இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீ தந்த காதல்......!

நீ.... ஆயிரம் வலியை..... தந்தாலும்....... காதலை தந்தமைக்கு..... நன்றி......! பயமின்றி என்...... இதயத்திலிருந்து....... ஓடி விளையாடு....... தள்ளிவிடமாட்டேன்.....! இப்போதும்...... இதயம் துடிக்கிறது..... ஒரே ஒரு காரணம்...... நீ தந்த காதல்......! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

துடிக்கும் இதயம்.....

என் கவிதை...... உனக்கு வரிகள்..... எனக்கு வலிகள்....! துடிக்கும் இதயம்..... எல்லோருக்கும்..... இருக்கும்......... வலிக்கும் இதயம்..... என்னிடமே........ இருக்கிறது........! காதல் கண்ணில்.... ஆரம்பித்து...... கல்லறையில்......... முடிகிறது..........! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

என் இதயத்தைகிள்ளி

ஈரகுணத்தை..... என்னில் காட்டு..... தலையணையில்..... காட்டாதே......! காதல் ....... ஒரு சூதாட்டம்....... தலையும் விழும்...... பூவும் விழும்.......! என் இதயத்தை.... கிள்ளி வெளியே..... எடுத்துப்பார் -உன்  முகதோற்றத்தில்.... இருக்கும்.....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

காதலே புகைந்துவிட்டதோ...?

காதல் ஒரு பூச்சியம்..... ஏக்கத்தோடு...... ஆரம்பித்து............ ஏமாற்றத்தோடு...... முடிகிறது..........! அன்பே வா....... இன்பவலியோடு..... இவ் உலகை விட்டு..... பறந்து விடுவோம்.....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ---------------------- காதலிலும்..... கண்ணாம்பூச்சி விளையாட கற்று..... தந்தவள் -நீ.....! இதயத்திலிருந்து.... கவிதை வரும்..... இதயமே கலங்கினால்..... கவிதை எப்படி வரும்...? ஜோடியாக புகைப்படம்.... எடுத்தோம் ...... அதனால் தான்..... காதலே புகைந்துவிட்டதோ...? @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை 13

நீண்ட காலத்துக்கு...... பின் சந்தித்ததால்..... காதலர் நாம்....... நண்பரானோம்.........! இருபத்து நான்கு...... மணி நேரமும் இரவாக..... இருப்பது எனக்கு....... நீ ..................... விலக்கியபோது....! தயவு செய்து என்னை..... மறந்து விடு...... உன் நினைவுகள் இல்லாத...... உலகில் வாழ்கிறேன்.....! & காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை 13 கவிப்புயல் இனியவன்

காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை 12

உன்னை ........ ஒளிரவிட்டு...... என்னை கருக்கும்...... திரி நான்........! காதலில்  தோற்றவனுக்கு........ கண்ணீர்தான் வரும்.... உன்னால் எனக்கு..... கவிதை வருகிறது.....! உனக்கு ........ பிடிக்காத சொல்...... எனக்கு..... எப்போதும் பிடித்த........ சொல் - காதல்....! & காதலுடன் பேசுகிறேன்  கஸல் கவிதை 12 கவிப்புயல் இனியவன்

காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை 11

காணாமல் போனால் ...... கண்டுபிடித்துவிடலாம்...... உனக்குள் காணாமல்...... போன என்னை எப்படி..... கண்டுபிடிப்பாய்.....? காதலை மறைக்க...... முடியாது....... கழுத்தில் உள்ள...... தாலியை சேலையால்.... மறைப்பது போல்....! நீ பலாப்பழம் போல்..... இதயத்தில் அன்பை...... வைத்துக்கொண்டு...... வார்த்தையை முள்ளாய்.... கொட்டுகிறாய்.....! & காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை 11 கவிப்புயல் இனியவன் 

உன் தாலி........!

