எப்போ ..? முள்ளானாய் ....?
காதல் பூவானால்.... காயத்தை குணமாக்கும் ... பூவாக இருந்த நீ -எப்போ ..? முள்ளானாய் ....? எப்போது நீ காதலித்தாய் ...? மறந்தே விட்டேன் ... நீ தந்த காதல் வலியால்....!!! என் காதல் செடியின் வேர்கள் கருகிகொண்டு வருகின்றன ... கண்ணீரால் எப்படி ...? வளரமுடியும் ....? + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;787