இடுகைகள்

ஜனவரி 25, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயல் இனியவன் கஸல் - 950

உன்னிடம் இருந்து ... கற்று கொண்டேன் ... பிரிவு வரும் போது .... சிரித்து விட்டு செல்ல ....!!! மூச்சு  திணறுகிறேன் ....! என்னை நினைக்கிறாயா ...? திட்டுகிறாயா ...? பூக்கும்  வரை காத்திருந்த  வண்டு வாடிப்போனது .... பூவில் தேனில்லாமல் ... நான் உன்னிடத்தில் ... வாடியதுபோல் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 950

கவிப்புயல் இனியவன் கஸல் - 949

உன்னை பகலில் .... பார்ப்பதை விட .... இரவில் பார்ப்பதே .... அதிகம்.... அந்தளவுக்கு இருண்டு .... காணப்படுகிறது .... காதல் .....!!! காதல் குப்பை - நான் நீ உருண்டோடும் ... வெள்ளம் .... அப்படியென்றாலும் ... என்னை உன்னோடு ... அழைத்துச்செல் ....!!! ஆயுள் வரை காத்திருப்பேன்.... நீ காதலிக்க தயார் என்றால் ....!!!  ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 949

கவிப்புயல் இனியவன் கஸல் - 948

எனக்கு காதல் புதிரானது கண்ணீர் பன்னீரானது வார்த்தைகள் காயங்கள் ஆனது ....!!! நான் உன் கண்ணில்... ஒளியை தேடுகிறேன் ... நீயோ என் கண்ணில் ... ஒளியை பறிக்கிறாய் ....!!! தயவு செய்து பேசிவிடாதே -உன் மௌனத்தில் இன்பம் காண்கிறேன் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 948

கவிப்புயல் இனியவன் கஸல் - 947

நேரில் மௌனம் கனவில் பேச்சாளர் எத்தனை நாட்களுக்கு இந்த தண்டனை ...? அவ்வப்போது முகில் வந்து நிலாவை மறைப்பதுபோல் ... உன் வருகை ....!!! பூவின் இதழ்கள் உதிர்வதுபோல் உன் நினைவுகள் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 947

கவிப்புயல் இனியவன் கஸல் - 946

நீ சொல்ல தவிர்க்கும் -சொல் நான் தவிக்கும் -சொல் காதல் ....!!! உன்னால் கொஞ்சம் பன்னீர் கொஞ்சம் கண்ணீர் தவிக்கிறேன் ....!!! இரண்டு இதயங்கள் கண் மூடி உறி உடைத்த கதை நம் காதல் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 946