கவிப்புயல் இனியவன் கஸல் 610 - 630

இறைவனை வணங்குவது 
போல் காதலை வணங்கினேன் 
அவனிடன் இருந்துதானே 
காதல் பிறந்தது ....!!!

வாடி விழும் பூவை 
போல் ஆக்கிவிட்டாய் 
காதலை -என்றாலும் 
என்னில் தளிர் இருக்கிறது ...!!!

நீ கண் சிமிட்டும் 
ஒவ்வொரு நொடியும் 
எனக்கு இதய வலிதான்
என் கண் மூடும் வரை ....!!!

கஸல் 611

****

என் கவிதைகள் 
உனக்கு வரிகள் 
எனக்கு நீ தந்த 
வலிகள் -என்றாலும் 
தொடரும் -என் 
காதலைப்போல் ...!!!

வா ......!!!!!!
காதல் இல்லாத 
கிரகத்தில் போய் 
காதலிப்போம் -அப்போது 
என்றாலும் உனக்கு காதல் 
வருமா என்று பார்ப்போம் ....!!!

உன் பார்வையால் 
பாடையில் போனவன் நான் 
மீண்டும் ஒருமுறை பார்த்து 
என்னை உயிர்ப்பித்து விடாதே ....!!!

கஸல் 612

------
நீ காதல் நினைவாக 
தந்த ரோஜா செடி 
பூக்கிறது -நீ தான் 
இப்போ வாடிவிட்டாய் ...!!!

நீ கனவில் வருவாய் 
என்பதற்காக தூங்காமல் 
இருக்கிறேன் -கொஞ்சம் 
நிம்மதிக்காக ....!!!

நீ என்னை பார்த்ததனால் 
என் கண்கள் பார்வை 
இழந்து தவிக்கிறது 
நான் காதலுக்காய் 
தவிக்கிறேன் .....!!!

கஸல் 613

காதலுக்காய் துடிக்கும் 
மண்புழு நான் 
நீ தூண்டில் போட்டு 
விளையாடுகிறாய் ....!!!

உன் கண் உனக்கு 
பார்வைக்கு -எனக்கோ 
பாடைக்கு ....!!!

உன்னை காதலிக்கும் 
போதே கவிதையை 
காதலித்ததால் உன் 
பிரிவு என்னை கலங்க 
வைக்கவில்லை ....!!!

கஸல் 614

புகையிரத பாதைபோல் 
நம் காதல் இடைக்கிடையே 
இணைகிறது ....!!!

நீ கோபப்படும் போது 
என் கவிதையும் 
கோபப்படுகிறது ....!!!

உனக்காக 
காத்திருக்கிறேன் 
வீதியில் அல்ல 
கனவில் நிச்சயம் வருவாய் ...!!!

கஸல் 615

சிப்பிக்குள் முத்தாய் 
உன்னை நினைத்தேன் 
வெறும் சிப்பியாக்கி 
விட்டாய் .....!!!

மேகம் எப்போதும் 
இருளாய் இருக்க 
போவதில்லை 
நீயும் வெளிச்சமாவாய் ....!!!

உன்னை கண்டவுடன் 
காதல் வர வேண்டும் 
கண்ணீர் வருகிறதே ....!!!

என் கஸல் தொடர் 616

உயிராய் காதலித்தேன் 
உயிரே என்று அழைத்தேன் 
உயிரையே கேட்கிறாயே ...!!!

இருகை சேர்ந்தால் ஓசை 
இரு இதயம் 
சேர்ந்தால் காதல் 
ஒருகை ஓசையாய் நீ ...!!!

இரவில் வந்தால்- நீ 
உன்னை கனவில்
காண்பேன் நீயோ 
இன்னும் இருளில் 
இருக்கிறாய் .....!!!

கஸல் 617

ஒன்றில் காதல் 
வாழவேண்டும் 
அல்லது சாக வேண்டும் 
நம் காதல் இரண்டும் 
கெட்ட நிலையில் ....!!!

எனக்காக செலவு செய்த 
நிமிடத்தைவிட 
உனக்காக செலவு செய்த 
நிமிடம் அதிகம் 
இப்பவும் நீ 
இல்லாத போதும் ....!!!

காதலில் ஒருநிமிடம் 
பிறப்பும் இறப்பும் 
வருவதுபோல் 
உன் வார்த்தையும் 
இருக்கிறது .....!!!

கஸல் 618

நீ வெந்நீராக இருந்தாலும் 
தண்ணீராக இருந்தாலும் 
என் காதல் 
தாகம் தீரவில்லை ....!!!

காதலுக்கு இதயம் 
தேவை - நீயும் 
இதயம் வைத்திருக்கிறாய் 
கருங் கல்லாக ....!!!

ஒற்றையடி பாதை 
போல் நம் காதல் 
என் எதிரே நீ வருகிறாய் 
என்னை விலக 
சொல்லுகிறாய் ....!!!

கஸல் 619

காதலில் நினைவுகள் 
ஆயிரம் -உன் நினைவுகள் 
பல்லாயிரம் வலிகள் ...!!!

நினைக்க தெரிந்த 
உனக்கு மறக்கவும் 
கற்று விட்டாய் 
இந்த பயிற்சியை 
எங்கே கற்றாய் ...?

