இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலில் எரிகிறேன்.....!

காதல் நடைபாதை...... வியாபரமாகிவிட்டது..... தெருவெல்லாம்..... காதல் ஜோடிகள்.....! உற்றுப்பார்தால்...... கண் எரியும்..... உன்னை உற்றுபார்தேன்...... காதலில் எரிகிறேன்.....! பிறக்கும் போதும்.... இறக்கும் போதும்.... வலி தருவது...... காதலே.................! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

காத்திருக்கிறேன்......!

உன் இதயத்தில்..... காதல் இருக்கிறது.... இதயத்தில் காதல்.... கதவுதான் இல்லை..... காத்திருக்கிறேன்......! நம் காதல்..... பட்டாம் பூச்சிபோல்.... வர்ணமாக இருக்கிறது.... ஆயுள்குறைவு.......! துக்கத்தை தந்து..... தூக்கத்தை தொலைக்கும்.... காதலிலும் சுகம்..... இருக்கத்தான் செய்கிறது....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 20.06.2018

காதலும் ஒரு பிரபஞ்சம்

எல்லா பூச்சியமும்.... பெறுமதியை கூட்டாது.... உன் நெற்றி பூச்சியம்.... என்னை பூச்சியமாக்கிவிட்டது...! பிரபஞ்சம் ..... வெறுமையானது......... காதலும் ஒரு.... பிரபஞ்சம் தான்..... தோற்றவனுக்கு.....! இயற்கையின்....... பேரன்பும் பேரழிவும்.... காதல்தான் ..... தோற்றிவிக்கிறது....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

காதல் கஸல் கவிதை

காதலால் துடிக்கும்..... மண்புழு நான்...... நீ ............................ தூண்டில் போட்டு விளையாடுகிறாய் ....! உன்னை ....... காதலிக்க முன்....... கவிதையை... காதலித்துவிட்டேன்..... உன் பிரிவு ....... என்னை கலங்க வைக்கவில்லை ....! இறைவனை.... வணங்குவதும் ..... காதலை வணங்குவதும்... ஒன்றுதான் -காதல்.... இறைவன் ............ தந்த வரம்தானே....! @ கவிப்புயல் இனியவன் காதல் கஸல் கவிதை

கவிப்புயலின் கஸல் 02

கவிதைகள் கண்ணீரை பேனா மையாக்கி .... வலிகளை வரிகளாக்கி பிரசவிக்கின்றன......! நீ காலை ...... மாலை பூக்கும் ... மலராக இருந்து விடு ... இரட்டை இதயம் ......... படைத்தவளே...........! உன் பார்வைக்கு அஞ்சி ... அருகில் வரும்போது ... மறு தெருவுக்கு போகிறேன்... உன் பார்வையால்...... கருகியவர்களின்....... அறிவுரை கேட்டு.....! @ கவிப்புயல் இனியவன் கவிப்புயலின் கஸல் 02

கவிப்புயலின் கஸல்கள் 01

கவிப்புயலின் கஸல்கள் ---------------------------- சில நேரங்களில்.... கனவுகள் பலித்தால்.... வலியென்ன என்பதை.... உன் காதலில்  கற்றுக்கொண்டேன்.....! நீ..... நினைவில் வரும்போது..... தலைவலி தருகிறாய்.... கனவில் வரும் போது.... தலைவிதியாகிறாய்......! நீ போன ஜென்மத்தில்.... பட்டாம் பூசியாய்.... இருந்திருக்கிறாய்...........! @ கவிப்புயல் இனியவன் கவிப்புயலின் கஸல் 01

இறுதிசுற்றாகிவிட்டது....!

வலையில் சிக்கிய பூச்சி நான்..... சிலந்தியாக வந்து.... விழுங்கிவிடு.....! என் கவிதை ..... சிரமப்படுத்தினால் மன்னித்துவிடு......! உன்னை சுற்றி.... வந்தேன்........ முதல் சுற்றே.... இறுதிசுற்றாகிவிட்டது....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

மதுவுக்கு ஆசைப்பட்டு.....

மதுவுக்கு ஆசைப்பட்டு..... மதுக்கிண்ணத்தில்.... விழுந்த புழுவானேன்.....! நீ அணியப்போவது.... மலர்மாலையா...? மலர் வளையமா...? மணிமேகலை....... காதலனை இழந்தாள்.... காவியமானாள்...... காவியமும் காப்பியமும்...... காதல் தோல்வியே.....! @ கவிப்புடயல் இனியவன் கஸல் கவிதை

காதல் ஒரு பூச்சியம்.....

பசியோடு...... வாழகற்றவன்...... காதலில்லாமல்..... வாழ கற்றுகொள்ள..... தவறி விட்டேன்.....! காதல் ஒரு பூச்சியம்..... ஏக்கத்தோடு...... ஆரம்பித்து............ ஏமாற்றத்தோடு...... முடிகிறது..........! அன்பே வா....... இன்பவலியோடு..... இவ் உலகை விட்டு..... பறந்து விடுவோம்.....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

காதலே புகைந்துவிட்டதோ...?

காதலிலும்..... கண்ணாம்பூச்சி விளையாட கற்று..... தந்தவள் -நீ.....! இதயத்திலிருந்து.... கவிதை வரும்..... இதயமே கலங்கினால்..... கவிதை எப்படி வரும்...? ஜோடியாக புகைப்படம்.... எடுத்தோம் ...... அதனால் தான்..... காதலே புகைந்துவிட்டதோ...? @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

ஈரகுணத்தை.....

ஈரகுணத்தை..... என்னில் காட்டு..... தலையணையில்..... காட்டாதே......! காதல் ....... ஒரு சூதாட்டம்....... தலையும் விழும்...... பூவும் விழும்.......! என் இதயத்தை.... கிள்ளி வெளியே..... எடுத்துப்பார் -உன்  முகதோற்றத்தில்.... இருக்கும்.....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

எனக்கு வலிகள்....!

என் கவிதை...... உனக்கு வரிகள்..... எனக்கு வலிகள்....! துடிக்கும் இதயம்..... எல்லோருக்கும்..... இருக்கும்......... வலிக்கும் இதயம்..... என்னிடமே........ இருக்கிறது........! காதல் கண்ணில்.... ஆரம்பித்து...... கல்லறையில்......... முடிகிறது..........! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை