உனக்கும் கண்ணீர்வரும் ....!!!

காதல் வானவில் வந்தது ....
ரசிக்கமுன் உடைத்துவிட்டாய் ....
வானவில்லை ....!!!

தண்ணீர் கேட்டால் தரலாம் ....
நீயோ வீம்புக்கு காணல் நீர் ....
கேட்கிறாய் -சற்று பொறு ....
நம்காதல் காயட்டும் .....!!!

நான் அழுகிறேன் ....
நீயோ வியர்வை என்கிறாய் ....
காதலித்துப்பார் அன்பே ....
உனக்கும் கண்ணீர்வரும் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;845

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்