கவிப்புயல் இனியவன் கஸல் 950 - 960

உன் கண்கள் ...
எனக்கு கை விலங்கு....
உன் பார்வை 
எனக்கு பாடை ....!!!

காதல் 
ஒரு வினோத உலகம் ...
கவலைகள் மூலதனம் 
கண்ணீர் அதன் சொத்து ....
மூலதனம் சொத்துக்கு
சமன் ........!!!

கண்ணீர் துளியால் 
கவிதை எழுதுகிறேன் 
பன்னீர் தெளிக்க 
ஆசைப்படுகிறாய் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 951

-----
நீ 
காதலை ....
சொல்லமுதல் ....
நான் இன்பமாய் ....
இருந்தேன் ....!!!

உன் பார்வை 
எனக்கு அவசர சிகிச்சை 
மருத்துவ மனை ....
உன் வார்த்தை 
நோய் காக்கும் மருந்து ...!!!

நீ 
சவக்குழி ....
நான் 
சவம் என்னை ...
உன்னில் புதைத்துவிடு ...!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 952

-----
எதற்கும் 
அஞ்சாதவன் ....
உன் கண்ணுக்கு ...
அஞ்சுகிறேன்......!!!

நான்....
காதலில் ....
உயிரெழுத்து ......
நீ 
ஆயுத எழுத்து ....!!!

அரசியலில் -நீ 
பேசியிருந்தால் ...
வென்றிருப்பாய் ....
காதலில் பேசியதால் ...
தோற்று விட்டாய் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 953

-----------
நான் 
சிப்பிக்குள் இருக்கும் 
முத்து 
நீ 
சிப்பிக்கு வெளியே 
சேறு.....!!!

உன்னுடன் 
சேகரித்த காயங்களுடன் ....
காலமெல்லாம் 
காதலுடன் வாழ்வேன் ....!!!

உன்னால் ....
அழுது அழுது இமைகள் ....
கூட அழுவதற்கு ....
கற்று விட்டன ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 954

------------
இயற்கை பூவை ....
காட்டிலும் ....
நம் காதல் பூ 
விரைவாக 
வாடிவிட்டது .....!!!

நீ 
கவலையோடு ....
மூச்சு விடாதே ....
இதயம் கருகிவிடும் ....!!!

நாகம் 
கொடிய விஷம் 
யார் சொன்னது ...?
உன் 
நகம் சுண்டும் ....
ஓசையை விட வா ..?

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 955

------------
நீ..... 
காதல் வீட்டில் இருந்து ...
கல் எறியாதே .....!!!

என்னை காயப்படுத்தி .....
உன்னால் வாழமுடியும் ....
என்றால் இன்னும் நல்லா ...
காயப்படுத்து ....!!!

நான் ..நீ ...காதல் 
ஒரு முச்சந்தி ....
சந்தித்தே ஆகவேண்டும் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 956

------------
நீ 
ஆழ்கடல் காதல் ....
அதில் தத்தளிக்கும் ....
சிறு ஓடம் நான் ....!!!

துப்பாக்கியால் ....
காயப்படுவதும் ....
உன் " கண்" படுவதும் ....
ஒன்றுதான் ....!!!

நீ 
கனவாய் இருக்கபார் ....
இல்லையேல் தூக்கமாக ....
வந்துவிடு ...
இல்லையென்றால் ...
காதலில் என்னபயன்...?

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 957

------------
உன்னை நினைத்து ...
நினைத்து -நான் 
அனாதையாகினேன்....!!!

நீ 
என் கண்ணீர் துளியில் 
நீச்சல் அடிக்கிறாய் ....!!!

உன்னை ....
என்னை கேட்காமல் ...
காதலித்த இதயத்தை....
நீ தந்த வலிகளால்...
தண்டிக்கிறேன் ....!!! 

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 958

------------
என் கண்ணீரில் ...
பூத்த கண்மணி ..
நீ .....!!!

உன் 
காதலோடு காணாமல் ....
போன ஆண்மகன் நான் ....!!!

குளம் வற்றியபின் ....
கொத்த காத்திருக்கும்... 
மீன் கொத்தி பறவை ...
நீ ......!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 959

---------
வாழ்க்கை ....
அடைமழை 
காதல் ....
வழிந்தோடும் ...
வெள்ளம் .....!!!

காற்றை போல் நீ 
எப்போது வருவாய் ...
எங்கே முடிவாய் ....?

காதலித்ததால் ....
கவிஞராவதில்லை ....
காதல் தோல்வியால் ....
கவிஞர் ஆகிறோம் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 960

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்