கவிப்புயல் இனியவன் கஸல் 770 - 780

கனவுகளை தந்த நீ 
கண்ணீரை தருகிறாய் 
காதல் கரைகிறது ....!!!

பொய் சொல்லி காதல் 
செய்தாய் - நம்பிவிட்டேன் 
உண்மை காதல் என்று ....!!!

நீ காதலிக்கிறாய் 
நான் காதலாய் வாழ்கிறேன் 
நம் காதல் தண்டவாளம் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;771
-------

அவசர பட்டு உன்னிடம் ...
காதல் சொல்லிவிட்டேன் ..
காதல் அழுகிறது ....!!!

ஆழம் 
இல்லாத கிணறு ...
ஆபத்தை தரும் -உன் 
இதயத்தில் நான் 
விழுந்ததுபோல் ......!!!

உறவு என்று சொல்ல நீ 
முறிவு என்று சொல்லும் ..
ஆளாக மாறி விட்டாய் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;772
--------
என் 
வாழ்க்கையில் வர ..
விரும்புகிறாய் - அவஸ்தை 
படபோகிறாய்....
அன்பாலே உன்னை ...
கொன்றுவிடுவேன் ...!!!

என் வாழ்க்கை ...
கல்லும் முள்ளும் நீதான் 
இடையே எப்படி ...
கரும்பாய் இருகிறாய் ...!!!

வேதனை என்னவென்று ...
உன்னை காதலித்த பின் ..
புரிந்து கொண்டேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;773

------------

என் காதல் கவிதை ...
பார்த்த நண்பனும் அழுகிறான் 
என்னைப்போல் அவனுக்கும் ...
ஒரு காதலிபோல் ....!!!

உலகில் பெரிய கொடுமை ...
மணமாலையில் அவளை ...
காதலன் பார்ப்பது ...!!!

காதல் 
இல்லாத இதயத்தில் ...
காதலை பார்ப்பது ...
கருங்கல்லில் தண்ணிரை 
பார்ப்பது போல் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;774
---------
நான் 
உனக்கு காதல் ..
கடிதம் தந்தேன் - நீ 
திருமண அழைப்பிதலாய் 
மாற்றி விட்டாயே ...???

நீ 
என் கண்ணுக்கும் 
கண்ணீருக்கும் இடைபட்டவள் 
இருப்பாயோ ..?
போய்விடுவாயோ ...?

உன்னை காதலித்த ..
போதே நான் சமாதியாகி ....
கல்லறையாகிவிட்டேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;775
-------
இதயத்தை நானே 
வெட்கப்படுகிறேன்
என்னை தூக்கி எறிந்து 
உன்னை வைத்திருப்பதற்காக ....

உனக்காகவே வாழ்கிறேன் 
எனக்காக 
நீ எப்போது வாழ்வாய் ...?

கடிகாரத்தைப்போல் 
நம் காதல் 
எப்போது நிற்பாய் ..?
பயப்பிடுகிறது இதயம் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;776
------------
நீ 
எப்படி எல்லாம் என்னை 
காதலிக்கிறாய் ...?
இதயத்துக்கு தெரியாது ...!!!

காதலாக இருப்பது 
கால இன்பம் இல்லை 
கருங்கல்லை கூட காதல் 
உடைக்கும் 

உன் 
பிரிவு உன்னிலிருந்து 
என்னை மீட்டு தந்துள்ளது 
காதல் நன்றி ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;777
--------
தனிமையை தவிர்க்க 
உன்னிடம் 
காதலுக்காய் ஏங்கினேன் ...?

நீ 
வந்த பாதையால் .
நான் வரமாட்டேன் 
பாதையை மறைத்து 
விட்டாய் .....!!!

உன் காதல் பிரிவு 
இதயத்துக்கு ஏமாற்றம் 
மனதுக்கு நல்ல போதனை 
எனக்கு நல்ல தண்டனை ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;778
----------
காதலின் 
இதயக்கதவை 
மூடும் சாவி 
நீ 

நீ 
சொல்ல வேண்டாம் 
முகம் சொல்லுகிறது 
இதயம் புரிந்து விட்டது ...!!!

நீ வந்த போதும் 
சென்ற போதும் 
வலிக்காமல் இருக்க 
கற்று விட்டது இதயம் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;779
-----------
உன் 
இதயத்தில் 
நான் 
என்னை கொல்ல
காதலை நிறுத்து ...!!!

நீ கடந்து 
வந்த பாதை 
கவிதையானது 

காதலில் 
இணைந்த பெற்றோர்
காதலை வெறுக்கிறார்கள் 
காதல் சிரிகிறது ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;780

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்