கவிப்புயல் இனியவன் கஸல் 600 - 610

இதயத்தில் இருந்த
காதல் தீபத்தை அணைத்து
விட்டாய் - கரும் புகையாய்
நான் ....!!!

உன்னிடம் சேர்த்துவைத்த
நினைவுகள் எல்லாம்
வழிந்தோடுகிறது
இதயத்தில் இருந்து ....!!!

நீ
பிரிந்த போது
இழந்தவற்றை பெற்றேன்
காதல் மட்டும் உன்னிடம் ....!!!

கஸல் ;601
---------

வா கண்ணே
காதல் வழியே சென்று
காதலை மறப்போம்
நிம்மதியாக காதல் செய்வோம் ....!!!

பாவம் நம் காதல்
நேற்று நீ தவறாக
புரிந்த கற்பனையால்
விபத்துக்குள் சிக்கி விட்டது ....!!!

தண்ணீராய் நீ
பன்னீராய் நான்
பாவம் காதல் முழிக்கிறது ....!!!

கஸல் 602
---------

நிறைவேறாத ஆசையால்
காதல் வேதனை படுகிறது
உன்னை நினைத்து வேதனை
படவில்லை ....!!!

நான் அழுது காதலை
பெற்றேன் நீ
அழுது காதலை
தொலைக்கிறாய் ....!!!

உன் அழகை கிளியுடன்
ஒப்பிட்டேன் அப்போ
கிழிந்து போனது காதல் ....!!!

கஸல் 603

---------

கற்பூரம் எனக்கு
தீபம்
நிலைத்திருக்கிறேன் ...!!!

யோசித்து வருவதில்லை
காதல்
யோசிக்காமல் உன்னை
சந்தித்தேன்
உணர்ந்து கொண்டேன்
தவறை ....!!!

இளநீர் போல் உன்னை
இதயத்தில் வைத்திருக்கிறேன்
நீ கண்ணீராய் வருகிறாய் ...!!!

கஸல் 604
---------

சொல்
காதல் கடல் நீரா ...?
இளநீரா ..?
எனக்கு பன்னீர்
உனக்கு...?

ஒருபுறம் நினைவு
மறுபுறம் கனவு
நீ மகுடி
நான் பாம்பு
படாத பாடு படுகிறேன்....!!!

நீ அழுதத்தை
நம்பிவிட்டேன்
கண்ணீர் என்று ....!!!

கசல் 605
-------

என் முகத்தை
தொலைத்தேன்
உன் முகம் வருமென்று
என் முகமே இருந்தது ....!!!

ஞாபகங்களுக்கு
ஒரு வீடு கட்டினால்
அதில் நீ ஒரு ஒட்டறை
தட்டினாலும் வருவாய் ....!!!

என் உள் மூச்சு நீ
அதனால் தான்
வாழுகிறேன் உனக்கு
நான் வெளிமூச்சானேன் ....!!!

கஸல் 606
--------

உன்னை கணட நாள்
என் இறந்த நாள்
உன்னை பிரிந்த நாள்
உனக்கு பிறந்தநாள் ....!!!

காதல் எல்லோர் மனதில்
இருக்கும் அது போது விதி
இதையேன் புரியவில்லை- நீ

நான் இயற்கை காற்று
நீ இருக்கும் வரை
நானும் உன்னோடு
இருப்பேன் - காதலோடு

கஸல் 607
---------

என் பெயரின் ஒவ்வொரு
எழுத்தும் நீ
எழுத்து பிழை இல்லாமல்
இருந்தால் ....!!!

கண்ணீரைப்போல்
திடீரென வருகிறாய்
வழிந்தே போய்
விடுகிறாய் ...!!!

பகலில் இருக்கும்
நட்சத்திரம் போல்
இருக்கிறது உன்
ஞாபகம் .....!!!

கஸல் 608
-------

உன்னை கண்டவுடன்
நான் களவு போன
பொருளானேன் ....!!!

காதல் தோல்வியால்
விஷம் அருந்தினேன்
அதிலும் நீ
நிறுத்திவிட்டேன்
விஷ குடிப்பை ...!!!

இதயம் ஒரு
இரும்பென்றால்
நீ சொல்வதெல்லாம்
தாங்கும் ....!!!

கஸல் 609
---------

நீ பிரிந்தாய்
காதல் இலைதான்
உதிர்ந்ததே தவிர
காதல் மரமல்ல ....!!!

உன் நினைவுகளை
கனவு வலையாய்
பின்னி வைத்திருக்கிறேன்
நீ சிக்காமலா விடுவாய் ...!!!

உன் மௌனம்
தான் என் இதயத்தில்
காயத்தை ஏற்படுத்தியது
மருந்தும் நீதான் ...!!!

கஸல் 610

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்