கே இனியவனின் கஸல் - 800 வது பதிவு

நான் 
எழுதிய கவிதையை ...
நீ ஒரு நிமிட கனவாக்கி ....
கலைத்து விட்டாய் ....!!!

நீ 
என்னை காதலிக்கிறாய் ...
திமிர்பிடித்து அலைந்தேன் ...
தீக்குச்சியின் கதையானேன் ...
உன் திருமணத்தால் ....!!!

பயணத்தில் உன்னை ..
கண்டேன் காதலித்தேன் ...
பயணம் முடிந்ததுபோல் ...
காதலும் முடிந்தது .....!!!

இறைவா ...
எனக்கு மரணத்தை கொடு ...
இல்லையேல் அவளின் ...
கனவையாவது கொடு ...
வதைக்காதே .....!!!

நீ 
சொல்ல கூடாத ஒரு சொல் ...
நான் உன்னிடம் கேட்ககூடாத ...
ஒரு சொல் - காதல் 
இருவரும் பிரிந்தபோது ....
புரிந்தது .....!!!

+

கே இனியவனின் கஸல்
தொடர்கிறது காதல் கவிதை 
800 வது பதிவு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்