கவிப்புயல் இனியவன் கஸல் 960 - 970

என் 
கவிதைகளை..... 
உளறல் என்கிறாய் ....
காதலித்தவனின் நிலை ...
அதுதான் ....!!!

காதலால் .....
மயானமாகிய இதயம் ....
நினைவு சின்னம் உன் ...
நினைவுகளும் கனவும் ....!!!

உனக்கு கவிதை 
எழுதினேன் பூக்களில் ...
இருந்த பட்டாம் பூச்சிகள் ...
அருகில் வருகின்றன ....
நீ தொலைவில் இருக்கிறாய் ...!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 961

----------
உன் 
எல்லா சுமைகளையும் ....
சுமக்கும் சுமைதாங்கி ...
என் இதயம் ...!!!

உனக்கு தெரியாமலே ....
உன்னை அதிகம் ...
காதல் செய்து விட்டேன் ....
அதுதான் அவஸதைக்கும் ...
காரணம் ....!!!

சூரியன் 
உதிக்கும்போதுதான் ...
எனக்கு இரவு ...
எங்கே சந்திரன் ...
இருக்கும் போது தூங்க ...
விடுகிறாய் ....?

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 962

---------
விரைவில் ஆயிரம் 
மேடை ஏறப்போகிறது ...
நம் காதல் நாடகம் ....!!!

காதல் 
நம்பிக்கை ...
அவநம்பிக்கையும் ...
கூட்டுக்கலவை ...!!!

உன்னை 
கண்ணால் பார்த்ததை ...
காட்டிலும் கண்மூடி ...
பார்த்ததே அதிகம் ...!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 963

----------
நீ 
இரும்பாகவும் ,,,
நான் காந்தமாகவும் ...
இருந்திருந்தால் -நம் 
காதல் வென்றிருக்கும் ...!!!

நீ 
அழகிய பூ ...
நான் காம்பு ....
விட்டு போகத்தானே ...
போகிறாய் ....!!!

உனக்கு நீராட்ட ...
வாங்கிய பன்னீர் கூட ...
கண்ணீராய் மாறி வருகிறது ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 964

----------
நீ 
திரும்பி பார்த்ததை ...
காதலாக எடுத்தது ...
தப்புதான் ,,,,
திரும்பி பார்க்காமல் ...
போகும் போது உணர்தேன் ...!!!

என் காதல் வீட்டில் ...
நீ சிந்தி வலை நான் 
பூச்சி இப்போது என்னை ....
விழுங்கி விடு ....!!!

இதயத்தின் காயத்தை ....
கண்களால் பார்த்தால் ...
கண்ணே வெந்துவிடும் .....
உனக்கும் எனக்கும் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 965

----------
உன்னை நினைத்து ...
மெய்சிலுத்த என் உடல் ...
மெய் மறக்க தொடங்கி ...
விட்டது -உன்னை ...
சேர்த்து ....!!!

உன் 
நினைவுகளை ...
குழிதோண்டி ...
புதைத்தால் ....
கள்ளி செடிதான் ,,,
முற்கலோடு வளரும் ....!!!

உயிரே 
என்று அழைத்த நாள் ...
முதல் என் உயிர் வெந்து ...
கொண்டே இருக்கிறது ...!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 966

----------
வானவில்.... 
வரும்போது ...
வானத்துக்கு கண்ணீர் ....
உனக்கு ....
கவிதை எழுதினால் ...
எனக்கு கண்ணீர் ....!!!

ரோஜாவை ...
வாங்கும் போது....
முள்ளிருப்பதை....
மறந்துவிட்டேன் ....!!!

ஒருமுறை என்னை ...
காதல் செய்துபார் ....
மறு ஜென்மத்தில் ...
என்னிடம் தவம் இருப்பாய் ...!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 967

---------
நான் 
பூச்சியம் ....
நீ -என்னோடு ...
இணைந்தாய்....
இலக்கமானேன்....
காதல் .....!!!

தனிமை 
காதலுக்கு எதிரி ....
என்னை 
தனிமையாக்கிய -நீ 
எதிரிதானே ....!!!

நான் காதல்.... 
ஏறுவரிசை -நீ... 
இறங்கு வரிசை ...
கூட்டி கழித்துப்பார் ...
காதல் பூச்சியம் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 968

----------
பௌர்ணமியில் 
பார்தேன் ...
அமாவாசையில் ....
மறந்தேன் ....!!!

காதலை காப்பாற்ற ...
ஒற்றை சிறகோடு ...
பறக்கிறேன் ....!!!

ஒழுங்காக சுற்றும் ...
கோல்களுக்கே ...
கிரகணம் வரும்போது ...
நம் காதலுக்கு கிரகணம் 
புதுமையில்லை ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 969

---------
ஆணிவேர் ...
அறுந்தாலும் ...
விழுதுகள் தாங்கும் ...
ஆலமரம் போல் ...
காதல் வேண்டும் ...!!!

எல்லா 
விண்ணப்பத்திலும் ....
நான் வெற்றி ...
காதல் விண்ணப்பம் ...
தோற்று விட்டது ...!!!

நான் 
நாணல் பூண்டு ....
நீ எந்தப்பக்கம் ...
அடித்தாலும் 
நிமிர்ந்து நிற்பேன் ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 970

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்