இடுகைகள்

அக்டோபர் 24, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
படம்
படம்
படம்

கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் கஸல் - 875

காதல் மலர் போல் .... காலையில் அழகாய் .... மாலையில் வாடிவிடும் .... என்றாலும் காதல் ... அழகும் மென்மையும் ....!!! மரணத்தில் கூட நாம் இணைய முடியாது நீ உள்ளூர் மயானத்தில் ... நான் வெளியூர் மயானத்தில் ....!!! உன்னைப்போல் காதலிக்க ... தெரியாத உள்ளமும் ஒரு .... அங்கவீனம் தான் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 875

கஸல் - 874

ஓராயிரம்... நினைவுகளுடன் .... ஆழமான  துயரத்துடன்... நிகழ்ந்து விட்டது ... நம் பிரிவு......!!! நீ என்னை மறந்து போய் நினைத்திருக்கலாம் இப்போதான் உனக்கு ... காதல் புரிந்திருக்கும் ....!!! ஒப்பாரி என்றால் என்ன ...? இப்போது புரிந்தது எனக்கு ... உன் ஒவ்வொரு செயலும் ... என் காதலுக்கு ஒப்பாரிதான் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 874

கஸல் - 873

உன்னை காதலித்து ... நானும் கற்றுகொண்டேன் .... எப்படி வலிக்காமல் .... மறப்பதென்று ....!!! உன்னை நினைக்காமல் .... கவிதை எழுத முயற்சித்தேன் ... வெற்றிபெற்றது -நீ இக்கரைக்கு அக்கரை பச்சை - நீ அடிக்கடி இப்படிதான் ,,, ஏமாற்றுகிறாய் ,,,,, ஒருமுறை என்னை காதலித்துப்பார் ,,,, பலஜென்மம் என்னை ... காதலிப்பாய் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 873

கஸல் - 872

நீ என் மூச்சாக இருந்த .... காலமெல்லாம் நான் .... உன் உயிராக இருந்தேன் .... நீ மூச்சை நிறுத்தினாய் ... காதல் இறந்தது ....!!! இதயத்தில் ரோஜாவை .... வளரவிடாமல் -எதற்கு ..? முள்ளை வளர்கிறாய் ....? நீடூடி வாழ்க .... வாழ்த்துவோர் உள்ளார் ... நீடூடி காதல் வாழ்க ... வாழ்த்துவோர் யாரும் இல்லை ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 872