இடுகைகள்

ஜனவரி 27, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கற்று தாருவாயா ...?

அன்பே எனக்கும் .... கற்று தாருவாயா ...? சிரித்து விட்டு முறைத்து ... கொண்டு போவதற்கு ....? காதலித்துவிட்டு  .... காதலே தெரியாததுபோல் .... குனிந்து செல்வதற்கு .... எனக்கும் கற்றுத்தா.... நானும் உன்னைப்போல் .... வாழ்வதற்கு ....!!!

காதலி ஒரு மாயை ....

நான் வரும் போது - நீ மறைகிறாய் - நீ வரும்போது நான் மறைகிறேன் - காதல் சூரிய சந்திர உதயமோ ...? கடலுக்கு கூட ஒய்வு ... உன் நினைவுகளுக்கு ... ஒய்வு இருப்பதில்லை ...!!! காதல் ஒரு கனவு .... காதலி ஒரு மாயை .... மரணம் மட்டும் நிஜம் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;770

மெழுகுதிரியால் எழுதப்படுகிறது ....!!!

என்  கவிதைகள் பேனாவால் .... எழுதப்படவில்லை .... மெழுகுதிரியால் ... எழுதப்படுகிறது ....!!! நம் காதலும் ஒரு ... தண்டவாளம் தான் ... தொடர்ந்தே போகிறது...!!! இதயம் இல்லாமல் ... வாழுகிறேன் ... பாழாய் போன இந்த .... காதலால் .....!!! + கவிப்புயல் இனியவன்  கஸல் கவிதை ;769

எனக்கே பாவமன்னிப்பு ...

உன்னை காதலித்த ... குற்றத்துக்காக நான் ... எனக்கே பாவமன்னிப்பு ... கேட்கிறேன் .....!!! உன் காதலின் பின் தான் .. எனக்கு இதயம் இருப்பதை ... புரிந்து கொண்டேன் ...!!! என்னை கண்டதும் ... உன் கண் கலங்குகிறது ... விட்ட தவறை .... உணருகிறாய் போல் ...? + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;768