கவிப்புயல் இனியவன் கஸல் 560 - 580

காதலித்துப்பார் நீ 
காதலில் தோற்றுப்பார் நீ 
இரண்டும் செய்தால் நீ 
முழுமனிதனாவாய்....!!!

நீ 
என்னை விரும்பவில்லை 
உன் 
நிழல் என்னை விரும்புகிறது 
தொடக்கத்துக்கு இது போதும் 

காதலில் கல்லெறியும் 
சொல்லெறியும் 
காதலரின் உரம்தான் 
செடியாக நாம் இருந்தால் ....!!!

கஸல் ;561

------

நிலவோடு 
உன்னை ஒப்பிட்டேன் 
அமாவாசை ஆகிவிட்டாய் 

நெருப்புக்குதான் 
சுடும் பண்பு -நீ 
நீர் என் சுட்டெரிக்கிறாய் 
காதல் எல்லாவற்றையும் 
மாற்றும் ....!!!

அழுது புரண்டாலும் 
மாண்டார் திரும்பி வரார் 
காதல் அழுதால் தான் வரும் 

கஸல் ;562

-----

ஒற்றையடி பாதையால் 
உன் நினைப்பில் சென்றேன் 
ஒற்றை இதயத்தோடு அல்ல 
இரட்டை உடலோடும் 

உன்னை கண்டால் 
ஏங்கிய மனம் 
உன்னை கண்டு 
ஒழிக்கிறது ....!!!

காதல் சிலந்தி வலையில் 
அகப்பட்ட பூச்சிபோல் 
பூச்சியும் பாவம் 
சிலந்தியும் பாவம் ....!!!

கஸல் 563

-----

பகலில் சந்தித்தால் 
மறைந்து விடுகிறாய் 
இரவில் சந்தித்தால் 
பயப்பிடுகிறாய் 
காதலின் நேரம் 
நீ சொல் ....!!!

உருட்டு கட்டையால் 
உனக்காக அடிவாங்கினாலும் 
நான் கட்டையில் போகும் வரை 
நீ தான் கண்கண்ட காதலி 

காதலில் பூ வரவேண்டும் 
பிஞ்சு வரவேண்டும் 
காய் வந்து கனிய வேண்டும் 
நீ இன்னும் மரமாக கூட 
வரவில்லையே ....!!!

564

-----

பார்த்தேன் காதலித்தாய் 
பழகினேன் பேசினாய் 
பார்க்கிறேன் -ஏன்
திரும்பி போகிறாய் ....!!!

நிலவில் 
கால் வைக்கலாம் 
உன் நினைவில் கால் 
வைத்தால் சுடுகிறது ....!!!

உனக்காக இல்லை 
எனக்காகவும் இல்லை 
காதலுக்காக காதலிப்போம் 
வா அன்பே .....!!!

கஸல் ;565

------

நினைவுகள் காதலின் 
சிற்பங்கள் -நீ 
சிதைத்து கொண்டு 
இருக்கிறாய் 

நான் தனியாக தான் 
சென்று கொண்டிருந்தேன் 
இணைந்தது நீ 
விலகியதும் நீ 

வாடிவிழுந்த பூ 
ஆகி விட்டாய் 
மீண்டும் பூக்க 
வேண்டும் 
என்று துடிக்கிறாய் 

கஸல் ;566

-----
என்னை விட்டு நீ 
போய் விடு நான் 
காதல் 
இல்லாதவர்களை 
நான் காதலிப்பதில்லை ....!!!

என் கவிதைகள் உன்னை 
காயப்படுத்தவில்லை 
நீ காயப்படுத்தினாய் 
கவிதை காயப்படுத்தியது ...!!!

நான் பிறப்புக்கு முன் 
இருட்டறையில் 
உன்னை காதலித்த 
பின்னும் இருட்டறையில் ...!!!

கஸல் ; 567

-----

இறைவனின் தண்டனை 
உன்னை காதலித்தது 
காதலின் தண்டனை 
உன்னை நான் 
பிரிந்தது ....!!!

காதலின் மறைவிடம் 
கனவுதான் -அதில் 
கூட வரமறுக்கிறாய் ...!!!

நீ தந்த ரோஜாவில் 
ஒவ்வொரு முள்ளும் 
ரோஜாவால் வரவில்லை 
உன்னால் வந்தது ....!!!

கஸல் 568

-----

என் 
கவிதைகள் வலிக்கிறது 
என்கிறாய் வலிக்காமல் 
என்னசெய்யும் உன் செயலால் 

உன் காதலுக்கு அஞ்சி 
என் இருப்பிடத்தையே 
மாற்றி விட்டேன் 
காதலை மாற்ற 
முடியவில்லை .....!!!

உன் கண்ணால் என்னை 
பார்த்தேன் என் கண்ணால் 
நீ யாரை பார்க்கிறாய் ....!!!

கஸல் 569

-----

காதல் தூண்டில் நீ 
துடிக்கும் மீன் நான் 
என் தூண்டிலை ஏன்
கைவிட்டாய் ....!!!

நித்திரைக்கு போகமுன் 
நானும் ஒரு பிச்சை காரன் 
தான் - நினைவுகளால் ...!!!

