கஸல் - 877

கண்ணில் பட்டு கதலானாய் ....
கல்லறைவரை தொடருமென்றாய்....
கண்மூடி தனமாய் நம்பினேன் ...
கண்ணீர்தான் இறுதி பரிசு ....!!!

கிட்டவா காதல் பரிசு தா ....
கிள்ளி விட்டு போனபோது ....
கிள்ளியது என் இதயம் என்பதை ....
கிட்டிய காலத்தில் நீ திட்டியபோது ....
கிறுக்கணுக்கு  புரிந்தது ....!!!

காத்திருந்தேன் கவிதை வந்தது ....
காணாமல் போனாய் கவிதை வந்தது ....
காதல் பைத்தியம் என்றார்கள் ....
காதலித்து பாருங்கள் புரியும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 877

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

காதல் கஸல் கவிதை 1050

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்