இடுகைகள்

ஆகஸ்ட், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முள்ளில் மலர்ந்த பூக்கள் 42

மின்னலை பார்த்தால் ..... கண் கெட்டுவிடும் .... என்  கண்ணில் நீ .... பட்டாய்     நான் ....... பட்டுவிட்டேன் ....!!! மதுவை விட போதை நீ ..... மது உயிரை குடிக்கும் .... நீயோ............ உயிரை வதைக்கிறாய் .....!!! காதலை ..... ஆரம்பித்ததும் நீ .... முடித்ததும் நீ ...... நான் என்ன பாவம் .... செய்தேன் ......? & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1042

முள்ளில் மலர்ந்த பூக்கள் 41

காதல் ஒரு .... மந்திர உலகம் ..... சிரிப்பில் தோன்றி .... கண்ணீரில் முடியும் ....!!! பேசாமல் இருந்தபோது .... காதல் இனித்தது .... பேசினாய் - காதல் ..... வெறுத்து விட்டது ......!!! உன்னை கண்ணில் ..... தேடுகிறேன் .... நீ கண்ணீரில் வந்து ..... போகிறாய் ......!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1041

முள்ளில் மலர்ந்த பூக்கள் 1040

கடல் ...... கரையில் இருந்து .... அக்கரையை பார்க்கும் .... போது நிலமும் வானமும் .... முத்தமிடும் ..... நம் காதலை போலவே ..... எல்லாம் மாயை ......!!! பூவில் ..... இருக்கும் தேனும் ..... பூவின் கீழ் இருக்கும் .... முள்ளும் நீதான் ..... எப்படி போடுகிறாய் .... வேஷம் ......? கடல் கரையில் .... தோன்றிய நம் காதல் .... அலைபோல் வந்து வந்து .... போகிறது .......!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1040

முள்ளில் மலர்ந்த பூக்கள் 39

சிரிப்பதற்கும் .... அழுவதற்கும் ... சிறந்த பயிற்சி .... காதல் ................!!! துணிந்து .... செல் வெற்றி .... என்கிறது உலகம் .... காதலை தூக்கி .... எறிகிறது...........!!! நான் ... முறிந்து விழுந்த மரத்தில் ... ஈரம் உள்ளவரை ..... துளிர் விடுவேன் .....!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1039