கவிப்புயல் இனியவன் கஸல் 940 - 950
உன்
உணர்வுகளையும்
என்
உணர்வுகளையும்
தொலைத்து பெற்றதே
காதல் ....!!!
நீ
கண்ணீரால் பேசுகிறாய்
நான்
கவிதையாய் எழுதுகிறேன் ....!!!
ஒருதலை காதல் வலி
இருதலை காதல் வலி
இக்கரைக்கு அக்கறை
பச்சை .....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 941
-----------
நீ
தண்ணீராய் ....
இருந்தால் போதாது ...
தாகத்தையும்.....
தீர்க்க வேண்டும் ...!!!
பிறர் துன்பத்தில்
கண் கலங்கும் நீ
என் துன்பத்தில்
பங்குகொள் ......!!!
நீ
காதல் மலராகவும் ...
துரத்தி குத்தும் ....
தேனி வண்டாகவும் ...
இருகிறாய் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 942
-----------
உன்னை
காதலிக்கவேண்டும்
என்பதற்காகவே
காணாமல் போனவன் ...!!!
காதலித்தபோதுதான்....
உன் சுயரூபம் கண்டேன் ...
தவிக்க விடவே காதல் ....
செய்திருகிறாய்....!!!
உனக்கும்
எனக்கும் இடைவெளி ...
ஒன்றால் மட்டுமே ....
இணையும் -காதல் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 943
-------------
என் மூளையை ...
பரிசோதிக்க வேண்டும் ...
என்னையே
நினைப்பதில்லை....!!!
என்
கண்ணீர்த்துளிகள் ....
உனக்கு முத்துகள் ...
மாலையாய் கோர்கிறாய் ...!!!
சின்ன துவாரத்தை ...
அடைக்காமல் விட்டேன் ...
இதயத்தை விட்டு ...
வெளியேறிவிட்டாய் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 944
---------------
மஞ்சள் நிறத்தில் ...
காதல் செய்தேன் ...
குங்குமம் என்னை ...
பிரித்து விட்டது ...!!!
வற்றி போகும் நதியில் ...
முத்து குளிக்க சொல்கிறாய் ....
செத்து மிதக்கிறேன் மீனாய் ...!!!
எல்லோர்
காதல் வலியும்....
ஒன்றுதான் -காயங்கள்...
மட்டுமே மாறுகிறது ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 945
-------------
நீ
சொல்ல
தவிர்க்கும் -சொல்
நான் தவிக்கும் -சொல்
காதல் ....!!!
உன்னால்
கொஞ்சம் பன்னீர்
கொஞ்சம் கண்ணீர்
தவிக்கிறேன் ....!!!
இரண்டு
இதயங்கள் கண் மூடி
உறி உடைத்த கதை
நம் காதல் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 946
------------
நேரில் மௌனம்
கனவில் பேச்சாளர்
எத்தனை நாட்களுக்கு
இந்த தண்டனை ...?
அவ்வப்போது
முகில் வந்து நிலாவை
மறைப்பதுபோல் ...
உன் வருகை ....!!!
பூவின்
இதழ்கள் உதிர்வதுபோல்
உன் நினைவுகள் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 947
------------
எனக்கு
காதல் புதிரானது
கண்ணீர் பன்னீரானது
வார்த்தைகள் காயங்கள்
ஆனது ....!!!
நான்
உன் கண்ணில்...
ஒளியை தேடுகிறேன் ...
நீயோ என் கண்ணில் ...
ஒளியை பறிக்கிறாய் ....!!!
தயவு செய்து
பேசிவிடாதே -உன்
மௌனத்தில் இன்பம்
காண்கிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 948
-------------
உன்னை பகலில் ....
பார்ப்பதை விட ....
இரவில் பார்ப்பதே ....
அதிகம்....
அந்தளவுக்கு இருண்டு ....
காணப்படுகிறது ....
காதல் .....!!!
காதல் குப்பை - நான்
நீ உருண்டோடும் ...
வெள்ளம் ....
அப்படியென்றாலும் ...
என்னை உன்னோடு ...
அழைத்துச்செல் ....!!!
ஆயுள்
வரை காத்திருப்பேன்....
நீ காதலிக்க தயார்
என்றால் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 949
-----------
உன்னிடம் இருந்து ...
கற்று கொண்டேன் ...
பிரிவு வரும் போது ....
சிரித்து விட்டு செல்ல ....!!!
மூச்சு
திணறுகிறேன் ....!
என்னை நினைக்கிறாயா ...?
திட்டுகிறாயா ...?
பூக்கும்
வரை காத்திருந்த
வண்டு வாடிப்போனது ....
பூவில் தேனில்லாமல் ...
நான் உன்னிடத்தில் ...
