இடுகைகள்

ஏப்ரல் 30, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முள்ளில் மலர்ந்த பூக்கள் 10

உன் சிரிப்பு ... மற்றவர்களுக்கு ... சிதறும் சில்லறை ... எனக்கு நெற்றி பொட்டுக்காசு.....!!! காதல் இழப்பை கொண்டுவரும் .... உன்னையே இழக்கவைக்கும் ... என்று நினைக்கவில்லை ....!!! என்றோ ... ஒருநாள் நீ என்னை .... திரும்பி பார்ப்பாய் .... அப்போது நான் .... மாலையுடன் இருப்பேன் ... உயிரோடு இருக்கமாட்டேன் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K  A 0AO 1010

முள்ளில் மலர்ந்த பூக்கள் 09

காதலுக்கு கண் ... இல்லை என்பார்கள் .... உனக்கு இதயமே ... இல்லையே....!!! என்னை விட்டு போ .... கவலையில்லை ... என்னையும் கூட்டி ... செல்வதில் உனக்கென்ன ... கவலை ....? நீ என்னருகில் இல்லாத .... போதெலாம் -நான் ஓடாத மணிக்கூடு ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K A 00 I 1009

- முள்ளில் மலர்ந்த பூக்கள் 08

உன் நினைவு வலையால் ... சிக்கி தவிக்கும் நான் ... பூச்சி -நீ சிலந்தி கௌவ்வி எடுத்துவிடு ....!!! கடலோர பாதம் ... கரைந்ததுபோல் ... நம் காதலும் ... கரைந்து விட்டது ...!!! நீ எனக்கு பாசக்கயிறா ....? பாசாங்குவேஷக்கயிறா....? ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K A 00 H 1008

முள்ளில் மலர்ந்த பூக்கள் 07

குங்குமம் போல் .... சிவந்த முகத்துடன் .... சிரித்து பேசியவள் .... குங்கும பொட்டோடு ... குனிந்து நிற்கிறாள் ....!!! கொன்றால் பாவம் .... அப்போ என்னை ... காதலால் கொன்றவள் ... நீயும் பாவி .....!!! உன் .. காதல் தோட்டத்தில் ... என்னை சருகாக .... ஏற்றுக்கொள் .... உரமாக என் காதலை .... வளர்க்கிறேன் ....!!!