இடுகைகள்

நவம்பர் 11, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயல் இனியவன்-கஸல் - 895

வா .... காற்றோடு கலந்து .... விண்ணோடு மறைந்து ... நிலவோடு காதல் செய்வோம் ...!!! காதல் உன்னை கண்டால் ... கண் மூடிகொள்கிறது... உன்னை பிடிகவில்லையாம் ...!! நீ காற்று ... எப்படி வீசுவாய்....? பயமாக இருக்கிறது ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 895

கவிப்புயல் இனியவன்-கஸல் - 894

நீ நிழல் ... என்னை விட்டு ... விலகுவதுமில்லை ..... எப்போதும் என்னோடு ... இருப்பதுமில்லை ...!!! கட்டை விரலை ... இழந்த ஏகலைவன் போல் ... காதல்  அம்பிருந்தும் ... எய்ய முடியவில்லை ...!!! நீ என்னில் இருக்கும் ... நொடிகளில் நான் இறக்கிறேன்... நீ என்னில் இல்லாதபோது ... உயிர்க்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 894

கவிப்புயல் இனியவன்-கஸல் - 893

காதலுக்கு உன் கண் தூண்டில் .... என் இதயம் அகப்பட்ட ... மீன் ....!!! உனக்கு புரியாது .... என் இதயம் உன்னைவிட ... வலிமையானது .... இத்தனை வலிகளை.. சுமக்கிறது ....!!! உன் காதல் விசித்திரமானது .... தண்ணீராகவும் இருகிறாய் ... வெநநீராகவும்  இருகிறாய் ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 893

கவிப்புயல் இனியவன்-கஸல் - 892

என்  காதல் சமாதியாகிவிட்டது.... உன் நினைவுகள் கல்லறை ... சுவராய் நிறுவியிருக்கிறேன் ...!!! காதல் தோற்காது .... என்னை கவிஞனாக்கியதே ... வரிகளில் காதல் ... வாழ்ந்துகொண்டே இருக்கிறது ....!!! நீ என் காதலை .... நிராகரித்ததிலிருந்து.... என் வீட்டு மலர்கள் .... கருகிகொண்டு வருகின்றன ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 892

கவிப்புயல் இனியவன்-கஸல் - 891

என்னமோ புரியல்ல .... உன்னை நினைக்கும்போது ... கண்ணீருடன் கவிதை ... அருவியாய் வருகிறது ....!!! உனக்கு காதல் குப்பை ... எனக்கு காதல் குண்டுமணி .... தண்டவாளமாய் ...... பயணிக்கிறோம் ....!!! உன்னில் ஒரு திறமை இருக்கிறது ..... நீ சிரித்துகொண்டே ... என்னை அழவைப்பதில் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 891