இடுகைகள்

ஜூலை, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனியவன் கஸல் கவிதை 142

கப்பல் கனமாக .... இருந்தாலும் ..... தண்ணீரில் .... தள்ளாடும் ..... காதல் கனமாக .... இருந்தாலும் .... கண்ணீரில் .... தள்ளாடும் .....!!! நம் காதலுக்கு .. கண் தான் விதை .. கண்ணீர் தான் ... பாசனம் .....!!! பூவின் மீது .... வண்டுக்கு மோகம் .... பூவுக்கும் இருந்தால் .... இன்பம் .... வாடிய பூவில் ..... என்னபயன் .....? & கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 142

கவிப்புயல் இனியவன் கஸல் 141

காதல் சொல்லமுடியாத .... இன்பம் .... சொல்லி அழக்கூடிய... துன்பம் ....!!! நீ என்னைவிட .. அன்பானவள் ... அழகானவள் .. நிலையில்லாதவள் ...!!! நிலா கூட ..... பிரிவை ஏற்கவில்லை அமாவாசையாக .... மாறிவிட்டது .....!!! & கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 141

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 140

இதய பரிமாற்றத்தை நீ பண்டமாற்றாய்.... நினைத்து விட்டாய் ...!!! நான் வானம் .. நீ முகில் ... நான் நிலையாக .. நீ அசைந்து கொண்டு...!!! நான்கவிதையை .. உன்னைக்கொண்டு .. எழுதுகிறேன் .. நீயோ ... என்னை கொன்று .... எழுத வைக்கிறாய் ....!!! & கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 140

கஸல் கவிதை 1038

நான் இரவு நேர இதய .... காவலாளி ..... கனவில் கூட நீ வருவதை தடுக்க ....!!! உன் நினைவுகளால் ..... இதயத்தில் தாஷ்மஹால் ... காட்டுகிறேன் .... வலிகள் தான் செலவு ....!!! காற்றில் உரசும் .... மரக்கொப்புக்கு உள்ள .... இன்பம் கூட நமக்குள் .... இல்லை .....!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1038

கஸல் கவிதை 1037

வெள்ளத்தில் கத்தும் .... தவளைக்கு ஒரு இரவு .... இன்பம் ..... உன்னை பார்த்த .... ஒரு இரவு எனக்கு .... துன்பம் .....!!! ஈர்ப்பால் கோள்கள் .... சுற்றுகிறது .... மோதியத்தில்லை .... உன் ஈர்ப்பில் ... சுற்றும் நான் .... காயப்பட்டு விட்டேன் ...!!! ரோஜா சிவப்பு .... கொடுத்த இதயத்தில் .... இரத்தம் வடிவத்தால் ....!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1037

முள்ளில் மலர்ந்த பூக்கள் 1036

வலமிருந்து .... இடமாக காதல் ... தேவதையை சுற்றி .... வரவேண்டும் .....(+) நம் காதல் தோஷம் .... இடமிருந்து வலமாக .... சுற்றுகிறேன் .......!!!(-) வாடி விழும் பூவின் .... நெத்து மரமாகி .... மீண்டும் பூக்கும் ...(+) நீ  வாடித்தான் .... விழுந்தாய் ...... பூவின் மென்மை கூட ..... உன்னில் இல்லை ....!!!(-) அடுத்த ஜென்மத்தில் .... என் இதயத்தை .... ஈரமாக படைக்காதே ...(-) வீரமாக படைத்து விடு ....!!!(+) & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1036

கஸல்;139

பட்டுப்போன மரத்தில் .... அங்கங்கே பாசி ..... பிடித்திருப்பதுபோல் .... உன் நினைவுகள் ... இதயத்தில் ஒட்டி .... இருக்கத்தான் செய்கிறது ....!!! ஒவ்வொரு இரவும் .. எனக்கு வேலை உன்னை கனவில் தேடுவதும் ஏமாறுவதும் தான் ...!!! நீ மௌனமாக இரு .. என்னையும் மௌனமாக்கிவிட்டு .... நீ  மௌனமாக இரு .....!!! கஸல்;139

கஸல்;138

இதய முகவரியை .... தொலைத்த உனக்கு .... இல்ல முகவரி எப்படி ...? நினைவுவரும் ....? நீ விடும் ஒவ்வொரு கண்ணீரும் காதலின் ஆழமறியாத ஆழத்தை அறிய முற்படுகிறது ....!!! உன்னை சுவாசிக்கிறேன் நீ என்னை வாசிக்கிறாய் காதல் உணரக்கூடிய உணரமுடியாத உறவு ....!!! கஸல்;138

