இடுகைகள்

மார்ச் 26, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் காதல் சாம்பலானது ...!!!

என் காதல் கனவானது நான் கவிஞனானேன் ...!!! ஒரு சின்ன தீ பொறி இடத்தையே சாம்பலாக்கிடும்... உன் கண் பட்டு என் காதல் சாம்பலானது ...!!! நானும் ஒரு பிச்சைக்காரன் உன் பதிலை எதிர் பார்த்து ... பட்டினியுடன் இருக்கிறேன் ...!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;785

வர மறுக்கிறாய் ....!!!

எல்லோரும் காதல் செய்து தூர ... விலகுவர் - நானும் .. நீயும் தூர இருந்தும் .. அருகில் காதலிக்கிறோம் ...!!! கண்ணீரை ... கடலாக்கி காதல் கப்பல் ... விடுகிறேன் - நீயோ .. வர மறுக்கிறாய் ....!!! எத்தனை கவிதை ... எழுதினாலும் -நிகரில்லை ... உன் மௌன மொழிக்கு ... + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;784

இறுதி நொடியில் துடிக்கிறது ...!!!

உன் நினைவுகளின் ... வலையில் சிக்கி தவிக்கிறேன் ... வலையை அறுத்து என்னை ... மீட்டு விடு ....!!! தயவு செய்து காதல் ... தந்துவிடு - இல்லையேல் என் இதயத்தை எட்டி பார் ... இறுதி நொடியில் துடிக்கிறது ...!!! என் மனதை பார் ... நீ கனவில் தான் வந்தாய் ... நியமென்று பூரிக்கிறது ... அதற்கு எங்கே புரியபோகிறது ... என் காதலும் கனவுதான் ...!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;783

வலியிலும் இன்பம் தான் ...!!!

உன்னை நினைப்பதும் ... முள் பற்றைமேல் ... தூங்குவதும் ஒன்றுதான் ... வலியிலும் இன்பம் தான் ...!!! பட்டாம் பூச்சி ... அழகை பார்ப்பதில்லை ... இனிமையை தான் ரசிகிறது ... நீ எதற்கு அழகை ரசிகிராய் ...? வா அன்பே ... நாம் இருவரும் காதல் ... உலகம் படைப்போம் ... விண்ணுலகில் இடம் ... நிறைய இடம் உண்டு ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;782

கல்லறையில் காத்திருக்கிறேன்

உனக்கு என்ன தைரியம் ... நான் காதலிக்கிறேன் ... நீயோ எனக்கு பெண் ... பார்கிறாய் .....!!! என் இதயத்தில் ... இருந்து கொண்டே... எனக்கு வலிதருகிறாய் ... நீ என்னை ஏற்கும் ... நாள் விரைவில் வரும் ... கல்லறையில் காத்திருக்கிறேன் காதல் பூ மலரும் நீ சமர்பிப்பாய் .....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;781