இடுகைகள்

நவம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கஸல் - 910

உன் கனவு வலைக்குள் ... சிக்கி தவிக்கிறேன் ... என்னை மீட்டுவிடு ....!!! பார்க்கும் இடமெல்லாம் .... பாவையாக இருந்தாய் .... எப்படி இப்போ ...? பாவியாக  மாறினாய் ...? என் இதயம் இருண்டு  .... பலகாலம் என்றாலும் .... இதய நரம்பில் உன் கீதம் ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 910

கஸல் - 909

இறைவனை தரிசித்து .... நாட்களாகிவிட்டது .... உன் தரிசனம் .... கிடைத்ததிலிருந்து ....!!! பகலெல்லாம் இரவாகி ... உன்னையே கனவாக்கி .... வாழ்ந்த எனக்கேன் .... கண்ணெல்லாம் .... கண்நீராக்கினாய்...? நீ எனக்காக ... பிறந்த தேவதை .... காதலையும் தருகிறாய் .... கவலையும் தருகிறாய் .... கவிதையும் தருகிறாய் .... வாழ்கை எப்போது தருவாய் ...? உன்னை மறந்து வாழ .... மறந்துபோய் உன் வீட்டுக்கு ... வந்துவிட்டேன் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 909

கஸல் - 908

தென்றல் காற்று .... தோளில் படும்போது .... உன் நினைவுகள் ..... மெல்ல சுடுகிறது ...!!! மூச்சால் அடைத்து ... காதலை பாதுகாத்தேன் ... முள் கம்பியால் .... பாதுகாக்க ஏன்...? வழிவகுத்தாய்....? தவமிருந்து வரம் பெற்றேன் ..... காதலி நீ கிடைத்தாய் ... என்ன சாபமோ ...? நிலைக்கவில்லை ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 908

கஸல் - 907

என்னை கொடுத்து ... உன்னை பெறுவது ... காதல் .....!!! மலர் செடியில் .... இருக்கும் போதுஅழகு ... நீ என்னோடு காதலில் .... இருந்தாலே அழகு ....!!! காதல் கண்ணோடு.... விளையாடி ... காற்றோடு கலந்து  மூச்சோடு முடிகிறது ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 907

கே இனியவன் - கஸல் 105

தாமரை மலர்வதை .. பார் -மலருக்குள் மலர்வு ... ஒருபகுதி மலராததுபோல் ... நீயும் மௌனமாக இருக்கிறாய் ..!!! உன் காதல் சுமையால் நான் வண்டிக்குள் சிக்கிய தவளையானேன் ..!!! நீ வெளியில் வரும்போது மட்டும் காதல் உடை போட்டுக்கொண்டு வருகிறாய் ....!!! + கே இனியவன் - கஸல் 105

கஸல் - 906

உன்னோடு  வாழ ஆசைப்பட்டேன் .... உன்னோடுடனா...? வாழப்போகிறேன் .... என்றாகிவிட்டாயே ...!!! உன்னை காதலித்தேன் .... காதலோடு இருக்கிறேன் .... காதலியை காணவில்லை ....!!! மறதியை மறந்திடலாம் .... மறந்துகூட உன்னை .... மறக்க முடியவில்லை ....!!!  + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 906

கவிப்புயல் இனியவன் - கஸல் - 905

காதலோடு வாழ்ந்த நீ  இறக்கிவைத்துவிட்டு .... என்னை சுமைதாங்கி ... ஆக்கிவிட்டாய் ....!!! எதுவுமே நிஜமில்லை  காதல் மட்டுமே நிஜம் ....!!! இதுவரை .... என் எழுத்து கருவி .... என் துன்பத்தையே .... எழுதிகொண்டு இருக்கிறது .... கொஞ்சம் உன்னை பற்றி... எழுதபோகிறேன் ... தாங்கிகொள் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 905