பாவம் என் காதல்.... புண்ணியமாய்..... கிடைத்த உன்னை ....... இழந்துவிட்டது.....! என்னை ஏமாற்றிய....... அடையாள சின்னம்...... உன் தாலி........! எதுவுமே ....... நிலையில்லை..... அனுபவத்தில் உணர்த்தினாய்......... திருமணத்தில்...........! & காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை 10 கவிப்புயல் இனியவன்

காதலுடன் பேசுகிறேன் 02

இலந்தை முள் மீது ..... தூங்குவதும்..... உன்னை நினைவோடு ..... தூங்குவதும்..... ஒன்றுதான் ..........! உன் ஞாபகங்களை ..... சித்திரமாக்குகிறேன் ....... நீயோ  கிறுக்கும் ...... கிறுக்கன் என்கிறாய் .....! கண்ணீரோடு ....... அலைந்தால் தான் ...... உன் காதலை பெற முடிகிறது .........! & காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் ---------- காகித பூவாக இரு ...... அப்போதுதான் ..... வாட  மாட்டாய் .......! உன் ...... கண்ணை விட ...... என் ....... கண்ணீர் அழகானது .....! என் இதயம் ..... மட்டும் தான் ...... இருவருக்காக துடிக்கும் ..... உன்னிடம் இதயம் ..... இல்லாததால் ..........! & காதலுடன் பேசுகிறேன்  கஸல் கவிதை 09 கவிப்புயல் இனியவன்

இறை காதல் கஸல்கள் 05

நீந்த துடிக்கும்  மீன் குஞ்சு போல் .... இறை ஆசை .....(+) வறண்டிருக்கும்  குளம் போல் ...... மனம் ......(-) & ஆன்மீக கஸல்  கவிப்புயல் இனியவன்  ------ ஐம்புலனை .... அடக்கும் ஆமையின் ... ஆற்றல் எனக்கில்லை ...(-) நான் ..... ஆறறிவு மனிதன் (+) & ஆன்மீக கஸல்  கவிப்புயல் இனியவன் ------ மனதில் இருள் .... கருவறையில் ..... இறைவனுக்கு .... காட்டும் ஒளியில் .... மனம் குளிர்ந்தேன் ....! & ஆன்மீக கஸல்  கவிப்புயல் இனியவன் ----- இறைவா..... இரண்டு மனம்  வேண்டும்..........! உன்மீது பற்றை..... அதிகரிக்க வேண்டும்.... என்மீது பற்றை..... குறைக்கவேண்டும்....! & ஆன்மீக கஸல்  கவிப்புயல் இனியவன் -------- செவ்வாய்....... கிரகத்துக்கு...... போக துடிக்கும்....... மனம்......... செவ்வாய் கிரகதோஷ..... பெண்ணோடு வாழ...... மறுக்கிறது.......! & ஆன்மீக கஸல்  கவிப்புயல் இனியவன்

சமுதாய கஸல் கவிதைகள் - 11

பல கோடி தர்மம்..... தொழிலாளிகள் .... சம்பளம் பாக்கி...... ஊரில் தர்மவனான்......! வர்த்தக நிலையத்தின்..... வாணிப பெயர்..... அரிச்சந்திரன் வாணிபம்....! உயிர் கொலை பாவம்..... கருவாட்டுக்கடையில்...... சுவாமிப்படம்.....! & சமுதாய கஸல் கவிதைகள் - 11 கவிப்புயல் இனியவன்  

சமுதாய கஸல் கவிதை

சமுதாய கஸல் கவிதை --------------------------------- விவசாயி வீட்டில்..... அடுப்பு எரியவில்லை வயிறு நன்றாகவே..... எரிகிறது..........! நிலம் .... சேறானால் சோறு....... வறண்டால்....... பட்டினி...............! விவசாயிகளுக்கு..... பருவ மழை - பன்னீர் பருவம் தப்பிய மழை.... கண்ணீர்..........! & சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்

சமுதாய கஸல் கவிதை

எங்களை சுத்தமாக்கி..... தங்களை அசுத்தப்படுத்தும்..... துப்பரவு தொழிலாளர்கள்.....! என் வீடு சுத்தம் குப்பையை தெருவில் வீசி விட்டேன்....! காலையில் தெரு கூட்டப்படும்..... மதியம் குப்பைவண்டி.... தெருவை குப்பையாக்கும்...! & சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்

