாலும் ... வலியை தா ....!!! காதல் ஆடுபுலி .. ஆட்டம் ... நீயா ..? நானா ..? + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 745

பாவம் நம் காதல் ...

பாவம் நம் காதல் ... முகவரி தெரியாமல் ... தெரு தெருவாய் ... அலைகிறது ....!!! இரவு நட்சத்திரம் .... அழகுதான் -பகலில் ..? நான் பகல் நட்சத்திரமாகி ... விட்டேனோ ...? உன்  காதலில் இருந்து  விடுபட விஷத்தை... எடுத்தேன் .... விஷ கோப்பையிலும் .... நீ .....!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 744

உன் இதயம் ....!!!

உன்னை நினைத்து ... மூச்சு விட்டேன் ... நான் இறந்த உணர்வை ... பெற்றேன் ........!!! காதல் கடலை விட ... ஆழமானதாம் - நம்  காதலில் ஆழம் தெரிந்து .. விட்டதே ....!!! உன்னிடம் இருந்து ... கற்றுக்கொண்டேன் ... இதயம் வேண்டும் ... காதலுக்கு  எங்கே...? உன் இதயம் ....!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 743

கண்ணீரால் மிதக்குறது ....!!!

வா காதல் வழியே.... சென்று மரணம் வழியே .. வெளியேறுவோம் ....!!! காதலுக்கும் வீதி  போக்குவரத்து விதிகள் .. வேண்டும் ... நம் காதல் விபத்துக்கு ... உள்ளாகிவிட்டது ....!!! நீ பரிசாக தந்த ... கை குட்டை கண்ணீரால்  மிதக்குறது ....!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 742

கண்ணீராய் ஓடுகிறது ...!!!

என் இதயத்திலிருந்து வெளியேறியபோது நீ அறுத்து விட்டு வந்த ... நரம்பின் அதிர்வுதான் ... என் கவிதைகள் ....!!! இதுவரை  சேர்த்து வைத்த இன்பங்கள் கண்ணீராய் ஓடுகிறது ...!!! காதல் பிரிகின்ற போது ... உயிரும் பிரியும் ... என்பதை நீ ஏன்...? புரியவில்லை ....? + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 741

காதலிக்க தெரியாது ......!!!

என் காதலை என்னிடம் .... ஒப்படைத்த போதுதான் ... புரிந்தது உனக்கு .... காதலிக்க தெரியாது ......!!! எல்லோருக்கும் கண்ணீர் ... கவலையை தரும் ... எனக்கு கவிதை தருகிறது ....!!! என்னையே  உன்னில் பார்க்கும்..... கதிர் வீச்சு கண்ணாடி   நீ ...!!!  + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 740

உணர்ந்து கொண்டேன்...!!!

நிமிட கம்பி போல் .... உன்னை தொடர்கிறேன் ... நீ ஓடாத மணிக்கூடு ... உணர்ந்து கொண்டேன்...!!! என் இதயம் நீர் குமுழி ... விரும்பிய நேரத்தில் ... ஊதி உடைத்து விளையாடு ....!!! நானும் ஏழைதான் ... உன் முன்னால் காதல் .. பிச்சை பாத்திரம் ஏந்தி ... பலகாலம் நிற்கிறேன் ....!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 739

நீ என்ன இதயமா ..?

நீ என்ன இதயமா ..? மூளையா ...? இதயம் என்றால் .. மறக்க மாட்டாய் ....!!! உன் வலிகளுக்கு பயந்து ... மறதியின் இடத்தில் வாழ்கிறேன் ....!!! காதல் தனித்துவமானது ... அதில் நீயோ மகத்தவம் ... உடனுக்குடன் வலி .. தருகிறாய் ...!!! + + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 738

காதலால் வந்த வலிகள் ..

என் ஒவ்வொரு வரியும் ... காதலால் வந்த வலிகள் .. உன் கையில் இருக்கிறது ... இன்பம் ....!!! காதல் ஒரு பிரபஞ்சம் எல்லையில்லை ... எப்படி உன்னை நான் .. புரிவது ...? காதலுக்கு பின்னால் இத்தனை ஆபத்தா ...? வா  நீந்துவோம் ... ஆபத்து கடலில் ....!!! + + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 737

காதல் ரோஜாவை ...

காதல் ரோஜாவை ... தந்தேன் -நீ காதல் .. ரோஜா முள்ளை வைத்திருக்கிறாய் ....!!! உன் காதல் சிலந்தி .. வலையில் சிக்கிய பூச்சி .. நான் உன்னால் இறக்கவும் .. முடிவு செய்துவிட்டேன் ...!!! மயானத்தின் அருகே ... இருக்கிறேன் -நீ சொல்லும் பதிலுக்காக ....!!! + + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 736

படாத பாடு படுகிறேன்....!!!

சொல்  காதல் கடல் நீரா ...? இளநீரா ..? எனக்கு பன்னீர்  உனக்கு...? ஒருபுறம் நினைவு  மறுபுறம் கனவு  நீ மகுடி  நான் பாம்பு  படாத பாடு படுகிறேன்....!!! நீ அழுதத்தை  நம்பிவிட்டேன்  கண்ணீர் என்று ....!!! கசல் 605

நீ கண்ணீராய் வருகிறாய் ...!!!