கவிப்புயல் இனியவன் - கஸல் - 904

எரிந்து கொண்டிருக்கும்  காதலை அணைத்துவிடு ... என்னை நீ அணைத்து....!!! நீ ..... ஒளி காத்திருக்கிறேன் ... நீ உதிக்கும்வரை ..... நான் உன்னில் மறையும் ... வரை காத்திருப்பேன் ...!!! இந்த  உலகம் அழிய வேண்டும் .... புதிய உலகில் நாம் தான் .... முதல் காதலர் என்ற .... வரலாறு படைக்கவேண்டும் ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 904

கவிப்புயல் இனியவன் - கஸல் - 903

புவியீர்ப்பால் .... பொருட்கள் கீழே வரும் .... கண் ஈர்ப்பால் .... காதல் உள்ளே வரும் ...!!! என்னை கவிதை .... எழுத வைத்தவளே .... கண்ணீர் அஞ்சலி .... எழுத வைத்துவிடாதே ....!!! இதயமே .... கவனமாய் இரு .... என்னை பார்த்து .... சிரிக்கபோகிறாள்....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 903

கவிப்புயல் இனியவன் - கஸல் - 902

நீயும் நானும் நிம்மதியாய் .... இருக்க ஒரே ஒரு வழி .... நீ என்னை காதலிப்பதே ....!!! நீ  எதற்காக தூண்டில் ... போட்டாய் - நான்  எதற்காக துடிக்கிறேன் ...? ஆட்டிப்படைகிறது காதல் ....!!! உனக்கு என் கவிதை .... பொழுதுபோக்கு - எனக்கு .... வாழ்கை பொழுது....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 902

கஸல் - 901

நான் சில காலம்  முள் மெத்தையில்..... தூங்கபோகிறேன் ....  காதலிக்கபோகிறேன்....!!! ஒவ்வொரு நொடியும் ... மூச்சு விடும் போது .... இதயம் சுடுகிறது .... உள்ளிருப்பது -நீ ,,,,!!! வாழ்வதற்காக காதலா ..? சாவதற்காக காதலா ...? நீ எதை தந்தாலும் .... காதலோடு ஏற்பேன் ....!!!  + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 901

கவிப்புயல் இனியவன் - கஸல் - 900

உன்னை .... காதலித்ததால் .... எனக்கு விஞ்சியது .... ஒன்றே ஒன்றுதான் .... கவிதை ....!!! பூக்களால் கவிதை .... எழுதுகிறேன் .... சோகத்துடன் வாசிக்காதே .... பூக்கள் அழுதுவிடும் ....!!! நீ  எதை பேசினாலும் .... அதில் அர்த்தமில்லை .... அர்த்தமாக்கவே .... கவிதை எழுதுகிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 900

கவிப்புயல் இனியவன்-கஸல் - 899

தத்தளிக்கிறேன் .... என்னை காதலில் இருந்து ... காப்பாற்று ....!!! எனக்காக  வாழ ஆசைபடுகிறேன் .... என்னை விட்டுவிடு .....!!! நான் சிறுகதை .... எழுதுகிறேன் -நீ  தொடர்கதையாய் .... வர ஆசைபடுகிறாய்....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 899

கஸல் - 898

நீ பனிகட்டி ... என்னை உறைய ... வைத்துவிட்டாய் ......!!! நீ எப்போது என்னிடம் வந்தாயோ .. அப்போதே  இறந்துவிட்டேன் ...!!! உன்னோடு இருக்கையில் ... இரவெல்லாம் பகல் .... இப்போ பகல் எல்லாம் .... இரவு விடியமாட்டேன் ... என்கிறது இரவு ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 898

கஸல் - 897

நீ காற்று .... எப்படி வருகிறாயோ ...? ஆனால் வருகிறாய் .... நீ இல்லாமல் எப்படி ....? வாழ்வது ...? நான் கண்ணீர் விட்டதை .... புற்கள் பனித்துளியாய் .... எடுத்துவிட்டன .....!!! நான் மூச்சு ... விட்டதை பஞ்சுகள் ... உல்லாசமாய் எடுத்து ... மகிழ்கின்றன ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 897