கஸலால் காதலுடன் பேசுகிறேன் -07

இதயத்தில் இருந்து..... எதற்காக முள் வேலி..... போடுகிறாய்.....? தீ மிதிப்பு...... இறைவனுக்காக....... செய்யவேண்டும்...... காதலுக்காக ..... செய்பவன் - நான் ....! மயானத்தின்....... பாதையால் சென்றால்..... உன்னை அடைய முடியும்....! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் -07 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கஸலால் காதலுடன் பேசுகிறேன் -06

நீ இதயத்தில் இருந்த ..... காலத்தில்  என்.... தலையெழுத்து..... மாறிவிட்டது.......! யார் சொன்னது.....? கண்ணீர் வருகிறது..... என்று....... இதயத்தில் இருந்த-நீ வெளியேறுகிறாய்.....! என் ஆயுள்ரேகையை..... ஆண்டவன் எழுதவில்லை..... காதல் எழுதிவிட்டது.....! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் -06 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என் காதலைபோல்........!

பிரபஞ்சத்தின் உச்சம்..... இருண்டிருக்கும் என்கிறார்கள்.... என் காதலைபோல்........! உன்னை காதலித்த நாள் முதல்...... என் ஆயுள் ரேகை..... தேய்கிறது..................! நீ எங்கே கனவில்....... வரப்போகிறாய்........ நான் தூங்கினால் தானே.....! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என் மனதை அழுக்காக்கி......

இறைவனை உணரவும்..... காதலில் வெல்லவும்...... காத்திருப்பு அவசியம்.......! உன் அழகுதான்..... என் மனதை அழுக்காக்கி...... அலையவைக்கிறது..............! காதலிக்க தயாராகுபவர்...... இதயத்தை கல்லாக்கவும்..... கற்றுக்கொள்ள வேண்டும்......! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 

மறுபடியும்நினைத்து விட்டேன்........!

இறைவா..... நீயும் அவளைபோல்..... கனவில் மட்டும்..... வந்து போகிறாய்......! என்  கவிதைகள்..... சிவப்பு நிறமாய்..... இருக்க காரணம் நீ.....! மறதியின் இடத்துக்கு..... மறந்து போய் போய்விட்டேன் மறந்து போய் உன்னை..... மறுபடியும்நினைத்து விட்டேன்........! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கஸலால் காதலுடன் பேசுகிறேன்

கடவுளும் காதலும்.... ஒன்றுதான் ...... இரண்டையும் உணரலாம்.... அடைய முடியாது........! என் இறப்புக்கு முன்..... இறப்பிடத்தை....... காதலால் காட்டுகிறாய்.......! உன்னை நினைத்து........ பூக்களை பார்க்கிறேன்....... பூக்களே வாடி விழுகிறது....! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர்                இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மொத்த கஸல் கவிதைகள் 1200

கவிதையின்  ......... ஒவ்வொரு எழுத்தும் நீ எழுத்துப் பிழை ......... ஆகிவிடாதே...! காதல் கண்ணாய்..... இருக்கவேண்டும்..... கண்ணீராய்...... கரைந்தோடுகிறாய்...? காதல் நினைவுகள்..... நட்சதிரங்கள் போல்.... மின்னவேண்டும்..... பட்டப்பகலில் மின்னுகிறாய்...? & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் - 16 ------------ என் கவிதைகள் கோடைகாலத்தில்..... பொழியும் மழை..... மெல்ல இதயத்தை..... நனைக்கிறாய்.....! அழுகை பார்ப்பவர்களுக்கு...... துன்பம்.... கண்களுக்கு இன்பம்.... இதயத்துக்கு சுகம்.....! என் ஒவ்வொரு வலியும்.... உனக்கு எழுதும் கவிதை.... தயவு செய்து அழுதுவிடாதே.... தாங்க மாட்டேன்.....! ------------------------- முள்ளில் மலரும் பூக்கள் 70 ------------------------- மொத்த கஸல் கவிதைகள் 1200 கவிப்புயல் இனியவன்

