இடுகைகள்

ஆகஸ்ட் 25, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உனக்கும் கண்ணீர்வரும் ....!!!

காதல் வானவில் வந்தது .... ரசிக்கமுன் உடைத்துவிட்டாய் .... வானவில்லை ....!!! தண்ணீர் கேட்டால் தரலாம் .... நீயோ வீம்புக்கு காணல் நீர் .... கேட்கிறாய் -சற்று பொறு .... நம்காதல் காயட்டும் .....!!! நான் அழுகிறேன் .... நீயோ வியர்வை என்கிறாய் .... காதலித்துப்பார் அன்பே .... உனக்கும் கண்ணீர்வரும் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;845

நான் வெறும் கூடு

திருவிழாவில் கைவிட்ட .... குழந்தைபோல் நிற்கிறேன் .... எங்கே என்னை விட்டு .... சென்றுவிட்டாய் .....!!! என் கண்ணில் ஏதோ.... குறைபாடு இருக்கிறது .... பார்ப்பதெல்லாம் -நீயாக தெரிகிறாய் .....!!! நான் வெறும் கூடு .... என் இதயமும் நீ மூச்சும் நீ என்னை உண்மையில் கூடாக்கிவிடாதே....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;844

ஆழம் என்று இறங்கினேன்

உன்னிடமும் காதல் இல்லை... என்னிடமும் காதல் இல்லை ..... நம்  காதல் ஊர் முழுதும் .... வாழ்கிறது .....!!! ஒவ்வொரு இளையோருக்கும் .... இரண்டு காலம் உண்டு .... காதலுக்கு முன் ..... காதலுக்கு பின் .....!!! நீ அத்தியாய காதல் கடல் ..... ஆழம் என்று இறங்கினேன் .... வரண்டுபோய் உள்ளது.... உன் காதல் கடல் .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;843