இடுகைகள்

பிப்ரவரி 1, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயல் இனியவன் கஸல் - 955

இயற்கை பூவை .... காட்டிலும் .... நம் காதல் பூ விரைவாக வாடிவிட்டது .....!!! நீ கவலையோடு .... மூச்சு விடாதே .... இதயம் கருகிவிடும் ....!!! நாகம் கொடிய விஷம் யார் சொன்னது ...? உன் நகம் சுண்டும் .... ஓசையை விட வா ..? ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 955

கவிப்புயல் இனியவன் கஸல் - 954

நான் சிப்பிக்குள் இருக்கும் முத்து நீ சிப்பிக்கு வெளியே சேறு.....!!! உன்னுடன் சேகரித்த காயங்களுடன் .... காலமெல்லாம் காதலுடன் வாழ்வேன் ....!!! உன்னால் .... அழுது அழுது இமைகள் .... கூட அழுவதற்கு .... கற்று விட்டன ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 954

கவிப்புயல் இனியவன் கஸல் - 953

எதற்கும் அஞ்சாதவன் .... உன் கண்ணுக்கு ... அஞ்சுகிறேன்......!!! நான்.... காதலில்  .... உயிரெழுத்து ...... நீ ஆயுத எழுத்து ....!!! அரசியலில் -நீ பேசியிருந்தால் ... வென்றிருப்பாய் .... காதலில் பேசியதால் ... தோற்று விட்டாய் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 953

கவிப்புயல் இனியவன் கஸல் - 952

நீ  காதலை .... சொல்லமுதல் .... நான் இன்பமாய் .... இருந்தேன் ....!!! உன் பார்வை  எனக்கு அவசர சிகிச்சை  மருத்துவ மனை .... உன் வார்த்தை  நோய் காக்கும் மருந்து ...!!! நீ  சவக்குழி .... நான்  சவம் என்னை ... உன்னில் புதைத்துவிடு ...!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 952

கவிப்புயல் இனியவன் கஸல் - 951

உன் கண்கள் ... எனக்கு கை விலங்கு.... உன் பார்வை எனக்கு பாடை ....!!! காதல் ஒரு வினோத உலகம் ... கவலைகள் மூலதனம் கண்ணீர் அதன் சொத்து .... மூலதனம் சொத்துக்கு சமன் ........!!! கண்ணீர் துளியால் கவிதை எழுதுகிறேன் பன்னீர் தெளிக்க ஆசைப்படுகிறாய் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 951