காதல் உனக்கு  கற்பூரம் எனக்கு  தீபம்  நிலைத்திருக்கிறேன் ...!!! யோசித்து வருவதில்லை  காதல்  யோசிக்காமல் உன்னை  சந்தித்தேன்  உணர்ந்து கொண்டேன்  தவறை ....!!! இளநீர் போல் உன்னை  இதயத்தில் வைத்திருக்கிறேன்  நீ கண்ணீராய் வருகிறாய் ...!!! கஸல் 604

கஸல் 250

உன்னை கண்டவுடன் .. என் உயிர் மொழியே .. மறக்கிறது......!!! வனத்தில் பறக்கும் ... ஊர்குருவி போல் .. காதலை கத்தித் திரிகிறாய் ... பயனில்லை ....!!! உன்னை நினைக்கும் .. நேரமெல்லாம் -ஒரு  கண் கண்ணீரையும் ... மறுகண் பன்னீரையும் .. வடிக்கிறது கண்ணே ...!!! கஸல் 250

கஸல் 249

மெழுகு திரியாய் .. உருகுகிறேன் .. நீ  விட்டில் பூச்சியாக கூட .. மாறவில்லை ....!!! வா இருவரும் .. ஆகாய முகிலுக்குள்  முத்தமிடுவோம் ...!!! நீ அழுவது .. வைரக்கல் .. நான் அழுவது .. மாணிக்கக்கல் ....!!! கஸல் 249

கஸல் 248

காதலும் நீ  காதலியும் நீ  என்றுதானே இருந்தாய் ...!!! எப்போதென்ன என்னிடம் .. காதல் மட்டும் இருக்கிறது ....??? கண்ணுக்குள்....  கண்ணீர் மட்டுமல்ல ... இரத்தமும் இருக்கிறது ... மறந்து விடாதே ....!!! நான் வடக்கு திசை .. நீ தெற்கு திசை ... எப்படி இணைவது ...??? கசல் 248

கஸல் 247

இன்று காதல் பரீட்சை ... எழுதினேன் ... விடையும் நீ ... வினாவும் நீ ... நான் கண்ட பூக்களில் .. அடிக்கடி மலரும் பூ ... உன் சிரிப்பு ...!!! வருமானம் இல்லாதவன் .. வீட்டில் அடுப்பு எரியாதது போல் .. நீ இல்லாத இதயத்தில் ... நினைவுகள் -இல்லை 

கஸல் 246

காதலில் தற்கொலை... முட்டாள்களின் முடிவு ... தற்கொலை செய்தவுடன் .. அவர்கள் காதல் அழிவதில்லை ,.... அவர்கள் தான் அழிகிறார்கள் ...!!! காலையில் இளம் .. சூரியன் நீ .. ஏன் இப்படி ... சுட்டெரிக்கிறாய் ....? நீ நிலவும் ... சூரினனாகவும் .. இருந்தால் ... வானத்தில் எனக்கு ... என்ன வேலை ...?

கஸல் 245

நான்....நீ...!!! நீயார் ...? நீ ...நான் .....!!! நான் யார் ...? காதல் அழகும் ... அழுக்கும் நிறைந்தது ... ஆனாலும் அழகு ...!!! என்னை நானே .. தேடுகிறேன் .. உன்னில் இருப்பதை .. மறந்துவிட்டேன் ....!!! கஸல் 245

கஸல் 244

நான் ... உன்னை காதலிக்க .. முன்னரே உன் நிழலையே .. காதலித்தேன் ...!!! காதல் கண்ணுக்கு தெரியாது .. கண் பார்க்கமல் வராது ...!!! காதல் வலிக்காமல் இனிக்காது ...!!! கண்ணே ... கப்பல் கடலில் தான் ... மிதக்கனும்... காற்றில் அல்ல ...!!! கஸல் 244

இதயம் வலியால்.. துடிக்கிறது ....!!!

நீயே ... காதல் நாயகியாகவும் .. இருக்கிறாய் .. காதல் வில்லியாகவும் .. இருக்கிறாய் ...!!! நான் வணங்கிய.. கடவுளிடம் கேட்பதெல்லாம் .. உன்னைத்தான் ...!!! தயவு செய்து .. என்னிடம் இருந்து ... விலகிவிடு ...  என் இதயம் வலியால்.. துடிக்கிறது ....!!! கஸல் ;243

இதய கண் தான்...

இதய கண் தான்...  என் முக கண்ணைவிட .. இதய கண் தான்...  உன்னை அதிகளவு ... பார்த்திருக்கிறது ....!!! என் காதலில் நீ  என்றும் இருப்பாய் ... இதயத்தில் மறைந்தாலும் ...!!! காதல் கற்பூரம் போன்றது ... பிரகாசமாக எரியும் ... விரைவில் அழிந்துவிடும் ...!!! கஸல் 242

மன காயப்படும் போது ...

மன காயப்படும் போது .. . நான் .. காதலுக்காக ஏங்குகிறேன் ... நீ  காதல் சொல்ல தயங்குகிறாய் ... வயிறு பசியில் அழுகிறது ... கண் கண்ணீருக்காக அழுகிறது .. மனம் காதலுக்காக அழுகிறது ... மன காயப்படும் போது ... யார் ஆறுதல் சொல்வார்கள் .. என்று எங்கும் மனம் போல் .. உன்னை தேடுகிறேன் ...!!! கஸல் 241