உன் கண் உனக்கு கண் 
எனக்கோ கண்ணி வெடி ...!!!

கஸல் ;570 

----

கண்ணீர் தொடர்ந்தால்
கண் எரியும் 
உன் வலி தொடர்ந்தால் 
என் கவிதை எரியும் 

துடுப்பால் கப்பல் 
ஓடுகிறது 
உன் துடிப்பால் நான் 
வசிக்கிறேன் 
துடிப்பை நிறுத்தி 
விடாதே ....!!!

நாணயத்துக்கு இருபக்கம் 
உன் காதலுக்கும் இருபக்கம் 
நான் தான் தலையா பூவா 
விழும் என்று 
காத்திருக்கிறேன் 

கஸல் ;571
----

காதோரமும் 
பேசிப்பார்த்தேன் 
கண்ணோரமும் 
கதைத்து பார்த்தேன் 
காதலை மறுத்துவிட்டாய் 

காதலில் கற்பும் 
உயிரும் புனிதமானது 
இரண்டையும் எப்போதும் 
இழக்கமாட்டேன் 

உன்னை 
ஒப்பிட நிலாவை 
பயன்படுத்தினேன் 
நிலாவே அழுகிறது ....!!!

கஸல்572
-----------

நீ 
குழந்தை போல் அழுகிறாய் 
உன் 
இதயத்தை திருப்பி தா என்று 
நான் 
என் தொலைந்த இதயத்தை 
உன்னில் 
தேடுகிறேன் ......!!!

நானும் நீயும் பிடித்த குடை 
உன்னைப்போல் உடைந்து 
கிடக்கிறது ....!!!

கடற்கரை கல்லில் 
இருந்து கதைத்த இரு 
கற்கலில் ஒரு கல்லை 
கடல் அலை கொண்டு சென்று 
விட்டது போல் என் வாழ்க்கை ....!!!

கஸல் 573
--------------

தேடிக்கண்டு பிடித்த 
உன் காதலை -இப்போ 
தேடிக்கொண்டிருக்கிறேன் 

வாடி விழுத்த பூவை போல் 
நீயும் வாடி நிற்கிறாய் 
உனக்கு காதல் தந்த பூ 
சிரிக்கிறது 

நீயே காதல் செய்தாய் 
நீயே காதல் மறுத்தாய் 
நானோ நடைபிணமானேன்

கஸல் ;574
---------
நான் ஒய்வு எடுப்போம் 
என்றால் நீ கவிதையால் 
என்னை ஆக்கிரமிக்கிறாய் 

நம் காதல் இரண்டால் 
கட்டப்பட்டுள்ளது 
ஒன்று உயிர் 
மற்றையது மரணம் 
அவிழ்த்து விடாதே ....!!!

நீ சிரிக்கும்போது 
மறந்து விடுகிறது 
என் இதயம் என்னையே ....!!!

கஸல் 575 
----------


ஞானியும் காதலை
தேடுகிறார்
நானும் காதலை
தேடுகிறேன்
இப்போ உன்னை
தேடுகிறேன் ....!!!

நான் வெயிலில்
வாடுகிறேன் -நீ
தனிமையில்
வாடுகிறாய் .....!!!

சுடராக இருக்கிறேன்
நிழலாக நீ
நான் வந்தவுடன்
மறைகிறாய் .....!!!

கஸல் ;576
-----


என் காதல் கதை
நீர் குமிழி போல்
அழகானது -ஆனால்
ஆயுள் ....?

மறந்து இருந்தேன்
உன்னை கண்டவுடன்
மீண்டும் வந்தேன்
காதலிக்க அல்ல
மணமுடிக்க ....!!!

பசிக்கு அழும் குழந்தை
தாயைக்கண்டவுடன்
காணும் இன்பம் போல்
உன்னை கண்டவுடன்
நான் .....!!!

கஸல் 577
------------

அன்னம் போல் மனதை
காக்கைபோல்
ஆக்கிவிட்டாய்
காதல் ஒரு நாணயம் ...!!!

காதல் ஒரு வண்டி
இரு சில்லில் ஓடனும்
நீ ஒற்றை சில்லில்
ஓடவைக்கிறாய்

உனக்கு என்னை
தெரியும்
எனக்கு உன்னை
தெரியும்
காதலுக்கு யாரை
தெரியுமோ ...?

கஸல் ;578
----

நீ வானவில்
நான் மேகம்
திடீரென வருகிறாய்
திடீரென மறைகிறாய்

காதல் உணர்வானது
காதல் உணவானதல்ல
உண்டு முடிப்பதற்கு

இருக்கும் போது
மகிமை தெரியாது
காதலை தோற்றுப்பார்
மகிமை தெரியும் ....!!!

கஸல் 579
----------

எழுத்தை கூட்டி கூட்டி
கவிதை எழுதினேன்
நீ கவிதையை கூட்டி
எறிந்து விட்டாய் ....!!!

காதல்
பதில் சொல்லும்
தொடர்வதா
தோற்பதா ...?

நீ இரவில் அருகில்
இருந்தால் பகல்
இப்போ - பகலில்
இருந்தாலும்
இருளாய் இருக்கிறது ...!!!

கஸல் ;580

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்