இதயம் தீக்குளித்தது

கவிப்புயல் இனியவன் கஸல் ----------------------------- இதயம் தீக்குளித்தது நீ என் காதலை....... மறுத்தபோது.....! என்னை தனியே..... இருக்க விடு....... தயவுசெய்து உன்..... நினைவுகளை வந்து.... எடுத்து செல்...........! காதல் என்றால்..... சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல..... சேர்ந்து அழுவதும் தான்....! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம்-15 மற்றுமொரு காதல் கஸல்

கவிப்புயல் இனியவன் கஸல்

கவிப்புயல் இனியவன் கஸல் ----------------------------- அன்று கண் முன் தோன்றினாய் காதல் வந்தது..... இன்று கண் முன் தோன்றுகிறாய்.... கண்ணீர் வருகிறது.....! உன்னை கண்டு..... துடிக்க தெரிந்த இதயம்..... நடிக்க பழகியிருந்தால்..... வலியை சுமந்திருக்க..... தேவையில்லை...........! காதலுக்கும்...... காந்த சக்தி கோட்பாடு..... பொருந்துகிறது..... நான் வடக்கில் நீ தெற்கில்................! & இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 

இறந்தும் துடிக்கும் இதயம் 13

என் கவிதைகள் கண்ணீரை மையாக்கி .... கண்ணால் பேசியவை ..... வரிகளாய்  வலிகளாய் ..... பிறக்கின்றன ....! என்னவளே ... நீ மொட்டாகவே.... இருந்திருக்கலாம்,,,,, மலராக வந்து...... வாடிவிட்டாய் .......! பார்வையால்..... நக்கீரன் சாம்பலானார்..... உன் பார்வையால்........ பாடையில் போய்விட்டேன்....! + & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 13 மெல்லிய காதல்வலி கவிதை

முள்ளில் மலரும் பூக்கள் 1068

ஒற்றை சிறகோடு.... பறக்க சொல்கிறாய்..... உனக்காக முயற்சிக்கிறேன்....! எப்படி நீ...? கண்ணாடியின் இருந்து.... விலகும் உருவம் போல்.... வலியில்லாமல் பிரிந்தாய்....? நான் கிழிந்த காற்றாடி..... நீ எவ்வளவு மூச்சு விட்டலும்..... பறக்க மாட்டேன்........! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1068 கவிப்புயல் இனியவன்

முள்ளில் மலரும் பூக்கள் 1067

காதலில் பறந்து ...... திரிவோம் என்றுகேட்டேன்..... நீ மறந்து திரிகிறாய்....! புன்னகையின்...... பாவச்செயல் காதல்....! என்னை மறக்கக் கூடாது என்பதற்காகவே -நீ வலியை தருகிறாய்.... என்பது புரிகிறது.......! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1067 கவிப்புயல் இனியவன்

இறந்தும் துடிக்கும் இதயம் 11 & 12

நீ மின்னல் இதயத்தை கருக்கிவிட்டாய்.......! தலை குனிந்தாய் நாணம் என்றுநினைத்தேன்.... நாணயம் இல்லாததை.... புரிந்தேன்...............! நான் .... மெழுகுதிரி ஒளி...... நீ மின்னொளியை........ எதிர்பார்கிறாய்................! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 11 & என் மனம் சொறணை கெட்டது.... உன்னையே நினைக்கிறது....! நிலவை காட்டி சோறு ஊட்டலாம்..... காதல் செய்ய முடியாது..... நிலவோடு உன்னை.... ஒப்பிட்டதே தவறு..........! என்னோடு... இணைந்து பயணம்செய்..... காதல் கோட்டை தொடலாம்... நீ அன்ன நடை போடுகிறாய்.......! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 12

