இடுகைகள்

டிசம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன் பார்வைக்கு அஞ்சி ...

என் கவிதைகள் கண்ணீரை பேனா மையாக்கி .... கண்ணால் பேசியவை வரிகளாய்  ... வலிகளாய்  பிறக்கின்றன ....!!! என்னவளே ... நீ காலை மாலை பூக்கும் ... மலராக இருந்து விடு ... அப்போதுதான் வாடமாட்டாய் ...!!! உன் பார்வைக்கு அஞ்சி ... நீ அருகில் வரும்போது ... மறு தெருவுக்கு போகிறேன்...!!! + கே இனியவன் கஸல் கவிதை ;763

நீ சந்தோசமாய் இரு ....!!!

நீ தொலைந்தால் தானே... நான் கவலைப்படுவேன் ... நீ என்னை நினைத்து ஏன்.. கண்ணீர் விடுகிறாய் ,,,,? உன் வாழ்க்கைக்காக ... என் வாழ்க்கையை பறித்தவள் -நீ சந்தோசமாய் இரு ....!!! உன்னை நான் நேரில் ... ரசிப்பதை விட கவிதையில் ... ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...!!! + கே இனியவன் கஸல் கவிதை ;762

கண்ணுக்குள் ஈரம்

காதலுக்கு கண் இல்லை கண்ணூறு உண்டு .... ஊர் கண் படவில்லை ... நம் கண்ணே பட்டு விட்டது ...!!! ஒவ்வொருவனுக்கும் ... அவனவன் காதல் தான் ... ஆயுள் பாசக்கயிறு .....!!! கண்ணுக்குள் ஈரம் ... காதல் - உன்னுக்குள் ஏன் ஈரமில்லை உயிரே ...!!! + கே இனியவன் கஸல் கவிதை ;761

நிச்சயம் நீ அழுதிருப்பாய் ...

வெள்ளத்தில் கரைந்த மண்  போல் என் காதல்  கண்ணீரில் கரைந்து போனது ....!!! பேச்சும் மூச்சுமாய் .... இருந்த நம் காதல் ... இறுதி மூச்சை இழுத்த .. வண்ணம் இருக்கிறது ....!!! இதயம் மட்டும் ... வெளியில் இருந்திருந்தால் ... நிச்சயம் நீ அழுதிருப்பாய் ... என்னை ஏற்றிருப்பாய்....!!! கே இனியவன் கஸல் கவிதை ;760

நானோ சிக்கி தவிக்கிறேன் ...!!!

உன் இதயத்தில் காதல் நெல் விதைத்தேன் ... புல்லாய் வளர்கிறது ....!!! சிலந்தி வலைபோல் ... அழகாக இருக்கிறது நம் காதல் -. நானோ சிக்கி தவிக்கிறேன் ...!!! எத்தனையோ.... வடிவமாய் உன்னை .. தரிசிக்க விரும்புகிறேன் ... நீ காலனாய் வருகிறாய் ....!!! கே இனியவன் கஸல் கவிதை ;759

தொலைத்துவிட்டேன் ....!!!

எதையுமே விரும்பாத ... உன்னை நான் விரும்பி ... தொலைத்துவிட்டேன் ....!!! கருங்கல்லில் -நீர் ... வடியும் என்பதை ... உன் காதலில் இருந்து ... நம்பிவிட்டேன் ....!!! பெண்ணை பற்றி நான் .... கவிதை எழுதியதில்லை ... உன்னை பற்றியே கவிதை ... எழுதுகிறேன் ....!!! கே இனியவன் கஸல் கவிதை ;758

இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!!

நீ என்னை விரும்மபில்லை .... என் கவிதையையும் ... விரும்பவில்லை - நீ இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!! தூரத்தில் அழகானது .... நிலா மட்டுமல்ல .... காதலில்லாமல் இருக்கும் ... என்னவளும் தான் ....!!! கவிதை எழுதி எழுதி ... ஞானியாகிவிட்டேன்.... தன்னை மறந்த நிலைதானே ... ஞானம் .....!!! கே இனியவன் கஸல் கவிதை ;757

காதலை வைத்திரு ...!!!

என் காதல்  இனிமையானது ... இதயம் பாலாப்பழம்போல் ... முட்களால் மூடியுள்ளது ....!!! எனக்கு ஒரு உதவிசெய் .... என்னை விட்டுவிடு ... காதலை வைத்திரு ...!!! இழந்தது  கோடி கணக்கான ... சொத்தென்றால் கலங்க ... மாட்டேன் - கோடி இன்பம்  தந்த காதலை ....!!! கே இனியவன் கஸல்  கவிதை ;756