இடுகைகள்

ஏப்ரல், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முள்ளில் மலர்ந்த பூக்கள் 10

உன் சிரிப்பு ... மற்றவர்களுக்கு ... சிதறும் சில்லறை ... எனக்கு நெற்றி பொட்டுக்காசு.....!!! காதல் இழப்பை கொண்டுவரும் .... உன்னையே இழக்கவைக்கும் ... என்று நினைக்கவில்லை ....!!! என்றோ ... ஒருநாள் நீ என்னை .... திரும்பி பார்ப்பாய் .... அப்போது நான் .... மாலையுடன் இருப்பேன் ... உயிரோடு இருக்கமாட்டேன் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K  A 0AO 1010

முள்ளில் மலர்ந்த பூக்கள் 09

காதலுக்கு கண் ... இல்லை என்பார்கள் .... உனக்கு இதயமே ... இல்லையே....!!! என்னை விட்டு போ .... கவலையில்லை ... என்னையும் கூட்டி ... செல்வதில் உனக்கென்ன ... கவலை ....? நீ என்னருகில் இல்லாத .... போதெலாம் -நான் ஓடாத மணிக்கூடு ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K A 00 I 1009

- முள்ளில் மலர்ந்த பூக்கள் 08

உன் நினைவு வலையால் ... சிக்கி தவிக்கும் நான் ... பூச்சி -நீ சிலந்தி கௌவ்வி எடுத்துவிடு ....!!! கடலோர பாதம் ... கரைந்ததுபோல் ... நம் காதலும் ... கரைந்து விட்டது ...!!! நீ எனக்கு பாசக்கயிறா ....? பாசாங்குவேஷக்கயிறா....? ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K A 00 H 1008

முள்ளில் மலர்ந்த பூக்கள் 07

குங்குமம் போல் .... சிவந்த முகத்துடன் .... சிரித்து பேசியவள் .... குங்கும பொட்டோடு ... குனிந்து நிற்கிறாள் ....!!! கொன்றால் பாவம் .... அப்போ என்னை ... காதலால் கொன்றவள் ... நீயும் பாவி .....!!! உன் .. காதல் தோட்டத்தில் ... என்னை சருகாக .... ஏற்றுக்கொள் .... உரமாக என் காதலை .... வளர்க்கிறேன் ....!!!  

முள்ளில் மலர்ந்த பூக்கள் 06

ஆயிரம் முறை .... திரும்பி பார்த்தவள் ... இப்போ .... குனிந்தபடி செல்கிறாள்....!!! பூவை கொடுத்து ... பூவாக வர்ணித்து .... பூவையை காதலித்தேன் .... உதிர்ந்து கொண்டிருக்கிறாள் ....!!! என் கவிதையை .... எல்லோரும் விரும்பவைத்த .... உன் வலிகளுக்கு நன்றி ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K A 00 F

முள்ளில் மலர்ந்த பூக்கள் 05

நீ ரெம்ப அழகு .... காதலையும்  அழகாக .... மாற்றிவிடு ....!!! இறைவன் செய்த .... மகா தவறு .... எனக்கு காதலையும் ... உனக்கு அழகையும் .... கொடுத்தது ....!!! ஆணை தும்பிக்கையால் .... தலையில் மண் .... வாரிப்போட்டதுபோல் ... நான் உன் மேல் வைத்த ... நம்பிக்கையால் காதலித்து ... அவஸ்தை படுகிறேன் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K  A 00 E

முள்ளில் மலர்ந்த பூக்கள் 04

என்னவளை ... அழகாக படைத்த .... இறைவன் .... காதல் இல்லாமல் .... படைத்துவிட்டான் ....!!! என் ... கவிதைகள் ... கள்ளியில் உள்ள முற்கள் .... நீ காதலித்தால் ... முற்கள் பூவாகும் ....!!! காதல் இல்லாமல் .... யாரும் இருக்க முடியாது .... பிரம்மனின் படைப்பு ... பிழைக்காக இருக்காது ...!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K  A 00 D

முள்ளில் மலர்ந்த பூக்கள் 03

நீ தோளில் ... சாய்ந்த போது.... இதயம் சுமையை .... இறக்கியது ...!!! ஒற்றை சிறகோடு ... பறக்க சொல்கிறாய் ... உனக்காக அதையும் ... முயற்சிக்கிறேன் .....!!! நம் காதல் .... கண்பட்டுவிட்டது .... சிதறு தேங்காய் போல் ... உடைந்து விட்டது ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K A 00 C

முள்ளில் மலர்ந்த பூக்கள் 02

உன் எடையை ... காட்டிலும் என் எடை ... அதிகம் ... உன் வலியையும்.... சுமப்பதால் .....!!! காதல் ... தோல்வியே இல்லை .... நினைவுகளோடு .... வாழ்பவனுக்கு .....!!! நான் கிழிந்த காற்றாடியல்ல ... விழுந்த காற்றாடி ..... உன் மூச்சுக்காற்று .... போதும் நான் பறப்பதற்கு .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K  A 00 B

முள்ளில் மலர்ந்த பூக்கள்

எல்லாமே ... கடந்துபோகும் .... நீ மட்டும் ... விதிவிலக்கா ....? ஆயிரம் காலத்து .... பயிர் -திருமணம் .... காதலின் ஆயிரம் .... நினைவுகளை .... கொன்று நிறைவேறும் ...!!! வாழ்க்கை ஒரு .... நாடக மேடை .... காதலர் .... விட்டில் பூச்சிகள் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K  A 00 A 