இறந்தும் துடிக்கும் இதயம் 10

நான் எழுதும் எழுதுகருவியில்.... கண்ணீர் வலிகள்.... மன்னித்து கொள்... கவிதை வலித்தால்....!!! திருமணம் ஒன்றுக்கு.... மொய் எழுதபோனேன்...... மெய் மறந்தேன் திருமணம்.... அவளுக்கு...............!!! புல்லுக்கும் நிலாவுக்கும் காதல் தோல்வி புல் நுனியில் பனித்துளி..........!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 10 

இறந்தும் துடிக்கும் இதயம் 09

இப் பிறப்புக்கு ....... எனக்கு கிடைத்த ..... பாவ விமோசனம் நீ.....!!! என்னை பார்த்ததும்...... முகம் திருப்புகிறாய்........ முடிந்தால் உன் இதயத்தை..... திருப்பு...................!!! நான் விடும் மூச்சு..... உன்னை சுடும் என்று..... சந்தோசப்படவில்லை.... சுட்டு விடுமோ என்று..... பயப்பிடுகிறேன்...............!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 09

இறந்தும் துடிக்கும் இதயம் 08

காதலில் நான் நாவல்... நீயோ குறுங்கதை...... என்றாலும் சுவையாக..... இருக்கதானே செய்கிறது....!!! எனக்கு தெரியும்.... நம் காதல் தோற்கும்.... என்றாலும் காதல் .... செய்தேன் நினைவோடு..... வாழ்வதற்கு...........!!! நினைவுகள் உனக்கு..... குப்பையாக இருக்கலாம்..... நான் குப்பை தொட்டியாக..... இருந்து விட்டு போகிறேன்....!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 08

இறந்தும் துடிக்கும் இதயம் 07

காதல் செய்தேன்..... திருமணம் செய்தேன்..... பெண் தான் மாறி .... விட்டது ...............!!! தேவை என்றால் .... பேசு என்கிறாய் ..... அப்போதே புரிந்து .... விட்டது உன்னில் ..... இருந்து என்னை ..... விலக்குகிறாய்........!!! கண்ணுக்கு மட்டும் .... தான் தூர பார்வை ..... குறைபாடு இல்லை ..... இதயத்துக்கும் ...... இருப்பதை உன்னில் .... கண்டேன் ............!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 07

இறந்தும் துடிக்கும் இதயம் 06

வீசும் காற்றில் .... மரம் அசைகிறது ..... அழகாக இருக்கிறது .... மரத்தின் வலி ..... யாருக்கு புரியும் ......!!! கல்லில் கூட ஈரம் .... இருப்பதால் பாசி ..... படர்கிறது ..... உன் இதயம் கல் கூட ..... இல்லையே .......!!! கண்ணீரில் வேறுபாடு ..... இருப்பதே இல்லை ..... மனதின் வலிதான்....... கண்ணீரை வேறுபடுத்தும் ....!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 

இறந்தும் துடிக்கும் இதயம் 01 - 05

காதல்.......  ஆனந்த கண்ணீரில்... ஆரம்பித்து....... ஆறுதல் கண்ணீரில்..... முடிகிறது..........!!! முகில்களுக்கிடையே.... காதல் விரிசல்....... வானத்தின் கண்ணீர்...... மழை..........................!!! நான் வெங்காயம் இல்லை.... என்றாலும் உன்னை..... பார்த்தவுடன் கண்ணீர்.... வருகிறது................!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல்  ---- காதலின் வலியின்..... திரவம் ........ தண்ணீர் தான்..... மருந்து...........!!! முதலை கண்ணீரை..... நிஜக்கண்ணீரென்று.... நம்பிவிட்டேன்.........!!! காதலில் போடும்.... முடிச்சு திருமணத்தில்.... அவிழ்க்கபடுகிறது.........!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் 02 மற்றுமொரு காதல் கஸல் ----- சந்திக்கமுன் .... யாவரும் ..... சந்தோசமாய் .... இருந்தோம் .......!!! நான்  புகையிரதம் ..... நீ தண்டவாளம் ..... அனுமதித்தால்..... பயணம் தொடரும் ....!!! உயிர் கூட ..... இரட்டை வேடம் .... போடுகிறது ...... இருந்தால் உயிர் .... மறைந்தால் சாவு .....!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும்