முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் 01 - 10

எல்லாமே ...
கடந்துபோகும் ....
நீ மட்டும் ...
விதிவிலக்கா ....?

ஆயிரம் காலத்து ....
பயிர் -திருமணம் ....
காதலின் ஆயிரம் ....
நினைவுகளை ....
கொன்று நிறைவேறும் ...!!!

வாழ்க்கை ஒரு ....
நாடக மேடை ....
காதலர் ....
விட்டில் பூச்சிகள் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 01


------------

உன் 
எடையை ...
காட்டிலும் என் எடை ...
அதிகம் ...
உன் வலியையும்....
சுமப்பதால் .....!!!

காதல் ...
தோல்வியே இல்லை ....
நினைவுகளோடு ....
வாழ்பவனுக்கு .....!!!

நான் 
கிழிந்த காற்றாடியல்ல ...
விழுந்த காற்றாடி .....
உன் மூச்சுக்காற்று ....
போதும் நான் பறப்பதற்கு .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 02


----------

நீ தோளில் ...
சாய்ந்த போது....
இதயம் சுமையை ....
இறக்கியது ...!!!

ஒற்றை சிறகோடு ...
பறக்க சொல்கிறாய் ...
உனக்காக அதையும் ...
முயற்சிக்கிறேன் .....!!!

நம் காதல் ....
கண்பட்டுவிட்டது ....
சிதறு தேங்காய் போல் ...
உடைந்து விட்டது ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 03


--------

என்னவளை ...
அழகாக படைத்த ....
இறைவன் ....
காதல் இல்லாமல் ....
படைத்துவிட்டான் ....!!!

என் ...
கவிதைகள் ...
கள்ளியில் உள்ள முற்கள் ....
நீ காதலித்தால் ...
முற்கள் பூவாகும் ....!!!

காதல் இல்லாமல் ....
யாரும் இருக்க முடியாது ....
பிரம்மனின் படைப்பு ...
பிழைக்காக இருக்காது ...!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 04


-----------

நீ 
ரெம்ப அழகு ....
காதலையும் அழகாக ....
மாற்றிவிடு ....!!!

இறைவன் செய்த ....
மகா தவறு ....
எனக்கு காதலையும் ...
உனக்கு அழகையும் ....
கொடுத்தது ....!!!

ஆணை 
தும்பிக்கையால் ....
தலையில் மண் ....
வாரிப்போட்டதுபோல் ...
நான் உன் மேல் வைத்த ...
நம்பிக்கையால் காதலித்து ...
அவஸ்தை படுகிறேன் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 05


-------

ஆயிரம் முறை ....
திரும்பி பார்த்தவள் ...
இப்போ ....
குனிந்தபடி செல்கிறாள்....!!!

பூவை கொடுத்து ...
பூவாக வர்ணித்து ....
பூவையை காதலித்தேன் ....
உதிர்ந்து கொண்டிருக்கிறாள் ....!!!

என் கவிதையை ....
எல்லோரும் விரும்பவைத்த ....
உன் வலிகளுக்கு நன்றி ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 06


----------

குங்குமம் போல் ....
சிவந்த முகத்துடன் ....
சிரித்து பேசியவள் ....
குங்கும பொட்டோடு ...
குனிந்து நிற்கிறாள் ....!!!

கொன்றால் பாவம் ....
அப்போ என்னை ...
காதலால் கொன்றவள் ...
நீயும் பாவி .....!!!

உன் ..
காதல் தோட்டத்தில் ...
என்னை சருகாக ....
ஏற்றுக்கொள் ....
உரமாக என் காதலை ....
வளர்க்கிறேன் ....!!!


^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 07


---------

உன் 
நினைவு வலையால் ...
சிக்கி தவிக்கும் நான் ...
பூச்சி -நீ சிலந்தி 
கௌவ்வி எடுத்துவிடு ....!!!

கடலோர பாதம் ...
கரைந்ததுபோல் ...
நம் காதலும் ...
கரைந்து விட்டது ...!!!

நீ 
எனக்கு பாசக்கயிறா ....?
பாசாங்குவேஷக்கயிறா....?

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 08


-------

காதலுக்கு கண் ...
இல்லை என்பார்கள் ....
உனக்கு இதயமே ...
இல்லையே....!!!

என்னை விட்டு போ ....
கவலையில்லை ...
என்னையும் கூட்டி ...
செல்வதில் உனக்கென்ன ...
கவலை ....?

நீ 
என்னருகில் இல்லாத ....
போதெலாம் -நான் 
ஓடாத மணிக்கூடு ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 09


-------


உன் சிரிப்பு ...
மற்றவர்களுக்கு ...
சிதறும் சில்லறை ...
எனக்கு நெற்றி 
பொட்டுக்காசு.....!!!

காதல் 
இழப்பை கொண்டுவரும் ....
உன்னையே இழக்கவைக்கும் ...
என்று நினைக்கவில்லை ....!!!

என்றோ ...
ஒருநாள் நீ என்னை ....
திரும்பி பார்ப்பாய் ....
அப்போது நான் ....
மாலையுடன் இருப்பேன் ...
உயிரோடு இருக்கமாட்டேன் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 10

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்