இடுகைகள்

நவம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதயம் பள்ளமாகவே ... போய் விட்டது ....!!!

என்னை கொஞ்சம் ... கொஞ்சமாக வருத்தவே ... கவிதை எழுதுகிறேன் ....!!! நீ புரிய முடியாத புதிர் நான் புரிந்தும் புரியாத காதல் புதிர் ...!!! நீ என்னோடு ... நடந்து வந்த தூரம் ... பாதையில் குழி வரவில்லை .. இதயம் பள்ளமாகவே ... போய் விட்டது ....!!! கே இனியவன் கஸல் கவிதை ;755

பிரிவும் காதல் தான் ....!!!

கல்லை உரசி ... நெருப்பு மூட்டியது அறிவு நீ என் கண்ணை... உரசி காதல் தந்தாய் ... அதுதான் சாம்பலானதோ...? எனக்கும் உனக்கும் .... உறவும் காதல் தான்.... பிரிவும் காதல் தான் ....!!! சீ ....உனக்கு காதலிக்க கூட  .. தெரியாது என்று ... இழிவாக பேச ... வைத்துவிட்டாய் .....!!! கே இனியவன் கஸல் கவிதை ;754

காதலுக்கு மரணம் இல்லை ...

உன்னை நினைத்து அன்பாகத்தான் கவிதை ... எழுதுகிறேன் ... எப்படியோ வலியாக... மாறி விடுகிறது ...!!! காதலுக்கு மரணம் இல்லை ... எப்படி நம் காதல் புதைகுழிக்குள் நடக்கிறது  ....!!! என்னை விட உலகில் ஏழை யாரும் இல்லை இன்ப வரிகளே வருகுதில்லை ......!!! கே இனியவன் கஸல் கவிதை ;753

கருவிழி வெண்மையாகிவிட்டது ...!!!

உன்னை  காதலித்ததில் .... நன்றாக அழுவதற்கு ... கற்றுக்கொண்டேன் ...!!! நீ வார்த்தையால் .. சொன்னதை நான் ... கண்ணீரால் எழுதுகிறேன் ...!!! உனக்காக  காத்திருந்த இரவுகளால்  என் கருவிழி ... வெண்மையாகிவிட்டது ...!!! கே இனியவன் கஸல்  கவிதை ;752

கே இனியவன் கஸல்

காற்றை போல் உனக்கு ... வாசமுமில்லை நிறமுமில்லை ..... காதலில் பயன் படுத்தாதே .....!!! இரவின் கனவும் ... உன் நினைவுகளால் .. கண்ணீர் வரவைகிறது ...!!! நான் உன் கண் இமையை.... ரசிக்கிறேன் நீயோ ... அழித்து விடுகிறாய் ....!!! கே இனியவன் கஸல் கவிதை ;751

எனது 750 வது கஸல் கவிதை

என்  மனதின் பலவீனம்  மறக்கதெரியாது ... உனக்கோ அது பலம் ...!!! முகப்பருவை பார்த்து ... கவலைபடுகிறாய்... அது என் நினைவுகளின் ... அடையாளம் ....!!! காதல்  எனக்கு உள் சுவாசம்  உனக்கு வெளிச்சுவாசம் .. நம் கடந்த காலம் ... புதைகுழிக்குள் ....!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 750 எனது 750 வது கஸல் கவிதை  இத்தனை வரை ரசித்த ரசிக உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 

என் காதல் உன் இதயத்தில் ...!!!

உன் வலியை கிறுக்குகிறேன்... கவிதையாக மாறுகிறது ... நான் கவிஞனாம் ... வலி தெரியாதவர்கள் ...!!! உனக்கு எழுதிய கவிதை ... கடதாசியை குப்பை வண்டி ... ஏற்றி செல்கிறது ... மனம்  தப்பி விட்டது ....!!! தேவாலையத்தில் .... யோசிக்கிறேன் -இறைவா கேளுங்கள் தரப்படும் என்றீர் அவளிடம் கேட்டேன்.... தரவில்லையே ...!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 749

தினமும் ஏமாறுகிறேன்

பட்ட மரத்தில் ஆங்காங்கே  ஒட்டி இருக்கும் பாசி படர் போல் என் காதல் உன் இதயத்தில் ...!!! தினமும் ஏமாறுகிறேன் நினைவிலும் கனவிலும் .. நீ பேசுவாய் என்று ....!!! நீ மௌனமாய் இரு என் ஆயுள் மௌனமாகி ... வருவதை உணர்திரு ....!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 748

வலியை தா ....!!!

