கவிப்புயல் இனியவன் கஸல் 880 - 890

உன் வெட்கம் என்னை ....
தலை குனிய வைக்கிறது ....
உன் பார்வை என்னை ....
மனிதனாக்கியது....!!!

என் காதல் மீது - நீ ...
ஏறிநின்று குதிக்க 
ஆசைப்படுவதேன் ...?

காதலில் ....
வலி -ராகம் ..
கண்ணீர் - மது ....
பிரிவு - வாழ்கை ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 881
---------
உன்னை 
காதலிப்பதும் ....
என்னை 
காயப்படுத்துவதும் ....
ஒன்றுதான் .....!!!

என் நினைவுகள் ...
உனக்கு தூசிபோல் .....
நான் அலைந்துகொண்டு ....
இருக்கிறேன் ....!!!

ஒன்றை 
நினைவில் வை ....
உன்னை காதலிப்பதால் ....
என் உயிர் துடிக்கிறது ...
நீ காயப்படுத்தினாலும் 
இதயம் தாங்குகிறது ....!!!


+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 882
---------
எனக்கு நரகம் வராது ...
காதல் வந்துவிட்டதே ....
எனக்கு சொர்க்கமும் ...
வராது நீ இல்லையே....!!!

என் 
புகைபடத்தை ....
தந்துவிட்டாய் .....
இதயம் புகைக்கவில்லை ....!!!

மனிதனின் தோற்றமும் ....
முடிவும் கண்ணீருடன் ....
தொடங்க காரணமே ....
காதல் தான் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 883
--------
நீ எப்படி வந்தாய் ....?
புரியவில்லை எனக்கு ....
எப்படி சென்றாய் ....
புரிந்துகொண்டேன் ....
கண்ணீர் வந்தபோது ....!!!

காதலுக்கு முன் ....
உறவுகளுக்கு ....
ரோஜாவோடு ராஜா ....
காதலின் பின் ....
உறவுகளுக்கு ....
முள்ளோடு ராஜா ....!!!

காதலை நீ சொல் ....
காதலிப்பது எப்படி ...?
நான் சொல்கிறேன் ....
மறக்காமல் - பிரிவது ....
எப்படி என்றும் சொல் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 884

----------
உன்னை பார்த்ததை விட ...
உன்னை பற்றி கேட்டதே ....
அதிகம் .....
என் காதல் காதால் ....
தோன்றியது ....!!!

எனக்கு உயிர் இருக்கும் ....
வரைக்கும் நீ இருப்பாய் ....
நீ போனாலும் காதல் ....
இருக்கும் .....!!!

உன் 
காதலின் ஆழத்தை ....
திருமண அழைப்பிதலில் ....
அழகாக போட்டிருந்தாய் .....
பொருத்தமான் பெயருடன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 885

------
நானும் பனித்துளியும் ....
ஒன்றுதான் இரவில் ....
அழுதுகொண்டிருப்பதில் ....!!!

நீ 
போவது வலியில்லை....
போய் என்ன ....
செய்யபோகிறாய் ....
என்பதுதான் வலி ....!!!

எனக்கு உனக்கும் 
அகண்ட இடைவெளி ...
காதலால் தோன்றியது ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 886

------
நான் வெறும் நூல் ....
நீ தான் காற்றாடி ....
அசையும் இடமெல்லாம் ....
என்னை இழப்பேன் ....!!!

இதயத்தில் 
முள் தோட்டம் .....
விளைந்தது காதல் ....
வந்தது முள் வலி ....!!!

கஸ்ரப்பட்டு காதல் மழை ....
பெய்கிறேன் -நீயோ ....
குடைபிடித்து தடுக்கிறாய்...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 887
------
உன்னை காதலித்த ...
இதயத்தை பார்த்து ....
கவலை படுகிறேன் ....
உன் காதல் புரியாமல் ....
காதலித்து விட்டதே ....!!!

காதல் 
நிறைகுடத்தை ....
குறைகுடமாக்கும் ....
எனக்கு சரிப்பட்டது ....!!!

உன் கண் தான் என் ....
கவிதை எழுத்து கருவி ....
என்னை நன்றாக பார் ....
கவிதை அருவியாய் வரும் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 888

----
காதலுக்கு தனி கல்லறை ....
அதில் முதல் அங்கத்தவன் ....
நான் தான் நீ அருகில் ....
வேண்டாம் ....!!!

எதற்காக தூண்டிலை ....
போட்டு காத்திருகிறாய்...?
நான் ஏற்கனவே இறந்த மீன் ....!!!

எப்போதும் என் முகவரி 
நீ தான் - தயங்காதே 
அப்போதே என் முகவரி 
தொலைந்து விட்டது .....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 889
-------------
துடுப்பு 
இழந்து தவிக்கிறேன் ....
என்னை காப்பாற்று ....!!!

காதல் கீதம் பாட ....
சொல்லும் நீயே ....
காதலை தர மறுக்கிறாய் ....!!!

வலிகளால் வலை பின்னி ....
வழிதெரியாமல் தடுமாறும் ...
காதல் மன்னன் நான் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 890

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்