இறந்தும் துடிக்கும் இதயம் 06

வீசும் காற்றில் ....
மரம் அசைகிறது .....
அழகாக இருக்கிறது ....
மரத்தின் வலி .....
யாருக்கு புரியும் ......!!!

கல்லில் கூட ஈரம் ....
இருப்பதால் பாசி .....
படர்கிறது .....
உன் இதயம் கல் கூட .....
இல்லையே .......!!!

கண்ணீரில் வேறுபாடு .....
இருப்பதே இல்லை .....
மனதின் வலிதான்.......
கண்ணீரை வேறுபடுத்தும் ....!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 

கருத்துகள்