இன்பம் துன்பம் ... நடுவில் நம் .. காதல் இரு தலை ... எறும்பு போல் ...!!! என் இதயம் சுமை .. தாங்கி எவ்வளவு ... வேண்டுமென்றாலும் ... வலியை தா ....!!! காதல் ஆடுபுலி .. ஆட்டம் ... நீயா ..? நானா ..? + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 745

பாவம் நம் காதல் ...

பாவம் நம் காதல் ... முகவரி தெரியாமல் ... தெரு தெருவாய் ... அலைகிறது ....!!! இரவு நட்சத்திரம் .... அழகுதான் -பகலில் ..? நான் பகல் நட்சத்திரமாகி ... விட்டேனோ ...? உன்  காதலில் இருந்து  விடுபட விஷத்தை... எடுத்தேன் .... விஷ கோப்பையிலும் .... நீ .....!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 744

உன் இதயம் ....!!!

உன்னை நினைத்து ... மூச்சு விட்டேன் ... நான் இறந்த உணர்வை ... பெற்றேன் ........!!! காதல் கடலை விட ... ஆழமானதாம் - நம்  காதலில் ஆழம் தெரிந்து .. விட்டதே ....!!! உன்னிடம் இருந்து ... கற்றுக்கொண்டேன் ... இதயம் வேண்டும் ... காதலுக்கு  எங்கே...? உன் இதயம் ....!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 743

கண்ணீரால் மிதக்குறது ....!!!

வா காதல் வழியே.... சென்று மரணம் வழியே .. வெளியேறுவோம் ....!!! காதலுக்கும் வீதி  போக்குவரத்து விதிகள் .. வேண்டும் ... நம் காதல் விபத்துக்கு ... உள்ளாகிவிட்டது ....!!! நீ பரிசாக தந்த ... கை குட்டை கண்ணீரால்  மிதக்குறது ....!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 742

கண்ணீராய் ஓடுகிறது ...!!!

என் இதயத்திலிருந்து வெளியேறியபோது நீ அறுத்து விட்டு வந்த ... நரம்பின் அதிர்வுதான் ... என் கவிதைகள் ....!!! இதுவரை  சேர்த்து வைத்த இன்பங்கள் கண்ணீராய் ஓடுகிறது ...!!! காதல் பிரிகின்ற போது ... உயிரும் பிரியும் ... என்பதை நீ ஏன்...? புரியவில்லை ....? + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 741

காதலிக்க தெரியாது ......!!!

என் காதலை என்னிடம் .... ஒப்படைத்த போதுதான் ... புரிந்தது உனக்கு .... காதலிக்க தெரியாது ......!!! எல்லோருக்கும் கண்ணீர் ... கவலையை தரும் ... எனக்கு கவிதை தருகிறது ....!!! என்னையே  உன்னில் பார்க்கும்..... கதிர் வீச்சு கண்ணாடி   நீ ...!!!  + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 740

உணர்ந்து கொண்டேன்...!!!

நிமிட கம்பி போல் .... உன்னை தொடர்கிறேன் ... நீ ஓடாத மணிக்கூடு ... உணர்ந்து கொண்டேன்...!!! என் இதயம் நீர் குமுழி ... விரும்பிய நேரத்தில் ... ஊதி உடைத்து விளையாடு ....!!! நானும் ஏழைதான் ... உன் முன்னால் காதல் .. பிச்சை பாத்திரம் ஏந்தி ... பலகாலம் நிற்கிறேன் ....!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 739