இடுகைகள்

மார்ச், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயல் இனியவன் கஸல் - 990

உன்  பாத சுவடாகவேனும் ... இருந்து விட்டே போகிறேன்... அப்போதாவது உன்னோடு .... வாழ்ந்து விடுகிறேன் ....!!! ஒருமுறை  என்னை காதலித்து பார் ... காதலில் நீ காணாத .... மறுபக்கத்தை காட்டுகிறேன் ....!!! பிறக்கும் ஒவ்வொரு .... மனிதனும் இதயத்தோடு ... பிறக்க தேவையில்லை .. காதலோடு பிறக்கட்டும் ....!!!  ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 990

கவிப்புயல் இனியவன் கஸல் - 989

உன்னால்  துடுபிழந்த ஓடம் .... எப்படியோ ... கரை சேர்ந்துவிட்டேன் .....!!! இப்போதுதான் .... உன் பார்வையால் .... சிறகு முளைக்கிறது....!!! காதல்  வதையாகவும்  வாகையாகவும் .... இருக்கும் ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 989

கவிப்புயல் இனியவன் கஸல் - 987

நீ  கற்பில் நாகம்  கொத்துவாய்.... நான் தவளை ... என்னை நீ ... இரையாக எடுப்பாய் ....!!! உன்  நினைவுகளில் .... பஞ்சாய் பறக்கிறேன் ... காற்றே -நீ  நின்று விடாதே ....!!! உனக்கும்  எனக்கும் தடையாய் .... இருக்கும் காதாலை... செய்து கொள்ளேன் ...!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 987

கவிப்புயல் இனியவன் கஸல் - 986

நீ  அகராதி...  சிலவேளை ... புரிகிறாயே... இல்லை ....!!! மீனைப்போல்...  எந்தநேரமும் ... விழிப்பாய் இரு .... மீன் தொட்டிக்குள் ... வாழாதே ....!!! நீ  நிலா  நான் நட்சத்திரம்  அமாவாசையிலும்  உன்னை நினைப்பேன் ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 986

கவிப்புயல் இனியவன் கஸல் - 985

வா காதல் வழியே சென்று காதல் விபத்தில் .... இறப்போம் .....!!! எம்மை விட்டு பிரிந்த காதல் பாவம் தனியே இருந்து அழப்போகிறது ...!!! உனக்கென்ன ...? கண்டும் காணாதது போல் போய் விடுவாய் என் இதயம் படும் ... வேதனை எப்படி புரியும் ...? ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 985

கவிப்புயல் இனியவன் கஸல் - 984

நீ இதயத்தில் இருந்து... வெளியேறிய போது .... இதய கதவை பூட்டி ... திறப்பை இடுப்பில்... ஏன் செருவினாய் ...? உன் காதல் கொடுமையை ... என் கவிதையில் ..... பார்த்திருப்பாய் ....!!! நீ நகர்ந்தபோது என் வாழ்க்கையும் ... நகர்ந்துவிட்டது ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 984

கவிப்புயல் இனியவன் கஸல் - 983

உன் பிரிவு ஒன்றும் ... அதிர்ச்சியில்லை ... எதிர்பார்த்ததே ....!!! காதலில் .... ஒவ்வொரு இன்பத்துக்கும் ... ஒவ்வொரு துளி கண்ணீர் .. பரிசாக கிடைக்கும் ...!!! காதலில் ... சாடி நான் நீ மூடி .... மூடியே வைத்துவிட்டாய் ...!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 983

கவிப்புயல் இனியவன் கஸல் - 982

இதயக்கதவை ... பார்த்தேன் அழகாக ... மூடப்பட்டிருக்கிறது ....!!! பஞ்சாக மாறி விடுகிறேன் .... காற்றாக வீசி .... என்னை நீயே... காணாமல்லாக்கிவிடு ....!!! மூச்சு விட பயமாய் ... இருக்கிறது .... மீண்டும் வந்துவிடுவாயோ ...? ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 982

