இடுகைகள்

செப்டம்பர் 8, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதையும் வினாவும் விடை தாருங்கள்-02

அவர் வரும்போது ..... கையாட்கள் பலர் ..... கைகூப்புவோர் பலர் .... செருக்கோடு சிரித்தும் .... சிரிக்காததுமாய் செல்வார் ....!!! அடுத்த வேளைக்கு.... உணவுக்காய் அங்கலாக்கும் .... இவன் வரும்போது .... போ போ தூரப்போ என்று .... துரத்தும் கைகள் அதிகம் .... வறுமையால் பணிவுடன் ... ஒதுங்குவான் ....!!! இருவரும் ஒருநாள் .... ஒரே இடத்தில் சந்திப்பார் .... கை கூப்பியவரும் துணையில்லை .... கை விரட்டியவனும் துணையில்லை ..... * * * * * * * * * * * * இருவரும் சந்தித்த அந்த இடம் எது ...?

கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்

என்னுயிர் நண்பா ..... உன்னை விட்டு யாரிடம் .... பகிர்வேன் என் உணர்வை ...? மனதிலே துன்பம் வரும்போது ..... என்னோடு இருந்து அழும் ... ஒரே ஜீவன் நீதானே .... இன்பம் வரும்போதும் ... என்னோடு இருந்து .... சிரிக்கும் ஜீவனும் நீதான் ....!!! ஒரே ஒரு கவலை உன்னால் ..... நான் அழும்போது தான் அழுகிறாய் .... நான் சிரிக்கும் போதுதான் சிரிக்கிறாய் .... எப்போது என்னை நீ அழவைப்பாய்....? எப்போது என்னை சிரிக்க வைப்பாய் ...? எப்படி உன்னால் முடிகிறது ...? என் உணர்வுகளை அப்படியே... எனக்கு காட்டுகிறாய் ....? என்மீது கொண்ட கோபத்தால் .... உன்னை அடித்துவிட்டேன் ..... எனது கையில் குருதி .... உனது இதயம் சுக்குநூறாகியது.....!!! * * * * * * * * * * * * * * * * * * * என் அந்த நண்பன் யாராக இருக்கமுடியும் ...?

வலம்புரி நாளிதழில் என் கவிதை

அம்மா கவிதை அம்மா - இறைவனின் உன்னத படைப்பு ....  அம்மா - இறைவனாக பார்க்கப்படும் பிறப்பு ....  அம்மா - ஒவ்வொரு இதயத்திலிருக்கும் சாமி .....  அம்மா - இன்ப துன்பத்தை தாங்கும் கடவுள் ....  அம்மா - எல்லா உயிரினங்களின் மூல கடவுள் ....!!!  என்று தொடரும் இந்த கவிதை   சென்ற வாரம் 06.09.2015 அன்று யாழ்ப்பாணம் தினசரி பத்திரிகையில் பிரபல பத்திரிக்கை  ஒன்றான வலம்புரி நாளிதழில் " ஈழத்து கவிஞர்கள்   ' பக்கத்தில் பிரசுரித்தார்கள் . மிக்க நன்றி .  இந்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி  கே இனியவன் 

கொக்குபோல் காத்திருப்பேன் - கஸல்

சாமியை நினைத்ததை .... காட்டிலும் உன்னை .... நினைத்தததே அதிகம் .... வரம் கிடைக்கவில்லை ....!!! காதல் பாவமா ...? புண்ணியமா ...? பிறவி பயனா...? பிறவி துன்பமா ...? எதுவென்று நீ ... சொல்லிவிட்டு போ ....!!! என்றோ ஒருனாள் .... என்னிடம் அகப்படுவாய் ... கொக்குபோல் .... காத்திருப்பேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 850

நீதான் முகவரி மாறிவிடாதே - கஸல்

நான் காதலில் கண்ணாடி நீ கருங்கல் .... அருகில் வர பயமாய் ... இருக்கிறது ....!!! நான் வெறும் கடிதம் நீதான் முகவரி ... மாறிவிடாதே ....!!! கண்ணுக்குள் .... வந்த நீ எதற்கு ...? கண்ணீராய் வடிகிறாய்... அதை பன்னீராய் .... நினைக்கிறேன்....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 849

என்னை வெறுக்கிறேன் - (கஸல்)

உன்னைத்தான் வெறுத்தேன் ஏன்...? என்னை வெறுக்கிறேன் ... காதல் இப்படித்தானோ ..? நீ என் இதயத்தில் .... தூசியாக இருந்துவிடு ... அப்போதும் உன்னை ... துடைத்து எறிய மாட்டேன் ...!!! என் கண்ணீரும் ... கடல் நீரும் ஒன்றுதான் .... அளவற்று இருக்கிறது ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 848