இடுகைகள்

அக்டோபர் 28, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கஸல் - 880

உன் வெட்கம் என்னை .... தலை குனிய வைக்கிறது .... உன் பார்வை என்னை .... மனிதனாக்கியது....!!! என் காதல் மீது - நீ ... ஏறிநின்று குதிக்க ஆசைப்படுவதேன் ...? காதலில் .... வலி -ராகம் .. கண்ணீர் - மது .... பிரிவு - வாழ்கை ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 880

கஸல் - 879

எட்ட முடியாத காதலர் நாம் ..... சூரியனும் சந்திரனாய் ... வானமும் நிலமுமாய் ...!!! காதலை விதைத்தேன் ... வதையாகும்  உணர்ந்தேன் ... காதல் ஆழ்கடல் -நீ துறைமுகம் ....!!! நான் வெறும் நெருப்பு ... நீயே வெப்பம் ... நீயே ஒளி.... நீயே கரி .... நீ தணல் ..... அணைந்து விடாதே ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 879

கஸல் - 878

வானவில்லில் ஏழுநிறம் .... வானத்து அழகியே உனக்கும் ... வானவில் குணமோ ....? வா என்கிறாய்  போ என்கிறாய் ....? விட்டில் பூச்சியை .... விளக்கம் காட்டினேன் .... விதி எனக்கும் சரியானது .... விதி மதி இரண்டும் இழப்பாய் .... காதலித்துப்பார் ....!!! வீறாப்புடன் .... வீட்டை எதிர்த்து காதல் செய்தேன் .... வீதியில் நிற்கிறேன் உன்னை இழந்து ... காதல் கண்னை மறைக்கும் ... உறவையும் மறக்கும் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 878

கஸல் - 877

கண்ணில் பட்டு கதலானாய் .... கல்லறைவரை தொடருமென்றாய்.... கண்மூடி தனமாய் நம்பினேன் ... கண்ணீர்தான் இறுதி பரிசு ....!!! கிட்டவா காதல் பரிசு தா .... கிள்ளி விட்டு போனபோது .... கிள்ளியது என் இதயம் என்பதை .... கிட்டிய காலத்தில் நீ திட்டியபோது .... கிறுக்கணுக்கு  புரிந்தது ....!!! காத்திருந்தேன் கவிதை வந்தது .... காணாமல் போனாய் கவிதை வந்தது .... காதல் பைத்தியம் என்றார்கள் .... காதலித்து பாருங்கள் புரியும் ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 877

கஸல் - 876

இறந்த காலம் தான் .... இனிமையான காலம் .... இனிமையாய் நீ பேசி .... இளமையை ரசித்தேன் .... இப்போ தனிமையில் ....!!! உனக்காய் வாழ்வேன் ... உறுதியாய் கூறினாய் .... உயிரை மறந்து வாழ்ந்தேன் ..... உயிர் வலிக்கிறது இப்போ ....!!! அன்பே என்றாய் .... அனைத்தையும் இழந்தேன் .... ஆருயிரே என்றாய் .... ஆவியாய் அலைகிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 876