கவிப்புயல் இனியவன் கஸல் 900 - 910

காதலில் ....
அவளில் நனைவதற்காக ....
பனித்துளியில் நனைந்து .....
பார்கிறேன் ....!!!

ஒவ்வொரு உயிரினமும் ....
தன்னை பெருக்க ....
என்னைபோல் காதலுக்கு ....
ஏங்குகின்றன ....!!!

ஒவ்வொரு குழந்தையும் 
காதலின் அழகை காட்டும் ...
கண்ணாடிகள் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 911
---------
கவிதை ....
உனக்கு வரிகள் ...
எனக்கு நீ தந்த ....
காயங்கள் .....!!!

அரைகுறையாய் ....
இருக்கும் காதல் இதயத்தை ....
காதல் இதயமாக்குவோம் ...
வருகிறாயா ...?

உன் 
மின்காந்த கண்ணில்....
தப்புவதற்காக -உன் 
கண்ணுக்குள் நீராய் ....
இருக்கிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 912

----------

நீ 
பார்த்த போதுதான் ...
ஆணழகனானேன் ....!!!

எல்லோரும் 
ஒருவகையில் ....
பிச்சைகாரர்தான் ....
நான் காதலில் - நீ 
அழகில் .....!!!

உன் ....
பேச்சு வல்லினம் ...
எனக்கு மெல்லினம் ...
காதலுக்கு இடையினம் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 913
----------
காதலுக்காக ...
பூக்கப்பாடதமலர் -நீ 
வாடிவிழுந்த மலர் -நான் ...!!!

உன் புருவம் ....
உனக்கு வில் ...
எனக்கு அம்பு ....!!!

உன்னையும் ....
மரணத்தையும் ...
ஒன்றாக காதலிக்கிறேன் ....
நிச்சயம் முடிவு உண்டு ...!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 914
--------
காதலில் 
ஏற்ற இறக்கம் ....
நீ அமர் முடுகளில் ....
நான் ஆர்முடுகளில் ....!!!

என் .....
தலையெழுத்தை ....
நீ காதல் ரேகையால் ...
வரைந்து விட்டாய் ....!!!

எப்போது 
கண்ணீர் விட்டேன் ....?
காதலுக்கு தண்ணீர் ...
தெளித்தல்லவா விட்டேன் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 915
---------
உன்னை 
காதலித்து பஞ்சு மெத்தையில் ...
உறங்காமல் முள் மெத்தையில் ....
உறங்குகிறேன் ....!!!

நினைவுகள் ...
நீர்குமிழியை இருக்கலாம் 
குங்கும சிமிழாய் இருக்கலாம் 

சோகத்தின் பாதையில் ....
வருகிறேன் நீயும் நிச்சயம் 
வருவாய் என்ற நம்பிக்கையுடன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 916
----------
பட்டாம் பூச்சியாய் ...
பறந்த என்னை ...
விட்டில் பூச்சியாய் ...
கருக்கி விட்டாய் ....!!!

கண்ணீர் கடலைவிட ....
சோகமானது ....
உவர்ப்பதில் இரண்டும் ...
ஒன்றுதான் ...!!!

நான் 
மூச்சுவிடுவதால் ....
நீ வாழுகிறாய் .....
போதும் அது காதல் ...
இல்லாவிட்டாலும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 917
--------
ஜென்ம பாவத்துக்கு ....
பரிகாரமாய் நீ 
காதலாய் வந்தாய் ....!!!

ஏன் 
முகம் திருப்புகிறாய்...
தவறு மனதை உறுத்துதா ..?

உனக்கு அனுப்பிய ...
காதல் கடிதங்கள் ....
திரும்பி எனக்கே வருகிறது ....
முகவரியை மாற்றி விட்டாயா ...?

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 918
----------
என்று 
ஆதாம் ஏவாள் ...
தோன்றினார்களோ ...
அன்றே காதலும் ....
ஏவல் ஆகிவிட்டது ...!!!

காதலிலும் ...
பாகபிரிவினை ...
உடல் என்னிடம் ...
உயிர் உன்னிடம் .....!!!

பூக்களின் காதல் 
தோல்வி பனித்துளி ,,,,
மேகத்தில் காதல் 
தோல்வி மழைதுளி ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 919
-----------
வானவில்லைபோல் ....
காதல் அழகாயிருந்தது ,,,,
எப்படி வில் உடைந்தது ,,,?

உன் 
முக அழகை விட ....
உன் காதல் அழகு ....
பிறப்பின் புனிதத்தை ...
பெற்று விட்டாய் ...!!!

சோதிடமும் காதலும் ....
ஒன்று தான் புரிந்துகொள் ....
ஒருவனை 
கொஞ்சம் கொஞ்சமாய் ....
கொல்லும்....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 920

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்