கவிப்புயல் இனியவன் கஸல் 720 - 730

என்னவளே 
இனியவளே 
நீ 
இரவில் இன்பம் 
பகலில் துன்பம் .....!!!

நீ 
சூரியன் இருளையும் 
ஒளியையும் தருகிறாய் 

கண்ணால் தோன்றிய 
காதலில் கண் நோய் 
வரவைகிறாய் ....!!!

கஸல் 721

-----

காற்றைபோல் நம் 
காதல் -உயிர் வாழ்கிறது 
வாசனை இல்லை ....!!!

இரவிலும் 
என் கண்ணுக்கு நீ 
அழகு -ஆனால் 
நீ காதல் இருட்டாக 
இருந்தால் ....!!!

உன்னோடு 
இணைந்து சென்றேன் 
பின்னாளில் பிரிந்து 
வாழ்கிறேன் ....!!!

கஸல் 722

-----

எனக்கு உனக்கும் 
இடையே இப்போ 
இருக்கும் உறவு 
கவிதைதான் .....!!!

இன்பமாக வரிகள் 
முடிவில் துன்பத்தில் 
முடிகிறது ....!!!

எனக்கு 
உன்னை கண்டவுடன் 
கடந்த காலம் எல்லாம் 
மறக்கிறது ....!!!

கஸல் 723
------

நான் 
காதலிக்கிறேன் 
நீ 
வெறுகிறாய்
காதல் நேர் மறையோ ....!!!

முள்ளின் மீது 
தூங்குவதும் ....
உன் நினைவோடு 
வாழ்வதும் ஒன்றுதான்...!!!

நீ காதலோடு விட்ட 
மூச்சை காற்றில் 
தேடி அழைக்கிறேன் ....!!!

கஸல் 724

-----
பட்ட மரத்தில் படிந்த 
பாசிபோல் உன் 
நினைவுகள் நெஞ்சில் 
ஒட்டி இருக்கிறது ....!!!

காதல் வலையை 
வீசுகிறேன் ...
எப்போதாவது ..
சிக்குவாய் என்ற 
ஏக்கத்துடன் .....!!!

உன் மௌனத்தால் 
காயப்பட்டு விட்டது 
என் இதயம் ....!!!

கஸல் 725

-----
காதலில் நீ 
சுடரா ..? புகையா ..?
நெய்யாக நான்
இருக்கிறேன் .....!!!

ஊர் 
பேச்சால் வளர்வது 
காதல் - நீ 
ஊரில் இல்லாதவள் 
போல் இருகிறாய் ...!!!

காதலில் - நீ 
சுடராக இருக்கிறாயோ
அதுதான் சுடுகிறாய் ...!!!

கஸல் 726
--------
உன் 
நினைவுகளில் இருந்து 
கவிதை எழுதிய -நான் 
வலிகளில் இருந்து 
கவிதை எழுதுகிறேன் ....!!!

காதல் 
பூவால் பூஜை 
செய்த - நீ 
முற்களால் பூஜை 
செய்கிறாய் .....!!!

உன் கண்ணுக்கு 
மயங்கி காதல் செய்தேன் 
இப்போ உன்னை கண்டே 
மறைகிறேன் ....!!!

கஸல் 727
----

நீ 
நினைவாய் தந்த 
ரோஜா செடியில் 
முற்கள் மட்டுமே 
உதிக்கிறது ....!!!

இரவு எப்போது 
வரும் காத்திருக்கிறேன் 
அப்போது இனிமையாய் 
வருவாயோ ...!!! 

உன் அழகால் 
இதயம் முழுக்க 
காயப்பட்டிருக்கிறேன் ....!!!

கஸல் 728
-----

முள் வேலிக்குள் வாழ்ந்த ...
என்னை நந்தவனத்துக்குள் ..
கொண்டுவந்தவள் -நீ 

காதல் வானத்தில் 
ஜோடியாக பறக்க ஆசை 
படுகிறேன் - காதல் சிறகை 
உடைக்கிறாய் ....!!!

கலங்காதே கண்ணே...
சிரித்த போது என்னோடு 
சேர்ந்து சிரித்தாய் ...
அழும்போது உனக்கும் 
சேர்த்து அழுகிறேன் .....!!!

கஸல் 729
-----
உன் 
காதலால் பேச்சையே 
மறந்து விட்டேன் அத்தனை 
வலியுடன் நீ பேசிவிட்டாய் ....!!!

நாம் 
காதலில் கலக்கபட்ட
தண்ணீரும் எண்ணையும்
நீ தான் தண்ணீர் முதலில் 
வெளியேறுவாய் ....!!!

ஒன்றில் நீ பேசு 
அல்லது என்னை பேசவிடு 
மௌனமாய் இருந்து காதலை 
கொல்லாதே ...!!!
+
+
எனது கஸல் கவிதை தொடர் 
கவிதை எண் 730


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்