கவிப்புயல் இனியவன் கஸல் 0990 - 1000

உன்னை கண்டால் ....
என் கண்கள் தானாக ....
மூடுகின்றன ....!!!

நான் 
வெறும் கப்பல் ....
துடுப்பும் -நீ 
பாய்மரமும் நீ 
தள்ளாடும் கப்பலை ...
நிறுத்து ...!!!

காதல் 
மட்டும்தான் ...
கண்ணீரில் ...
பூக்கும் பூ ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 991
--------
நீ 
என்னை விட்டு ...
பிரிந்துவிட்டாய் ...
ஏன்...?
நினைவுகளை ...
தந்து கொல்கிறாய் ...?

என்னோடு ...
அருகில் இருந்த ...
என்னவளை ....
காணவில்லை ....!!!

காதல் 
விசித்திரமானது ...
கண்ணீரால் மட்டுமே ....
வளரும் பயிர் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 992

----------
நான் 
ஏக்கத்தோடு பார்க்கிறேன் ....
நீயோ ..
ஏமாற்றவே பார்க்கிறாய்...!!!

காதல் 
திருமணத்தில் முடிந்தால் ....
அழகுதான் ....
உன் திருமணத்தோடு .....
முடிந்துவிட்டது ....!!!

நீ 
என்னை விட்டு போகும் ...
நேரமெல்லாம் ....
உன்னை வரவழைக்கவே ...
கவிதை எழுதுகிறேன் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 993

-----------
நீ 
காதல் கவரி மான் ...
நான் கானல் நீர் ...!!!

நீ 
சொன்ன ...
நல்ல வார்த்தை ...
காதலிக்கிறேன் ...
என்பது மட்டுமே ....!!!

காதல் செய்யும் 
ஒவ்வொரு இதயமும் ...
சுமைதாங்கி ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 994

---------
உன் 
பார்வையை விட ...
நெருப்பொன்றும் ....
கொடுமையல்ல ...!!!

நிலவைப்போல் ...
நீ அழகுதான் ...
அடிக்கடி முகிலால்...
மறைகிறாயே....!!!

என் 
கண்ணீர்தான் ...
உன் ...
கல்யாணத்தில் ...
வைர அட்டியல் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 995
----------
நம் காதல் அழகு ...
நிலா போல் தூரத்தில் ....
இருந்து பார்க்கும்போது ....!!!

குருவி தன் குஞ்சை ....
பொத்தி பொத்தி ....
வளர்த்தாலும் -ஒருநாள் ....
உன்னைப்போல் விட்டு ....
பறக்கத்தான் போகிறது....!!!

காதலில் நீ 
காண்டாவன வெயில் ....
இடை இடையே ...
சிறு மழை போல் ....
என் நினைவுகள் உனக்கு ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 996
----------
காதல் 
கண்ணாடியை ....
உடைத்துவிட்டாய் ...
உடைந்த துண்டுகளில் ...
உன் முகம் ....!!!

நான் உன்ன ஞாபகம் ...
அதுதான் அடிக்கடி ...
என்னை மறக்கிறாய் ...!!!

தேன் 
வேண்டுமென்றால் ....
தேனியிடம் வலியை....
பெற வேண்டும் ...
காதல் வேண்டுமென்றால் ...
உன் வலி இருக்கும் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 997
-----------
இன்னும் காதலை -தா 
என்று கேட்கவில்லை ...
வலியை தா இன்னும் ...
உன்னை ஆழமாய் ...
காதல் செய்ய ...!!!

மறந்துபோய் ....
நினைத்துவிட்டேன் ....
உன்னை மறந்துவிடு ...
என்று நீ சொல்லியதையும் ...
மறந்து ....!!!

உனக்கும் எனக்கும் ....
நிறைய ஒற்றுமை ....
காதல் தான் நமக்குள் ...
வேறுபாடு ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 998
-------------
மோகத்தால் ...
வரும் சோகத்தை ....
விட்டில் பூச்சியிடம் ...
கற்று கொண்டேன்....!!!

என் இதயம் ...
எப்போதெல்லாம் ....
கலங்குகிறதோ....
அப்போதெலாம் ....
கவிதையாய் வருகிறாய் ...!!!

என் 
ஒவ்வொரு வலியும்....
உனக்கு எழுதும் ....
காதல் கவிதை ....!!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 999
-----------
நீ 
சொன்ன ஒரு வார்த்தை.... 
ஆயிரம் கஸல் கவிதையை ... 
தோற்றிவிட்டது ....!!! 

சுதந்திர பறவைகளை ... 
திறந்த சிறைச்சாலைக்குள் .... 
அடைத்துவிடும் .... 
காதல் ......!!! 


இதயங்களை .... 
இணைக்கும் .... 
சங்கிலி -காதல் ... 
துருப்பிடிக்காமல் .... 
பார்த்துக்கொள் .....!!! 


முள் மேல் பூ அழகானது ..... 
என் இதயத்தில் பூத்த .... 
முள் பூ நீ ................!!!! 


நீ 
காதலோடு...... 
விளையாட வில்லை .... 
என் 
மரணத்தோடு ..... 
விளையாடுகிறாய் ......!!! 




இது எனது 1000 கஸல் இத்தனை காலமும் 
ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் 
உளமான நன்றி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்