இடுகைகள்

நவம்பர் 22, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயல் இனியவன் - கஸல் - 905

காதலோடு வாழ்ந்த நீ  இறக்கிவைத்துவிட்டு .... என்னை சுமைதாங்கி ... ஆக்கிவிட்டாய் ....!!! எதுவுமே நிஜமில்லை  காதல் மட்டுமே நிஜம் ....!!! இதுவரை .... என் எழுத்து கருவி .... என் துன்பத்தையே .... எழுதிகொண்டு இருக்கிறது .... கொஞ்சம் உன்னை பற்றி... எழுதபோகிறேன் ... தாங்கிகொள் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 905

கவிப்புயல் இனியவன் - கஸல் - 904

எரிந்து கொண்டிருக்கும்  காதலை அணைத்துவிடு ... என்னை நீ அணைத்து....!!! நீ ..... ஒளி காத்திருக்கிறேன் ... நீ உதிக்கும்வரை ..... நான் உன்னில் மறையும் ... வரை காத்திருப்பேன் ...!!! இந்த  உலகம் அழிய வேண்டும் .... புதிய உலகில் நாம் தான் .... முதல் காதலர் என்ற .... வரலாறு படைக்கவேண்டும் ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 904

கவிப்புயல் இனியவன் - கஸல் - 903

புவியீர்ப்பால் .... பொருட்கள் கீழே வரும் .... கண் ஈர்ப்பால் .... காதல் உள்ளே வரும் ...!!! என்னை கவிதை .... எழுத வைத்தவளே .... கண்ணீர் அஞ்சலி .... எழுத வைத்துவிடாதே ....!!! இதயமே .... கவனமாய் இரு .... என்னை பார்த்து .... சிரிக்கபோகிறாள்....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 903

கவிப்புயல் இனியவன் - கஸல் - 902

நீயும் நானும் நிம்மதியாய் .... இருக்க ஒரே ஒரு வழி .... நீ என்னை காதலிப்பதே ....!!! நீ  எதற்காக தூண்டில் ... போட்டாய் - நான்  எதற்காக துடிக்கிறேன் ...? ஆட்டிப்படைகிறது காதல் ....!!! உனக்கு என் கவிதை .... பொழுதுபோக்கு - எனக்கு .... வாழ்கை பொழுது....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 902

கஸல் - 901

நான் சில காலம்  முள் மெத்தையில்..... தூங்கபோகிறேன் ....  காதலிக்கபோகிறேன்....!!! ஒவ்வொரு நொடியும் ... மூச்சு விடும் போது .... இதயம் சுடுகிறது .... உள்ளிருப்பது -நீ ,,,,!!! வாழ்வதற்காக காதலா ..? சாவதற்காக காதலா ...? நீ எதை தந்தாலும் .... காதலோடு ஏற்பேன் ....!!!  + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 901