கஸல் - 896

நீ தீபமாய் இரு .... அப்போதும் நான் .... விட்டில் பூச்சியால் .... உன்னால் இருப்பேன் ...!!! என்  கண்ணீர்த்துளிகள் ... வைரக்கல் போல் தெரிகிறதா ...? அப்போ உனக்காய் .... நான் அழத்தயார்....!!! நீ  கற்பனையாய் இரு .... அப்போதுதான் எனக்கு .... கவிதை வரும் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 896

கவிப்புயல் இனியவன்-கஸல் - 895

வா .... காற்றோடு கலந்து .... விண்ணோடு மறைந்து ... நிலவோடு காதல் செய்வோம் ...!!! காதல் உன்னை கண்டால் ... கண் மூடிகொள்கிறது... உன்னை பிடிகவில்லையாம் ...!! நீ காற்று ... எப்படி வீசுவாய்....? பயமாக இருக்கிறது ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 895

கவிப்புயல் இனியவன்-கஸல் - 894

நீ நிழல் ... என்னை விட்டு ... விலகுவதுமில்லை ..... எப்போதும் என்னோடு ... இருப்பதுமில்லை ...!!! கட்டை விரலை ... இழந்த ஏகலைவன் போல் ... காதல்  அம்பிருந்தும் ... எய்ய முடியவில்லை ...!!! நீ என்னில் இருக்கும் ... நொடிகளில் நான் இறக்கிறேன்... நீ என்னில் இல்லாதபோது ... உயிர்க்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 894

கவிப்புயல் இனியவன்-கஸல் - 893

காதலுக்கு உன் கண் தூண்டில் .... என் இதயம் அகப்பட்ட ... மீன் ....!!! உனக்கு புரியாது .... என் இதயம் உன்னைவிட ... வலிமையானது .... இத்தனை வலிகளை.. சுமக்கிறது ....!!! உன் காதல் விசித்திரமானது .... தண்ணீராகவும் இருகிறாய் ... வெநநீராகவும்  இருகிறாய் ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 893

கவிப்புயல் இனியவன்-கஸல் - 892

என்  காதல் சமாதியாகிவிட்டது.... உன் நினைவுகள் கல்லறை ... சுவராய் நிறுவியிருக்கிறேன் ...!!! காதல் தோற்காது .... என்னை கவிஞனாக்கியதே ... வரிகளில் காதல் ... வாழ்ந்துகொண்டே இருக்கிறது ....!!! நீ என் காதலை .... நிராகரித்ததிலிருந்து.... என் வீட்டு மலர்கள் .... கருகிகொண்டு வருகின்றன ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 892

கவிப்புயல் இனியவன்-கஸல் - 891

என்னமோ புரியல்ல .... உன்னை நினைக்கும்போது ... கண்ணீருடன் கவிதை ... அருவியாய் வருகிறது ....!!! உனக்கு காதல் குப்பை ... எனக்கு காதல் குண்டுமணி .... தண்டவாளமாய் ...... பயணிக்கிறோம் ....!!! உன்னில் ஒரு திறமை இருக்கிறது ..... நீ சிரித்துகொண்டே ... என்னை அழவைப்பதில் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 891

கஸல் - 890

நான்  கரையோர நண்டு ..... நீ எழுந்து விழும் அலை .... மீண்டும் உள்ளே இழு ...!!! காதல் படகில் தனியே .... பயணம் செய்து என்ன ...? சாதிக்கபோகிறாய்....? பட்டபகலில் .... நிலாபாடல் கேட்கிறாய் .... நடு இரவில் சூரிய உதயம் .... பார்க்கணும் என்கிறாய் ...? + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 890

கஸல் - 889

துடுப்பு  இழந்து தவிக்கிறேன் .... என்னை காப்பாற்று ....!!! காதல் கீதம் பாட .... சொல்லும் நீயே .... காதலை தர மறுக்கிறாய் ....!!! வலிகளால் வலை பின்னி .... வழிதெரியாமல் தடுமாறும் ... காதல் மன்னன் நான் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 889

