கவிப்புயல் இனியவன் கஸல் 800 - 810

இதயமும் கருகும் ....
இதயத்தில் இருப்பவர் ....
வெளியேறினால் ....!!!

மூச்சும் தீயாய் சுடும் ...
மூச்சாக நினைத்தவர் ...
முடிவு கட்டினால் ....!!!

நான் கோயில் ....
நீ அதில் தெய்வம் ...
அருள் தான் இல்லை ....
நீ வரம் தர மறுக்கிறாய் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;801

-----------

என் காதலுக்கு ...
என் கண் தான் கண்டம் ....
பார்த்தேன் அனுபவிக்கிறேன் ....!!!

நான் உன் மூச்சு ....
நீ கடைசி மூச்சு ...
விடும் வரை -நான் ...
இருப்பேன் .....!!!

நீ காதலை விட ..
அழகானவள் 
உன்னிடம் காதல் ....
எப்போது வரும் ....?

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;802

-----------

மது கொடியது ....
மாதுவும் கொடியது ....
காதல் எல்லாவற்றையும்....
விட கொடியது ....!!!

உயிரே ...
எண்ணத்தால் கவிதை ...
எழுதி - கண்ணீரால் ...
அழிக்கிறேன் ....!!!

தோல்வி ஒன்று ...
இல்லாவிட்டால் ....
காதல் என்ற ஒன்றுக்கு ....
மதிப்பு பூச்சியம் .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;803

----------
உன்னை காதலித்து ...
வெய்யிலில் பூத்த பூ ...
ஆகிவிட்டேன் .....!!!

உன்னை 
காதலித்த நாள் ....
ஆத்மா என்னை விட்டு ....
போய்விட்ட நாள் ....!!!

இருண்டிருக்கும் ...
இதயத்தின் சிறிய ஒளி ....
உன் நினைவுகள் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;804

----------
உனக்கு 
இரு வழிதான் உண்டு ...
என்னை காதலிப்பது ...
என்னை கொல்லவைப்பது....!!!

உன் புன்னகை ...
என் அனைத்து உறவையும் ...
எதிரியாக்கி விட்டது ....!!!

நான் இக்கரை ...
நீ அக்கரை 
அதுதான் நீ காதலில் ..
அக்கறையில்லை ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;805
------------

கற்கண்டாக இருந்த ....
இதயத்தை உப்புக்கல்....
ஆக்கிவிட்டாய் .....!!!

காதல் ...
பொது விதி ....
எனக்கு தலைவிதி....!!!

ஆசைக்கு....
அளவு வேண்டும் ....
நான் உன்னில் பேராசை ...
பட்டேன் இப்போ ...
படுகிறேன் .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;806
-----------
இதயம் துடிப்பதுக்கு ....
காரணமாய் இருந்த- நீ ...
ஏன் துடிக்கிறது ...?
என்றாக்கிவிட்டாய் ....!!!

ஒவ்வொரு துளி ....
கண்ணீருக்கும் - நீ 
காரணம் - மறுத்தாய் ...
கல்லறைக்கு காரணம் ...
சொல்வாய் .....!!!

காதல் பருவத்தின் ...
தற்செயல் மகிழ்ச்சி .....
எனக்கு காதல் ....
தற்செயல் நிகழ்ச்சி ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;807
-----------

நீ 
என் கவிதை ...!
சோகக்கவிதையாகவும் ...
அடிக்கடி வருகிறாய் ...!!!

நான் நுரையீரல் ....
அதனால் தான் -நீ 
மூச்சாய் வந்து வந்து ...
போகிறாய் ....!!!

காதல் 
முத்தாய் -நீ 
மூழ்கி எடுத்தேன் ....
செத்துபோனேன்....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;808
-----------
மீனைப்போல் ...
நீந்திக்கொண்டே ...
இருக்கிறேன் ....
காதல் தொட்டிக்குள் ...!!!

போ ..போ ...
என்னைவிட்டு போ ...
எப்படியும் என்னிடம் ...
நீ வந்தே ஆவாய் ...!
என்னைபோல் ...
காதலிக்க உலகில் ...
எந்த பைத்தியமும் ...
இல்லை .....!!!

என் 
ஒவ்வொரு துடிப்பும் ...
நீ வந்து போவதாய் ...
உணர்கிறேன் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;809
-----------
என்னை கண்டதும் 
உன் கண் ஓரத்தில் 
கண்ணீர் ....!!!

தரையில் துடிக்கும் ....
மீன் போல் துடிக்கிறேன் ...
வத்தல் குழம்பு வைக்க ...
நீ துடிக்கிறாய் ....!!!

உன் 
நினைவு வலையால் ....
பின்னப்பட்டு -மீன்போல் ...
துடிக்கிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;810

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்