கவிப்புயல் இனியவன் கஸல் 790 - 800

என் கவிதையின் 
விசிறி எழுத்து - நீ 
விசிறி விட்டு போய் ...
விட்டாய் .....!!!

விட்டு கொடுப்பது நல்லது ...
என்னை விட்டு கொடுத்தது ...
தப்பாய் போயிற்றே ...!!!

காதலில் விழலாம் ...
காதலே விழுந்துவிட்டதே ...
நமக்கு ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;791

---------

காதல் தோற்றத்துக்கு 
குற்றம் சொல்லேன் ...
உன்னை படைத்த ...
இறைவனை நிந்திக்கிறேன் ...!!!

என் கவிதைகள் 
உன்னை பற்றிய தீ 
பந்தங்கள் - கண்ணீரால் 
அணைக்கிறேன் ....!!!

நீ அழகு ...
உன் காதல் .....
அழகாகவில்லை...
காத்திருப்பேன் -உன் 
அழகு மறைந்தாலும் 
காதலுக்காய் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;792

----------

உலகமே காதலால் ...
இயங்குகிறது ....
அப்படிஎன்றால் நம் 
காதல் தோற்றதேன் ...?

பூவை தந்து காதல் 
செய்த நீ - ஏன்
வாடி விழுந்தாய் ...?

அழவும் ஆசையாய் 
இருக்கிறது - நீ 
சுட்டுவிரலால் கண்ணீரை 
துடைத்து விடுவதுபோல் ..
உன் நினைவால் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;793

------------

உன் 
சிரிப்பால் மலர்ந்த ...
காதல் - ஊர் சிரிக்கும்படி 
ஆகிவிட்டது ....!!!


ஓட்டபந்தயத்தில் ...
இறுதிநேரத்தில் இரண்டாம் ...
இடத்தை அடைந்ததுபோல் ...
என் காதல் ....!!!


என்னோடு வாழ்வாய் ...
என்றிருந்தேன் ...
எங்கிருந்தாலும் வாழ்க ..
என்று வாழ்க என 
வாழ்த்தவைத்துவிட்டாய் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;794

------------

என்னை 
தயவு செய்து .....
மரணமாக்கி விட்டு ....
நீ மௌனமாக இரு ...!!!

காதலையும் .....
காதலியையும் ......
மலரோடு ஒப்பிட்டது ...
தப்புதான் உயிரே ....!!!

உன் நினைவுகளால் ...
துருப்பிடித்து விட்டது ...
என் இதயம் - திருத்துவதும் 
துரத்துவதும் உன் கையில் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;795

-----------

உன் 
நினைவுகளை ...
எண்ண கயிற்றால் ...
கட்டுகிறேன் - நீ 
அறுத்து எறிகிறாயே ....!!!

காதல் கப்பலில் ...
வந்து விட்டு நீ 
மட்டும் நீந்தி சென்று ...
விட்டாயே ....!!!

நீ 
காதல் சூரியன் 
காலை உதயமாய் ...
மாலை அஸ்தமனமாய் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;796
----------

மகுடிக்கு தான் பாம்பு ...
படமெடுத்து ஆடும் ...
நீ பாம்பாய் இருந்து ..
மகுடியை ஆடவைகிறாய்....!!!

உன் நுனிநாக்கில் காதல் ...
என் அடிமனதில் காதல் ...
நம் காதல் இடைவெளி ....
இதுதான் ....!!!

உன் மௌனத்தை... 
காதலென்று தப்பாய் ...
நினைத்துவிட்டேன் ....
கண்ணீரால் கவிதை ...
வடிகிறது .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;797
-----------
உன்னை பூ என்று ...
வண்டாக சுற்றி வந்தேன் ...
நீ கடதாசி பூ ....!!!

கனவுலகில் 
வாழும் ஜீவன் ...
ஒரே ஜீவன் நான் ..
அதை குழப்பி விடாதே ...!!!

நீ வீசிய காதல் ...
வலையில் சிக்கி துடிக்கும் ...
காதல் மீன் நான் ...
நீ கருவாடு போடுகிறாய் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;798
-----------
உன் கண்ணீரில் ...
வெந்து துடிக்கும் ...
காதல் வண்டு நான் ...
அதுவும் சுகம் தான் ...!!!

ஆற்றில் நிழலாய் ...
விழுந்த நிலவை ....
காதல் என்று நினைத்தது ...
ஆற்றின் தப்புதானே ...!!!

புகை போல் ஊரில் ..
பரவிய நம் காதல் ...
நெருப்பாய் எரிந்து ...
சாம்பலாய் போய்விட்டது ....!!!
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;799
------------
நான் 
எழுதிய கவிதையை ...
நீ ஒரு நிமிட கனவாக்கி ....
கலைத்து விட்டாய் ....!!!

நீ 
என்னை காதலிக்கிறாய் ...
திமிர்பிடித்து அலைந்தேன் ...
தீக்குச்சியின் கதையானேன் ...
உன் திருமணத்தால் ....!!!

பயணத்தில் உன்னை ..
கண்டேன் காதலித்தேன் ...
பயணம் முடிந்ததுபோல் ...
காதலும் முடிந்தது .....!!!

இறைவா ...
எனக்கு மரணத்தை கொடு ...
இல்லையேல் அவளின் ...
கனவையாவது கொடு ...
வதைக்காதே .....!!!

நீ 
சொல்ல கூடாத ஒரு சொல் ...
நான் உன்னிடம் கேட்ககூடாத ...
ஒரு சொல் - காதல் 
இருவரும் பிரிந்தபோது ....
புரிந்தது .....!!!

+

கே இனியவனின் கஸல்
தொடர்கிறது காதல் கவிதை 
800 வது பதிவு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்