கஸல் - 888

காதலுக்கு தனி கல்லறை .... அதில் முதல் அங்கத்தவன் .... நான் தான் நீ அருகில் .... வேண்டாம் ....!!! எதற்காக தூண்டிலை .... போட்டு காத்திருகிறாய்...? நான் ஏற்கனவே இறந்த மீன் ....!!! எப்போதும் என் முகவரி  நீ தான் - தயங்காதே  அப்போதே என் முகவரி  தொலைந்து விட்டது .....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 888

கஸல் - 887

உன்னை காதலித்த ... இதயத்தை பார்த்து .... கவலை படுகிறேன் .... உன் காதல் புரியாமல் .... காதலித்து விட்டதே ....!!! காதல்  நிறைகுடத்தை .... குறைகுடமாக்கும் .... எனக்கு சரிப்பட்டது ....!!! உன் கண் தான் என் .... கவிதை எழுத்து கருவி .... என்னை நன்றாக பார் .... கவிதை அருவியாய் வரும் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 887

கஸல் - 886

நான் வெறும் நூல் .... நீ தான் காற்றாடி .... அசையும் இடமெல்லாம் .... என்னை இழப்பேன் ....!!! இதயத்தில் முள் தோட்டம் ..... விளைந்தது காதல் .... வந்தது முள் வலி ....!!! கஸ்ரப்பட்டு காதல் மழை .... பெய்கிறேன் -நீயோ .... குடைபிடித்து தடுக்கிறாய்...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 886

கஸல் - 885

நானும் பனித்துளியும் .... ஒன்றுதான் இரவில் .... அழுதுகொண்டிருப்பதில் ....!!! நீ போவது வலியில்லை.... போய் என்ன .... செய்யபோகிறாய் .... என்பதுதான் வலி ....!!! எனக்கு உனக்கும் அகண்ட இடைவெளி ... காதலால் தோன்றியது ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 885

கஸல் - 884

உன்னை பார்த்ததை விட ... உன்னை பற்றி கேட்டதே .... அதிகம் ..... என் காதல் காதால் .... தோன்றியது ....!!! எனக்கு உயிர் இருக்கும் .... வரைக்கும் நீ இருப்பாய் .... நீ போனாலும் காதல் .... இருக்கும் .....!!! உன் காதலின் ஆழத்தை .... திருமண அழைப்பிதலில் .... அழகாக போட்டிருந்தாய் ..... பொருத்தமான் பெயருடன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 884

கஸல் - 883

நீ எப்படி வந்தாய் ....? புரியவில்லை எனக்கு .... எப்படி சென்றாய் .... புரிந்துகொண்டேன் .... கண்ணீர் வந்தபோது ....!!! காதலுக்கு முன் .... உறவுகளுக்கு .... ரோஜாவோடு ராஜா .... காதலின் பின் .... உறவுகளுக்கு .... முள்ளோடு ராஜா ....!!! காதலை நீ சொல் .... காதலிப்பது எப்படி ...? நான் சொல்கிறேன் .... மறக்காமல் - பிரிவது .... எப்படி என்றும் சொல் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 883

கஸல் - 882

எனக்கு நரகம் வராது ... காதல் வந்துவிட்டதே .... எனக்கு சொர்க்கமும் ... வராது நீ  இல்லையே....!!! என் புகைபடத்தை .... தந்துவிட்டாய் ..... இதயம் புகைக்கவில்லை ....!!! மனிதனின் தோற்றமும் .... முடிவும் கண்ணீருடன் .... தொடங்க காரணமே .... காதல் தான் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 882

கஸல் - 881

உன்னை காதலிப்பதும் .... என்னை காயப்படுத்துவதும் .... ஒன்றுதான் .....!!! என் நினைவுகள் ... உனக்கு தூசிபோல் ..... நான் அலைந்துகொண்டு .... இருக்கிறேன் ....!!! ஒன்றை நினைவில் வை .... உன்னை காதலிப்பதால் .... என் உயிர் துடிக்கிறது ... நீ காயப்படுத்தினாலும் இதயம் தாங்குகிறது ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 881