இடுகைகள்

ஜனவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இறுதிசுற்றாகிவிட்டது....!

வலையில் சிக்கிய பூச்சி நான்..... சிலந்தியாக வந்து.... விழுங்கிவிடு.....! என் கவிதை ..... சிரமப்படுத்தினால் மன்னித்துவிடு......! உன்னை சுற்றி.... வந்தேன்........ முதல் சுற்றே.... இறுதிசுற்றாகிவிட்டது....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

மதுவுக்கு ஆசைப்பட்டு.....

மதுவுக்கு ஆசைப்பட்டு..... மதுக்கிண்ணத்தில்.... விழுந்த புழுவானேன்.....! நீ அணியப்போவது.... மலர்மாலையா...? மலர் வளையமா...? மணிமேகலை....... காதலனை இழந்தாள்.... காவியமானாள்...... காவியமும் காப்பியமும்...... காதல் தோல்வியே.....! @ கவிப்புடயல் இனியவன் கஸல் கவிதை

காதல் ஒரு பூச்சியம்.....

பசியோடு...... வாழகற்றவன்...... காதலில்லாமல்..... வாழ கற்றுகொள்ள..... தவறி விட்டேன்.....! காதல் ஒரு பூச்சியம்..... ஏக்கத்தோடு...... ஆரம்பித்து............ ஏமாற்றத்தோடு...... முடிகிறது..........! அன்பே வா....... இன்பவலியோடு..... இவ் உலகை விட்டு..... பறந்து விடுவோம்.....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

காதலே புகைந்துவிட்டதோ...?

காதலிலும்..... கண்ணாம்பூச்சி விளையாட கற்று..... தந்தவள் -நீ.....! இதயத்திலிருந்து.... கவிதை வரும்..... இதயமே கலங்கினால்..... கவிதை எப்படி வரும்...? ஜோடியாக புகைப்படம்.... எடுத்தோம் ...... அதனால் தான்..... காதலே புகைந்துவிட்டதோ...? @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

ஈரகுணத்தை.....

ஈரகுணத்தை..... என்னில் காட்டு..... தலையணையில்..... காட்டாதே......! காதல் ....... ஒரு சூதாட்டம்....... தலையும் விழும்...... பூவும் விழும்.......! என் இதயத்தை.... கிள்ளி வெளியே..... எடுத்துப்பார் -உன்  முகதோற்றத்தில்.... இருக்கும்.....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

எனக்கு வலிகள்....!

என் கவிதை...... உனக்கு வரிகள்..... எனக்கு வலிகள்....! துடிக்கும் இதயம்..... எல்லோருக்கும்..... இருக்கும்......... வலிக்கும் இதயம்..... என்னிடமே........ இருக்கிறது........! காதல் கண்ணில்.... ஆரம்பித்து...... கல்லறையில்......... முடிகிறது..........! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை