இடுகைகள்

நவம்பர் 6, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணீரால் மிதக்குறது ....!!!

வா காதல் வழியே.... சென்று மரணம் வழியே .. வெளியேறுவோம் ....!!! காதலுக்கும் வீதி  போக்குவரத்து விதிகள் .. வேண்டும் ... நம் காதல் விபத்துக்கு ... உள்ளாகிவிட்டது ....!!! நீ பரிசாக தந்த ... கை குட்டை கண்ணீரால்  மிதக்குறது ....!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 742

கண்ணீராய் ஓடுகிறது ...!!!

என் இதயத்திலிருந்து வெளியேறியபோது நீ அறுத்து விட்டு வந்த ... நரம்பின் அதிர்வுதான் ... என் கவிதைகள் ....!!! இதுவரை  சேர்த்து வைத்த இன்பங்கள் கண்ணீராய் ஓடுகிறது ...!!! காதல் பிரிகின்ற போது ... உயிரும் பிரியும் ... என்பதை நீ ஏன்...? புரியவில்லை ....? + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 741

காதலிக்க தெரியாது ......!!!

என் காதலை என்னிடம் .... ஒப்படைத்த போதுதான் ... புரிந்தது உனக்கு .... காதலிக்க தெரியாது ......!!! எல்லோருக்கும் கண்ணீர் ... கவலையை தரும் ... எனக்கு கவிதை தருகிறது ....!!! என்னையே  உன்னில் பார்க்கும்..... கதிர் வீச்சு கண்ணாடி   நீ ...!!!  + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 740

உணர்ந்து கொண்டேன்...!!!

நிமிட கம்பி போல் .... உன்னை தொடர்கிறேன் ... நீ ஓடாத மணிக்கூடு ... உணர்ந்து கொண்டேன்...!!! என் இதயம் நீர் குமுழி ... விரும்பிய நேரத்தில் ... ஊதி உடைத்து விளையாடு ....!!! நானும் ஏழைதான் ... உன் முன்னால் காதல் .. பிச்சை பாத்திரம் ஏந்தி ... பலகாலம் நிற்கிறேன் ....!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 739