கவிப்புயல் இனியவன் கஸல் 750 - 760

காற்றை
போல் உனக்கு ...
வாசமுமில்லை 
நிறமுமில்லை .....
காதலில் பயன் 
படுத்தாதே .....!!!

இரவின் கனவும் ...
உன் நினைவுகளால் ..
கண்ணீர் வரவைகிறது ...!!!

நான் 
உன் கண் இமையை....
ரசிக்கிறேன் நீயோ ...
அழித்து விடுகிறாய் ....!!!


கே இனியவன் கஸல் 
கவிதை ;751
--------

உன்னை 
காதலித்ததில் ....
நன்றாக அழுவதற்கு ...
கற்றுக்கொண்டேன் ...!!!

நீ வார்த்தையால் ..
சொன்னதை நான் ...
கண்ணீரால் எழுதுகிறேன் ...!!!

உனக்காக 
காத்திருந்த இரவுகளால் 
என் கருவிழி ...
வெண்மையாகிவிட்டது ...!!!

கே இனியவன் கஸல் 
கவிதை ;752
-----------
உன்னை நினைத்து 
அன்பாகத்தான் கவிதை ...
எழுதுகிறேன் ...
எப்படியோ வலியாக...
மாறி விடுகிறது ...!!!

காதலுக்கு 
மரணம் இல்லை ...
எப்படி நம் காதல் 
புதைகுழிக்குள் 
நடக்கிறது ....!!!

என்னை விட உலகில் 
ஏழை யாரும் இல்லை 
இன்ப வரிகளே 
வருகுதில்லை ......!!!

கே இனியவன் கஸல் 
கவிதை ;753
--------
கல்லை உரசி ...
நெருப்பு மூட்டியது அறிவு 
நீ என் கண்ணை...
உரசி காதல் தந்தாய் ...
அதுதான் சாம்பலானதோ...?

எனக்கும் உனக்கும் ....
உறவும் காதல் தான்.... 
பிரிவும் காதல் தான் ....!!!

சீ ....உனக்கு
காதலிக்க கூட ..
தெரியாது என்று ...
இழிவாக பேச ...
வைத்துவிட்டாய் .....!!!

கே இனியவன் கஸல் 
கவிதை ;754
----------
என்னை கொஞ்சம் ...
கொஞ்சமாக வருத்தவே ...
கவிதை எழுதுகிறேன் ....!!!

நீ 
புரிய முடியாத புதிர் 
நான் புரிந்தும் புரியாத 
காதல் புதிர் ...!!!

நீ என்னோடு ...
நடந்து வந்த தூரம் ...
பாதையில் குழி வரவில்லை ..
இதயம் பள்ளமாகவே ...
போய் விட்டது ....!!!


கே இனியவன் கஸல் 
கவிதை ;755
------------
என் காதல் 
இனிமையானது ...
இதயம் பாலாப்பழம்போல் ...
முட்களால் மூடியுள்ளது ....!!!

எனக்கு ஒரு உதவிசெய் ....
என்னை விட்டுவிடு ...
காதலை வைத்திரு ...!!!

இழந்தது 
கோடி கணக்கான ...
சொத்தென்றால் கலங்க ...
மாட்டேன் - கோடி இன்பம் 
தந்த காதலை ....!!!


கே இனியவன் கஸல் 
கவிதை ;756
---------
நீ 
என்னை விரும்மபில்லை ....
என் கவிதையையும் ...
விரும்பவில்லை - நீ 
இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!!

தூரத்தில் அழகானது ....
நிலா மட்டுமல்ல ....
காதலில்லாமல் இருக்கும் ...
என்னவளும் தான் ....!!!

கவிதை எழுதி எழுதி ...
ஞானியாகிவிட்டேன்....
தன்னை மறந்த நிலைதானே ...
ஞானம் .....!!!


கே இனியவன் கஸல் 
கவிதை ;757
-----------
எதையுமே விரும்பாத ...
உன்னை நான் விரும்பி ...
தொலைத்துவிட்டேன் ....!!!

கருங்கல்லில் -நீர் ...
வடியும் என்பதை ...
உன் காதலில் இருந்து ...
நம்பிவிட்டேன் ....!!!

பெண்ணை பற்றி நான் ....
கவிதை எழுதியதில்லை ...
உன்னை பற்றியே கவிதை ...
எழுதுகிறேன் ....!!!

கே இனியவன் கஸல் 
கவிதை ;758
--------
உன் 
இதயத்தில் காதல் 
நெல் விதைத்தேன் ...
புல்லாய் வளர்கிறது ....!!!

சிலந்தி வலைபோல் ...
அழகாக இருக்கிறது 
நம் காதல் -. நானோ 
சிக்கி தவிக்கிறேன் ...!!!

எத்தனையோ....
வடிவமாய் உன்னை ..
தரிசிக்க விரும்புகிறேன் ...
நீ காலனாய் வருகிறாய் ....!!!

கே இனியவன் கஸல் 
கவிதை ;759
-----------
வெள்ளத்தில் 
கரைந்த மண் போல் 
என் காதல் கண்ணீரில் 
கரைந்து போனது ....!!!

பேச்சும் மூச்சுமாய் ....
இருந்த நம் காதல் ...
இறுதி மூச்சை இழுத்த ..
வண்ணம் இருக்கிறது ....!!!

இதயம் மட்டும் ...
வெளியில் இருந்திருந்தால் ...
நிச்சயம் நீ அழுதிருப்பாய் ...
என்னை ஏற்றிருப்பாய்....!!!


கே இனியவன் கஸல் 
கவிதை ;760

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்