கே இனியவனின் 1000 வது கஸல்

நீ சொன்ன ஒரு வார்த்தை....  ஆயிரம் கஸல் கவிதையை ... தோற்றிவிட்டது ....!!! சுதந்திர பறவைகளை ... திறந்த சிறைச்சாலைக்குள் .... அடைத்துவிடும் .... காதல் ......!!! இதயங்களை .... இணைக்கும் .... சங்கிலி -காதல் ... துருப்பிடிக்காமல் .... பார்த்துக்கொள் .....!!! முள் மேல் பூ அழகானது ..... என் இதயத்தில் பூத்த .... முள் பூ நீ ................!!!! நீ காதலோடு...... விளையாட வில்லை .... என் மரணத்தோடு ..... விளையாடுகிறாய் ......!!! ^ இது எனது 1000 கஸல் இத்தனை காலமும் ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் உளமான நன்றி ^ அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன் ^ " முள்ளில் மலரும் பூக்கள் "         கஸல் கவிதை

கவிப்புயல் இனியவன் கஸல் - 999

மோகத்தால் ... வரும் சோகத்தை .... விட்டில் பூச்சியிடம் ... கற்று கொண்டேன்....!!! என் இதயம் ... எப்போதெல்லாம் .... கலங்குகிறதோ.... அப்போதெலாம் .... கவிதையாய் வருகிறாய் ...!!! என்  ஒவ்வொரு வலியும்.... உனக்கு எழுதும் .... காதல் கவிதை ....!!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 999

கவிப்புயல் இனியவன் கஸல் - 998

இன்னும் காதலை -தா என்று கேட்கவில்லை ... வலியை தா இன்னும் ... உன்னை ஆழமாய் ... காதல் செய்ய ...!!! மறந்துபோய் .... நினைத்துவிட்டேன் .... உன்னை மறந்துவிடு ... என்று நீ சொல்லியதையும் ... மறந்து ....!!! உனக்கும் எனக்கும் .... நிறைய ஒற்றுமை .... காதல் தான் நமக்குள் ... வேறுபாடு ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 998

கவிப்புயல் இனியவன் கஸல் - 997

காதல் கண்ணாடியை .... உடைத்துவிட்டாய் ... உடைந்த துண்டுகளில் ... உன் முகம் ....!!! நான் உன்ன ஞாபகம் ... அதுதான் அடிக்கடி ... என்னை மறக்கிறாய் ...!!! தேன் வேண்டுமென்றால் .... தேனியிடம் வலியை.... பெற வேண்டும் ... காதல் வேண்டுமென்றால் ... உன் வலி இருக்கும் ...!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 997

கவிப்புயல் இனியவன் கஸல் - 996

நம் காதல் அழகு ... நிலா போல் தூரத்தில் .... இருந்து பார்க்கும்போது ....!!! குருவி தன் குஞ்சை .... பொத்தி பொத்தி .... வளர்த்தாலும் -ஒருநாள் .... உன்னைப்போல் விட்டு .... பறக்கத்தான் போகிறது....!!! காதலில் நீ காண்டாவன வெயில் .... இடை இடையே ... சிறு மழை போல் .... என் நினைவுகள் உனக்கு ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 996

கவிப்புயல் இனியவன் கஸல் - 995

உன்  பார்வையை விட ... நெருப்பொன்றும் .... கொடுமையல்ல ...!!! நிலவைப்போல் ... நீ அழகுதான் ... அடிக்கடி முகிலால்... மறைகிறாயே....!!! என்  கண்ணீர்தான் ... உன் ... கல்யாணத்தில் ... வைர அட்டியல் ...!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 995

கவிப்புயல் இனியவன் கஸல் - 994

நீ காதல் கவரி மான் ... நான் கானல் நீர்  ...!!! நீ சொன்ன ... நல்ல வார்த்தை ... காதலிக்கிறேன் ... என்பது மட்டுமே ....!!! காதல் செய்யும் ஒவ்வொரு இதயமும் ... சுமைதாங்கி ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 994

கவிப்புயல் இனியவன் கஸல் - 993

நான் ஏக்கத்தோடு பார்க்கிறேன் .... நீயோ .. ஏமாற்றவே பார்க்கிறாய்...!!! காதல் திருமணத்தில் முடிந்தால் .... அழகுதான் .... உன் திருமணத்தோடு  ..... முடிந்துவிட்டது ....!!! நீ என்னை விட்டு போகும் ... நேரமெல்லாம் .... உன்னை வரவழைக்கவே ... கவிதை எழுதுகிறேன் ...!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 993

கவிப்புயல் இனியவன் கஸல் - 992

நீ என்னை விட்டு ... பிரிந்துவிட்டாய் ... ஏன்...? நினைவுகளை ... தந்து கொல்கிறாய் ...? என்னோடு ... அருகில் இருந்த ... என்னவளை .... காணவில்லை ....!!! காதல் விசித்திரமானது ... கண்ணீரால் மட்டுமே .... வளரும் பயிர் ...!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 992

கவிப்புயல் இனியவன் கஸல் - 991

உன்னை கண்டால் .... என் கண்கள் தானாக .... மூடுகின்றன ....!!! நான் வெறும் கப்பல் .... துடுப்பும் -நீ பாய்மரமும் நீ தள்ளாடும் கப்பலை ... நிறுத்து ...!!! காதல் மட்டும்தான் ... கண்ணீரில் ... பூக்கும் பூ ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 991