உன் கண்ணால் காதல் கோலம் போடுகிறாய் -நான் அதற்கு வர்ணம் திட்டுகிறேன் காதலில் பூக்கள் சிரித்ததை விட வாடியதுதான் அதிகம் உனக்கு நான் காதலன் உறவு நீ எனக்கு என்ன உறவு ....? + கே இனியவன் - கஸல் 104
நீ வைரக்கல் மின்னுவதில் அழகாய் கொல்லுவதில்.... விஷமாய் இருகிறாய் ...!!! உன்னை சந்தித்தது சூரிய உதயம் ... உன்னை பிரிந்தது .... சூரிய அஸ்தமனம் ....!!! நீ என்னை விட்டு விலகமுன் உன் எண்ணங்களை ... என்னிலிருந்து விலக்கிவிட்டு ... செல் உயிரே ....!!! + கே இனியவன் - கஸல் 101
நீ வானவில் நான் இரவு எப்படி உன்னை நான் பார்ப்பது ...? கவிதை எழுதும் போது கற்பனை வரவில்லை என்றால் -உன்னை நினைப்பேன் நான் இறக்கவே மாட்டேன் என் இதயம் -உன் இதயத்துக்குள் மறைத்து வைத்திருக்கிறேன் + கே இனியவன் - கஸல் 102
நீ சிந்திவிடாத கண்ணீரை உனக்கும் சேர்த்து நானே சிந்துகிறேன் ....!!! என் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் தெருவிபத்து உன்னை நான் தெருவில் பார்த்தது என் தூக்கத்தை.... கனவு கலைக்கிறது... என் வாழ்கையை ... நீ கலைக்கிறாய் ....!!! + கே இனியவன் - கஸல் 103