உனக்கு காதல் 
உதைப்பந்தாட்டம் 
எனக்கு பூ பந்து 
எப்படி என்றாலும் 
உதை................!!!

கஸல் 620


உன்னை பற்றி கவிதை 
எழுத்த வேண்டுமென்றால் 
நீ கண்ணீரை எனக்கு 
வரவழைக்க வேண்டும் ....!!!

உன்னை நினைக்கும் போது
இதய துடிப்பு ஏனோ 
குறைந்து கொண்டு வருகிறது 
வலிகள் அதிகரிப்பதால் ...!!!

உன் காதலில் உள்ளத்தில் 
விழுந்து உடலால் 
வெளியேறுகிறேன் 
கண்ணீராய் .....!!!

கஸல் 621

உன் எண்ணம் என்னை 
மேயும் போது 
கண்ணீர் வருகிறதே 
என்ன செய்தாய் என்னை ...?

உன் புகைப்படங்கள் 
என்னை பார்த்து 
சிரிக்கின்றன -முட்டாளே 
என்று கூறுவது போல் ...?

உன்னை காதலிக்காமல் 
காதலை காதலித்து
இருக்கலாம் அதுவென்றாலும் 
மீதியாக இருந்திருக்கும் ...!!!

கஸல் 622

உடைந்த வளையல் ஆகி 
விட்டது நம் காதல் 
சந்தேக நோயால் ....!!!

எல்லோருக்கும் இருள் 
எனக்கு நீ கனவில் வரும் 
ஒளி

உன் கண் உன் பார்வை 
கடந்து பகைக்கிறது 
சுக்கு நூறாகினேன்
காதலில் நான் ....!!!

கஸல் 623

எல்லா கவிதையும் 
பேனாவால் எழுதுகிறேன் 
உன் கவிதை மட்டும் 
கண்ணீரால் எழுத 
வைக்கிறாய் ....!!!

நீ எப்போதும் வலியாக
இரு அப்போதுதான் 
உன்னை நினைத்த படி 
இருப்பேன் ....!!!

நீ என் மீது வந்த 
அம்பு குத்திக்கொண்டு 
தான் இருப்பாய் ....!!!

கஸல் 624

என் காதல் கவிதையில் 
ஊரே காதலிக்குது 
நீ ஏன் 
காதலிக்கிறாய் இல்லை ...?

உன் காதல் மன்னனாக 
இருக்க விடு -இல்லையேல் 
உன் காதல் கண்ணாக 
ஏற்றுக்கொள் .....!!!

எப்போது உன் கண்ணில் 
கண்ணீர் வந்தததோ 
அப்போதே உன்னை விட்டு 
நான் புறப்பட்டு விட்டேன் ...!!!

கஸல் 625

உதிக்கும் சூரியன் நான் 
மறையும் சூரியன் நீ 
நமக்குள் காதல் .....!!!

நீ நடந்து வந்த பாதையை 
தேடுகிறேன் -நீயோ 
அழித்துவிட்டு போகிறாய் 

உன்னை பார்க்க இரண்டு 
கண் போதாமல் இருந்தது 
இப்போ உன்னை நினைத்து 
அழ இரண்டு கண் போதாது ...!!!

கஸல் 626

நீ காற்றாக இரு -நான் 
காதல் பட்டமாக இருக்கிறேன் 
தயவு செய்து நூலை அறுத்து 
விடாதே .....!!!

நீ காதலில் ஓடி விளையாட 
இதயத்தை தந்தேன் -நீ 
ஓடி போய் விட்டாய் ...!!!

உன்னை நினைப்பது 
வரமாக இருந்தேன் 
அழுவது வரமாகி விட்டது ...!!!

கஸல் 627 

தூரத்தில் நின்றால் 
துக்கம் விசாரிக்கிறாய் 
அருகில் வந்தால் வலியை
தருகிறாய் ....!!!

எத்தனை நாள் உன்னை 
நினைத்து அழுவது 
இறைவா அவளை 
நினைத்து அழ இன்னும் 
அவள் வலியை தரட்டும் ...!!!

என்னிடம் இருக்கும் 
காதல் உன்னிடமும் 
இருக்கும் என்று நினைத்தது 
என் தவறு தான் ....!!!

கஸல் 628


காதல் பரிசை புதிதாக 
தரமுடியும் நீயோ 
காதலை புதிதாக 
கேட்கிறாயே ....!!!

தவறு விட்டால் 
திருந்தலாம் -தவறே 
நீயாக இருந்தால் 
எப்படி திருத்துவது ...?

வளமான மண்ணில் 
பயிர் வளரும் 
கடற்கரை மண்ணில் 
காதல் பயிர் வளர்க்கிறாய் ...!!!

கஸல் 629


உன்னை 
கண்டேன் என்பதில்லை 
என்னை 
தொலைத்தேன் என்று 
சொல் ....!!!

காதலால் காதல் 
செய் -நீ காதலால் 
கடினமாகிறாய்...!!!

உன்னோடு சேர்ந்து 
வாழமுடியாது என்று 
நிச்சயம் தெரியும் 
என்றாலும் 
காதலிக்கிறேன் ...!!!

கஸல் 630

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்