இடுகைகள்

மார்ச் 19, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலை நிறுத்து ...!!!

உன் இதயத்தில் நான் என்னை கொல்ல காதலை நிறுத்து ...!!! நீ கடந்து வந்த பாதை கவிதையானது காதலில் இணைந்த பெற்றோர் காதலை வெறுக்கிறார்கள் காதல் சிரிகிறது ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;780  

கற்று விட்டது இதயம் ....!!!

காதலின் இதயக்கதவை மூடும்  சாவி நீ நீ சொல்ல வேண்டாம் முகம் சொல்லுகிறது இதயம் புரிந்து விட்டது ...!!! நீ வந்த போதும் சென்ற போதும் வலிக்காமல் இருக்க கற்று விட்டது இதயம் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;779

நல்ல தண்டனை ....!!!

தனிமையை தவிர்க்க உன்னிடம் காதலுக்காய் ஏங்கினேன் ...? நீ வந்த பாதையால் . நான் வரமாட்டேன் பாதையை மறைத்து விட்டாய் .....!!! உன் காதல் பிரிவு இதயத்துக்கு ஏமாற்றம் மனதுக்கு நல்ல போதனை எனக்கு நல்ல தண்டனை ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;778

காதல் நன்றி ....!!!

நீ எப்படி எல்லாம் என்னை காதலிக்கிறாய் ...? இதயத்துக்கு தெரியாது ...!!! காதலாக இருப்பது கால இன்பம் இல்லை கருங்கல்லை கூட காதல் உடைக்கும் உன் பிரிவு உன்னிலிருந்து என்னை மீட்டு தந்துள்ளது காதல் நன்றி ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;777

பயப்பிடுகிறது இதயம் ...!!!

இதயத்தை நானே வெட்கப்படுகிறேன் என்னை தூக்கி எறிந்து உன்னை வைத்திருப்பதற்காக .... உனக்காகவே வாழ்கிறேன் எனக்காக நீ எப்போது வாழ்வாய் ...? கடிகாரத்தைப்போல் நம் காதல் எப்போது நிற்பாய் ..? பயப்பிடுகிறது இதயம் ...!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;776