வாடியதுபோல் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 950
உணர்வுகளையும்
என்
உணர்வுகளையும்
தொலைத்து பெற்றதே
காதல் ....!!!
நீ
கண்ணீரால் பேசுகிறாய்
நான்
கவிதையாய் எழுதுகிறேன் ....!!!
ஒருதலை காதல் வலி
இருதலை காதல் வலி
இக்கரைக்கு அக்கறை
பச்சை .....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 941
-----------
நீ
தண்ணீராய் ....
இருந்தால் போதாது ...
தாகத்தையும்.....
தீர்க்க வேண்டும் ...!!!
பிறர் துன்பத்தில்
கண் கலங்கும் நீ
என் துன்பத்தில்
பங்குகொள் ......!!!
நீ
காதல் மலராகவும் ...
துரத்தி குத்தும் ....
தேனி வண்டாகவும் ...
இருகிறாய் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 942
-----------
உன்னை
காதலிக்கவேண்டும்
என்பதற்காகவே
காணாமல் போனவன் ...!!!
காதலித்தபோதுதான்....
உன் சுயரூபம் கண்டேன் ...
தவிக்க விடவே காதல் ....
செய்திருகிறாய்....!!!
உனக்கும்
எனக்கும் இடைவெளி ...
ஒன்றால் மட்டுமே ....
இணையும் -காதல் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 943
-------------
என் மூளையை ...
பரிசோதிக்க வேண்டும் ...
என்னையே
நினைப்பதில்லை....!!!
என்
கண்ணீர்த்துளிகள் ....
உனக்கு முத்துகள் ...
மாலையாய் கோர்கிறாய் ...!!!
சின்ன துவாரத்தை ...
அடைக்காமல் விட்டேன் ...
இதயத்தை விட்டு ...
வெளியேறிவிட்டாய் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 944
---------------
மஞ்சள் நிறத்தில் ...
காதல் செய்தேன் ...
குங்குமம் என்னை ...
பிரித்து விட்டது ...!!!
வற்றி போகும் நதியில் ...
முத்து குளிக்க சொல்கிறாய் ....
செத்து மிதக்கிறேன் மீனாய் ...!!!
எல்லோர்
காதல் வலியும்....
ஒன்றுதான் -காயங்கள்...
மட்டுமே மாறுகிறது ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 945
-------------
நீ
சொல்ல
தவிர்க்கும் -சொல்
நான் தவிக்கும் -சொல்
காதல் ....!!!
உன்னால்
கொஞ்சம் பன்னீர்
கொஞ்சம் கண்ணீர்
தவிக்கிறேன் ....!!!
இரண்டு
இதயங்கள் கண் மூடி
உறி உடைத்த கதை
நம் காதல் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 946
------------
நேரில் மௌனம்
கனவில் பேச்சாளர்
எத்தனை நாட்களுக்கு
இந்த தண்டனை ...?
அவ்வப்போது
முகில் வந்து நிலாவை
மறைப்பதுபோல் ...
உன் வருகை ....!!!
பூவின்
இதழ்கள் உதிர்வதுபோல்
உன் நினைவுகள் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 947
------------
எனக்கு
காதல் புதிரானது
கண்ணீர் பன்னீரானது
வார்த்தைகள் காயங்கள்
ஆனது ....!!!
நான்
உன் கண்ணில்...
ஒளியை தேடுகிறேன் ...
நீயோ என் கண்ணில் ...
ஒளியை பறிக்கிறாய் ....!!!
தயவு செய்து
பேசிவிடாதே -உன்
மௌனத்தில் இன்பம்
காண்கிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 948
-------------
உன்னை பகலில் ....
பார்ப்பதை விட ....
இரவில் பார்ப்பதே ....
அதிகம்....
அந்தளவுக்கு இருண்டு ....
காணப்படுகிறது ....
காதல் .....!!!
காதல் குப்பை - நான்
நீ உருண்டோடும் ...
வெள்ளம் ....
அப்படியென்றாலும் ...
என்னை உன்னோடு ...
அழைத்துச்செல் ....!!!
ஆயுள்
வரை காத்திருப்பேன்....
நீ காதலிக்க தயார்
என்றால் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 949
-----------
உன்னிடம் இருந்து ...
கற்று கொண்டேன் ...
பிரிவு வரும் போது ....
சிரித்து விட்டு செல்ல ....!!!
மூச்சு
திணறுகிறேன் ....!
என்னை நினைக்கிறாயா ...?
திட்டுகிறாயா ...?
பூக்கும்
வரை காத்திருந்த
வண்டு வாடிப்போனது ....
பூவில் தேனில்லாமல் ...
நான் உன்னிடத்தில் ...
வாடியதுபோல் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 950
கருத்துகள்
கருத்துரையிடுக