சமுதாய கஸல் கவிதை

சண்டை போடுவதாயின்... சட்ட சபையில் போடுங்கள்... வீட்டில் சண்டை போட்டால்... சட்டம் தன் கடமையை... செய்யும்........!!! சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் ^^^^^ பகல் முழுவதும்.. தன்னை கஷரப்படுதி... உழைக்கிறான்..... இரவு குடும்பத்தை... கஷ்ரப்படுத்துகிறான்....!!! சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் ^^^^^ ஆடம்பர வீடு... அழகாக இருக்கிறது... வீட்டில் இருக்கும்... சில்லறை காசு ... துர் நாற்றம் வீசுகிறது....! சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்

கஸல்;137

உள்ளத்தில் காதல்.....! வேண்டாம் ‍போதும்..... அவஸ்தை...... தயவு செய்து இன்னும்...... கொஞ்சம் காயப்படுத்து..... உன்னை நினைத்தபடி வாழ‌....!!!  ஒவ்வொரு இமை.... சிமிட்டலும் உன்னை.... நான் இழப்பதாகவே.... வருந்துகிறேன்... கண்சிமிட்டும் ... நேரம் வராதே....!!! காதல் என்பது.... உடல் முழுவதும்.... உள்ளமாக‌ மாறும்... இயற்கை நிகழ்வு.....!!! கஸல்;137

கஸல் ;136

மனம் உன் பார்வையால் உடைந்து சிதறி விட்ட்து கவலைப்படவில்லை உடைத்தது நீ காதலில் மின் சுழற்சியில் வருவதுபோல் வருகிறாய் எப்போது நிரந்தரமாக‌ வரப்போகிறாய் ...? உன் அன்பு உன்னையும்..... கடந்து என்மீது பட்டதால்.... இந்தவலி.....!!! கஸல் ;136

கஸல் ;135

வயலில் புற்கலாக‌ வளர்கின்றன‍ நான் பசுவாக‌ நின்று மேய்கிறேன் கண்சிமிட்டும் நேரம் பார்த்துவந்தாய் நான் புகைப்படமாக‌ உன்னை வைத்திருக்கிறேன் இதயத்தில் கண்ணில் உன்னை இனிபார்க்க‌ துடிக்க‌ மாட்டேன் என் இதயத்தை பார்ப்பேன் கஸல் ;135

K .Iniyavan கஸல் ;134

 நீ சிந்திவிடக்கூடாத கண்ணீர் -நான் சிந்திக்கிறேன் கண்ணீர் வருகிறது என் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் தெருவிபத்து உன்னை நான் தெருவில் பார்த்தது என் தூக்கத்தை கனவு கலைக்கிறது என் நினைவை நீ கலைக்கிறாய் கஸல் ;134

முள்ளில் மலர்ந்த பூக்கள் 32

அப்படியே நினைத்து பார்க்கவே .... பயமாக இருக்கிறது நம் காதலை .....!!! ஓடாமல் இருக்கும் மணிக்கூட்டில் நான் ... நிமிட முள்ளாய் ... இருந்தென்ன பயன் ....? அணைத்தேன் துன்பம் ... அழைத்தேன் இன்பம் நீ அருகில் இருப்பதை ... விட தூர இரு .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1032

முள்ளில் மலர்ந்த பூக்கள் 31

நீ காதல் விளக்கு... அருகில் வருகிறேன்..... அணைந்து விடுகிறாய் ....!!! ஒற்றை பார்வை .... பார்த்தாய் அதுதான் .... ஒற்றையாய் நிற்கிறேன் ....!!! கறை படிந்த துணியில் .... அழுக்கு இருப்பதுபோல் .... என் இதயத்தில் நீ .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1031

முள்ளில் மலர்ந்த பூக்கள் 30

உன் இதய சிறை கைதி நான் .... நினைவுகளால் மீண்டும் ... விலங்கிடாதே .....!!! உன் பார்வையால் ... கவிஞனாகினேன் .... நீ காதலித்தால் ... பித்தனாகிவிடுவேன் ....!!! உன் கண்ணில் காதல் .... இல்லை - கண்ணாடியை .... பார் உன் கண்ணுக்குள் .... நான் இல்லை .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1030

முள்ளில் மலர்ந்த பூக்கள் 29

நிச்சயமாக நீ என் நினைவுகளால் .... வதைக்கப்படுகிறாய் .... இங்கு என் இதயம் ... கண்ணீர் விடுகிறது ....!!! என் இதயம் .... வீதியோர சுமைதாங்கி .... இறக்கிவை உன் சுமையை ... காதல் ... ஊதும் பலூனுனை போல் .... அளவாக காற்றை .... ஊதவேண்டும் .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1029

முள்ளில் மலர்ந்த பூக்கள் 28

உன்னை காதலிக்கும் .... போதே கற்று விட்டேன் ..... நீ தரும் வலியை எப்படி .... சுமப்பதென்று .....!!! உனக்கு என் ஞாபகங்கள் .... பறக்கும் பஞ்சு .... எனக்கு தலையணை பஞ்சு .... தினமும் அதில் தூங்குகிறேன் ....!!! காதல் இரு வழி பாதை .... எனக்கோ இரு வலி பாதை .... உன்னையும் சுமக்கிறேன் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1028