இடுகைகள்

அக்டோபர் 1, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கே இனியவன் - கஸல் 85

நீ நிலா நான் நட்சத்திரம் .... அமாவாசையிலும் .... இருப்பேன் ....!!! உன் சிரிப்பு ... இதயசிறையை... உடைத்தெறிந்து.... விட்டது....!!! காதலால் .... தரையில் துடிக்கும்... மீனாகவும்.... கூட்டில் அடைபட்ட.... கிளியாகவும் இருக்கிறேன் .....!!! + கே இனியவன் - கஸல் 85

கே இனியவன் - கஸல் 84

நீ  என்னோடு... வாழுகிறாய் ..... நமக்கிடையே மௌனம்.... வாழுகிறது .... பிரிவை தடுக்கிறது....!!! உன்  ஒவ்வொரு பார்வையும் எனக்கு கவிதை உன் மௌனம் .... எனக்கு மரணம் ....!!! காதலில் நான் .... காற்று போன வண்டி ..... காற்றோடு நீ வந்தால் ... இயங்குவேன் ....!!! + கே இனியவன் - கஸல் 84

கே இனியவன் - கஸல் 83

என் கவிதைகள்...! காதலர் இடையில் .... பிரபல்யம் -கவிதை.... நன்றாக இருப்பதல்ல..... நம் காதல் சோகம் ... அவர்களுக்கும் .... பொருந்துகிறது ....!!! நீ எப்போதே... சென்று விட்டாய்... என் இதயம் நான் .... சொன்னாலும் .... நம்புவதாய் இல்லை ...!!! மீண்டும் வந்தாய் .... காதலியாய் இல்லை .... வானத்து தேவதையாய் ... உயிரே உன்னிடம் நானும் .... விரைவில் வருவேன் ....!!! + கே இனியவன் - கஸல் 83

கே இனியவன் - கஸல் 82

கவலையிலும் ... சிரிக்க கற்றுதந்தவள் .... கவலையை விட .... எதையும் கற்று தராதவள் ...!!! என் இதய சுற்றோட்டம் இரத்தத்தால் -இல்லை உன் நினைவால் தான் இயங்குகிறது....!!! நான் அவசர சிகிச்சையில்.... நீ உயிர் விடும் மூச்சு ...!!! + கே இனியவன் - கஸல் 82

கே இனியவன் - கஸல் 81

கண்ணீர் வெறும் தண்ணீர் ..... அது உனக்கே ....! எனக்கோ ... இதயத்தில் .... வடியும் இரத்தம் ....!!! நரகத்தில் வாழ்வேன் சொர்கத்தில் வாழ்வேன் ... உன் பதிலில் இருக்கு ...!!! குடிப்பதற்கு மது ... துடிப்பதற்கு மாது .... என்னவளே நீ ... மதுவும் மாதுவும் ....!!! கே இனியவன் - கஸல் 81

கே இனியவன் - கஸல் 80

ரத்தமாய் . சிவந்திருக்கிறது என் வீட்டு ரோஜா நீ தந்ததாலோ ...? என் இறந்த இதயத்தின் -மேல் காதல் கவிதை ..... எழுத சொல்கிறாயே ....!!! நீ .... எனக்குபன்னீர் .... தெளிக்கவேண்டும் ... கண்ணீர் தருகிறாய் ....!!! + கே இனியவன் - கஸல் 80