கவிப்புயல் இனியவன் கஸல் - 981

உனக்கு வாழ்கை  கிடைக்கும் என்றால்  என் வாழ்கையை  துறக்க தயார் ....!!! நான் இதய கதவை ... பூட்ட தயார் - நீ  வேறு இதயத்துக்கு .... போவாய் என்றால் ....!!! உனக்கும் எனக்கும் ... நெருங்கி கொண்டு ... வருகிறது -பிரிவு ...!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 981

கஸல்..127

சொல்லமுடியாது .. அது படும் துன்பம் .. தூக்கத்தை கூட .. வெறுக்கிறது ...!!! உனக்கு தெரியாது .. நீ என்னைவிட .. அன்பானவள் ... அழகானவள் .. நிலையில்லாதவள் ... நிலாவிடம் .. கேட்டுப்பார் ... நாம் சேர்ந்திருந்த ... நாட்களை கூறும் ... கஸல்..127

கஸல் 128

எல்லா கப்பல்களும் ... உன் நினைவுகளை .. தாங்கிக்கொண்டு .. இருக்கும் கப்பல் நான் .. நம் காதலுக்கு .. கண் தான் விதை .. தூவும் ... கண்ணீர் தான் உரம் போடும் ... பூவின் மீது ... வண்டு இருக்கலாம் வெடி குண்டு இருக்கமுடியுமா ...?? கஸல் 128

கஸல் 126

காதலில் ... உனக்கு என்னையும் .. எனக்கு உன்னையும் .. பண்டமாற்றைப்போல் .. பரிமாறிக்கொண்டோம் ... நான் வானம் .. நீ முகில் ... நான் நிலையாக .. நீ அசைந்து கொண்டு... நான் கவிதையை .. உன்னைக்கொண்டு .. எழுதுகிறேன் .. நீயோ கவிதையை .. என்னை கொன்று .... எழுதுகிறாய் ...!!! கஸல் 126

கவிப்புயல் இனியவன் கஸல் - 980

உன் கண் வலைக்குள் ... சிக்கிய மீன் நான் .... எடுத்து விடு ...!!! நம் காதல் தொடர் கதை ... எப்போது நிறைவு ... பெறும் ...? நீ என்னை வதைப்பாய் தெரிந்தும் உன்னிடம் ... வசப்பட்டேன் ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 980

கவிப்புயல் இனியவன் கஸல் - 979

சில நேரம் பாசமாய் இருக்கிறாய் சில நேரம் வேஷமாய்... இருக்கிறாய்....!!! பிரிந்து சென்றது .... குற்றமில்லை .... என்னை பிழிந்து ... சென்றதே குற்றம் ...!!! உன்னை கண்ணால் ... வீசி பிடித்தேன் .... அதுதான் என்னை ... சிக்கலில் மாட்டி .... வைத்திருகிறாயோ...? ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 979

கவிப்புயல் இனியவன் கஸல் - 978

உன் இதயத்தில் .... நான் துடிப்பா ...? நடிப்பா ....? என்னிடம் நீ இருக்கின்ற போதெல்லாம் உன்னிடம் - நான் ... இருக்க வேண்டும் .... என்னை கலைகிறாய் ...? உயிரே ... நீ போதையா இரு ... என்னை பேதையாக்காதே,,,,!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 978

கவிப்புயல் இனியவன் கஸல் - 977

நீ காற்று என் மூச்சாவும் ... புயலாகவும் .... இருகிறாய் ....!!! எவ்வளவு தான் .... மறைத்தாலும் ... பரகசியமாகும் .... பிரசவம் .... காதல் ....!!! உன்னை நினைத்து.... அழும்போதெல்லாம் .... ஆறுதல் தருவது ... உன் கடந்தகால உறவு ...!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 977

கவிப்புயல் இனியவன் கஸல் - 976

நீ நெருப்பு .... உனக்கு உணர்வே இல்லை என்னை சுட்டெரிக்கிறாய் .....!!! பகலில் உன்நினைவும் ... இரவில் உன் கனவும் .... இருதலை கொள்ளி .... எறும்பு போல் கொல்லுதடி ...!!! நான் பார்வையில்லாத கண் .... நீ கண் இருந்தும் பார்வை .... இல்லாதவள் ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 976