கவிப்புயல் இனியவன் கஸல் 690 - 700

உன்னை 
காதலிக்கிறேன் 
நீ 
கனவில் வருகிறாய் 
கலைந்து விடாதே ....!!!

மெல்லிய புள் நுனியில் 
முறிந்து விழுந்த மரம் 
போல் ஆனது நம் காதல் ...!!!

காதலிக்க 
உதவிய நீ 
மறப்பதற்கும் உதவி 
செய்.........!!! 


கஸல் 691

-----

எனக்கு நானே போட்ட 
சாபம் உன்னை நான் 
காதலித்தது ....!!!

காதல் இனிமையானது 
என்று நினைத்து உன் 
முள் கம்பி காதலில் 
விழுந்து விட்டேன் ....!!!

உனக்கு நான் காதல் 
குப்பை ஆகிவிட்டேன் 
அதுதான் என்னை தூக்கி 
வீசிவிட்டாய் .....!!!

கஸல் 692

-------

உடம்பில் அடி விழுந்தால் 
கண்ணீர் வரும் ...!!!
நீ இதயத்தில் அடிக்கிறாய் 
எப்படி கண்ணீர் வரும் ...?

உனக்கு தலையில் 
வைக்கும் பூ தான் 
என் காதல் - காலையில் 
அன்போடு வைக்கிறாய் 
மாலையில் வெறியோடு 
வீசுகிறாய் ....!!!

காதல் இதயங்கள் 
இணைவது -உனக்கு 
யாரோ பிழையாக சொல்லி 
தந்து விட்டார்கள் விலக்குவது
காதல் என்று ....!!!


கஸல் 693

-----

உனக்கு காதல் நிலா 
என்ற பெயர் சரிதான் 
இருந்தால் போல் 
அமாவாசை ஆகிறாய் ...!!!

இதயம் உள்ளவளுக்கு 
கவிதை புரியும் -நீ 
ரசிப்பதற்கு கவிதை 
பார்கிறாய் -என்னை 
ரசிப்பதற்கு இல்லை ...!!!

எல்லோர் வாழ்விலும் 
காதல் ஒரு வெளிச்சம் 
எனக்கு நீ எப்படி இருள் ..?


கஸல் 694

-----
உன்னிடம் காதலை 
பெற்றேன் கண்ணீரை 
விட்டேன் ....!!!

காதலை பலருக்கு ....
சொல்லி பகிரங்க.... 
படுத்த விரும்பாதே .....
திருமணம் ....
இறந்து விடும் ...!!!

உன்னிடம் இருந்து 
கற்று கொண்டேன் 
உன்னை 
காதலிக்க கூடாது 
எவரையும் காதலிக்க 
கூடாது ....!!!

கஸல் 695
----

எனக்குள் எரிந்த
அணையா விளக்கு -நீ 
அணைந்து விட்டாய் ....!!!

மேகமாக இருக்கிறாய் 
மழையாக விழுகிறேன் 
எப்போதுதான் இணைவது ...?

ரோஜாவை பார்க்கும் 
போது உன் கண் தான் 
நினைவுக்கு வருகிறது 
அழகும் ஆபத்தும் ....!!!

கஸல் 696
-----


நீ மெதுவாக வாசிக்கவே 
எழுத்து பிழை விடுகிறேன் 
காதலே பிழைத்து விட்டது ...!!!

நீ 
சிரித்து விட்டு 
போகும் போதுதான் 
தெரிந்தது உன் காதல் 
கபடம் ....!!!

உன்னிடம் காதல் 
எடுக்க - காதலித்து செத்து
கொண்டிருக்கிறேன்....!!!

கஸல் 697
------
நம் காதல் வாசனை 
திரவியம் - நறு மணத்துடன் 
காணாமல் போய் விட்டது ...!!!

காதல் வசிக்கும் இடம் 
இதயம் என்றாய் 
உடைத்து விட்டாயே ....!!!

என் ஒவ்வொரு இதய 
துடிப்பும் உன் நினைவு 
சத்தம் -தயவு செய்து 
வந்துவிடாதே ....!!!

கஸல் 698
------
எனக்கும் உனக்கும் 
காதல் இடைவெளி 
அதிகரிகிறதை -என் 
கவிதை புலப்படுத்துகிறது ...!!!

நானும் பனி புல்லும் 
ஒன்றுதான் 
இரவில் அழுகிறோம் ...!!!

நான் உன்னை நினைத்து 
ஆனந்த கண்ணீர் விடுகிறேன் 
நீ கசக்கும் நீரை எதிர்பார்கிறாய்...!!!

கஸல் 699
------
உன்னிடம் 
இதயம் இருக்கும் 
என்று நினைத்து 
மூழ்கி விட்டேன் 
நீ காதல் வலியின் 
சமுத்திரம் ...!!!

நீ நேரில் வருவதும் 
கனவில் வருவதும் 
ஒன்றுதான் ....
கலைந்து விடுகிறாய் ....!!!

நீ மறையும் சூரியனா ...?
உதிக்கும் சூரியனா ..?
உன்னில் காதலொளி
மங்கலாக இருக்கிறது ...!!!


--------
என் 700 வது கஸல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்