இடுகைகள்

மார்ச், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் காதல் சாம்பலானது ...!!!

என் காதல் கனவானது நான் கவிஞனானேன் ...!!! ஒரு சின்ன தீ பொறி இடத்தையே சாம்பலாக்கிடும்... உன் கண் பட்டு என் காதல் சாம்பலானது ...!!! நானும் ஒரு பிச்சைக்காரன் உன் பதிலை எதிர் பார்த்து ... பட்டினியுடன் இருக்கிறேன் ...!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;785

வர மறுக்கிறாய் ....!!!

எல்லோரும் காதல் செய்து தூர ... விலகுவர் - நானும் .. நீயும் தூர இருந்தும் .. அருகில் காதலிக்கிறோம் ...!!! கண்ணீரை ... கடலாக்கி காதல் கப்பல் ... விடுகிறேன் - நீயோ .. வர மறுக்கிறாய் ....!!! எத்தனை கவிதை ... எழுதினாலும் -நிகரில்லை ... உன் மௌன மொழிக்கு ... + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;784

இறுதி நொடியில் துடிக்கிறது ...!!!

உன் நினைவுகளின் ... வலையில் சிக்கி தவிக்கிறேன் ... வலையை அறுத்து என்னை ... மீட்டு விடு ....!!! தயவு செய்து காதல் ... தந்துவிடு - இல்லையேல் என் இதயத்தை எட்டி பார் ... இறுதி நொடியில் துடிக்கிறது ...!!! என் மனதை பார் ... நீ கனவில் தான் வந்தாய் ... நியமென்று பூரிக்கிறது ... அதற்கு எங்கே புரியபோகிறது ... என் காதலும் கனவுதான் ...!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;783

வலியிலும் இன்பம் தான் ...!!!

உன்னை நினைப்பதும் ... முள் பற்றைமேல் ... தூங்குவதும் ஒன்றுதான் ... வலியிலும் இன்பம் தான் ...!!! பட்டாம் பூச்சி ... அழகை பார்ப்பதில்லை ... இனிமையை தான் ரசிகிறது ... நீ எதற்கு அழகை ரசிகிராய் ...? வா அன்பே ... நாம் இருவரும் காதல் ... உலகம் படைப்போம் ... விண்ணுலகில் இடம் ... நிறைய இடம் உண்டு ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;782

கல்லறையில் காத்திருக்கிறேன்

உனக்கு என்ன தைரியம் ... நான் காதலிக்கிறேன் ... நீயோ எனக்கு பெண் ... பார்கிறாய் .....!!! என் இதயத்தில் ... இருந்து கொண்டே... எனக்கு வலிதருகிறாய் ... நீ என்னை ஏற்கும் ... நாள் விரைவில் வரும் ... கல்லறையில் காத்திருக்கிறேன் காதல் பூ மலரும் நீ சமர்பிப்பாய் .....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;781

காதலை நிறுத்து ...!!!

உன் இதயத்தில் நான் என்னை கொல்ல காதலை நிறுத்து ...!!! நீ கடந்து வந்த பாதை கவிதையானது காதலில் இணைந்த பெற்றோர் காதலை வெறுக்கிறார்கள் காதல் சிரிகிறது ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;780  

கற்று விட்டது இதயம் ....!!!

காதலின் இதயக்கதவை மூடும்  சாவி நீ நீ சொல்ல வேண்டாம் முகம் சொல்லுகிறது இதயம் புரிந்து விட்டது ...!!! நீ வந்த போதும் சென்ற போதும் வலிக்காமல் இருக்க கற்று விட்டது இதயம் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;779

நல்ல தண்டனை ....!!!

தனிமையை தவிர்க்க உன்னிடம் காதலுக்காய் ஏங்கினேன் ...? நீ வந்த பாதையால் . நான் வரமாட்டேன் பாதையை மறைத்து விட்டாய் .....!!! உன் காதல் பிரிவு இதயத்துக்கு ஏமாற்றம் மனதுக்கு நல்ல போதனை எனக்கு நல்ல தண்டனை ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;778

காதல் நன்றி ....!!!

நீ எப்படி எல்லாம் என்னை காதலிக்கிறாய் ...? இதயத்துக்கு தெரியாது ...!!! காதலாக இருப்பது கால இன்பம் இல்லை கருங்கல்லை கூட காதல் உடைக்கும் உன் பிரிவு உன்னிலிருந்து என்னை மீட்டு தந்துள்ளது காதல் நன்றி ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;777

பயப்பிடுகிறது இதயம் ...!!!

இதயத்தை நானே வெட்கப்படுகிறேன் என்னை தூக்கி எறிந்து உன்னை வைத்திருப்பதற்காக .... உனக்காகவே வாழ்கிறேன் எனக்காக நீ எப்போது வாழ்வாய் ...? கடிகாரத்தைப்போல் நம் காதல் எப்போது நிற்பாய் ..? பயப்பிடுகிறது இதயம் ...!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;776

கல்லறையாகிவிட்டேன் ....!!!

நான் உனக்கு காதல் .. கடிதம் தந்தேன் - நீ திருமண அழைப்பிதலாய் மாற்றி விட்டாயே ...??? நீ என் கண்ணுக்கும் கண்ணீருக்கும் இடைபட்டவள் இருப்பாயோ ..? போய்விடுவாயோ ...? உன்னை காதலித்த .. போதே நான் சமாதியாகி .... கல்லறையாகிவிட்டேன் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;775

பெரிய கொடுமை

என் காதல் கவிதை ... பார்த்த நண்பனும் அழுகிறான் என்னைப்போல் அவனுக்கும் ... ஒரு காதலிபோல் ....!!! உலகில் பெரிய கொடுமை ... மணமாலையில் அவளை ... காதலன் பார்ப்பது ...!!! காதல் இல்லாத இதயத்தில் ... காதலை பார்ப்பது ... கருங்கல்லில் தண்ணிரை பார்ப்பது போல் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;774