இணைய மாட்டோம்
என்ற நம் காதல் வாழ்க்கை
இப்போது என்ன
செய்துகொண்டிருக்கும் ...?
நான் அழுது
உன்னை பெற்றேன் -நீ
அழுது காதலை
வெளியேற்றினாய் ...!!!
நான் அருகில் வரும்
போதெல்லாம் திரும்பி
பார்க்காமல் போகிறாய்
அழப்போவது நம் காதல் ...!!!
கஸல் 674
-----
உன் கூந்தலில் சிக்கி
தவிக்கும் பூவைபோல்
என் இதயத்தில் நீ
சிக்கி தவிக்கிறாய் ....!!!
ஈட்டி
முனையில் நிற்கலாம்
உன் கண் முனையில்
நிற்க முடியாது ....!!!
காதலின் விளக்குக்கு
நான் திரி
உன் கண்ணீர் நெய்
அணையாமல் பார்ப்போம் ...!!!
கஸல் 675
-----
கண்ணீர்
அழகாக உள்ளது....!!!
---------------------------------
உன்னிடம் காதலை
ஆறுமாதமும்
கண்ணீரை நான்கும்
மாதமும் பெற்றேன்
காதல் குழந்தை நிறை
மாதத்தில் ....!!!
ரோஜாவில் தண்டில்
முள் உள்ளது -உனக்கு
இதழில் முள் உள்ளது ...!!!
காதலித்த போது உன்
கண் அழகாக இருந்தது
இப்போ என் கண்ணீர்
அழகாக உள்ளது....!!!
கஸல் 675
-----
காதலில் சொர்க்கம்
நரகம் இரண்டையும்
உறுதி படுத்தியவள்
என் காதல் தேவதை ...!!!
உன்
காதலால் தான்
நான் உண்ணும் தேன்
கசக்குறது -என்
கண்ணீர் இனிக்கிறது ...!!!
நான் உனக்கு தரும்
கவிதைகளை -நீ
இதயத்தில் வைக்காமல்
தபால் பெட்டிக்குள்
போட்டு விட்டாய் ...!!!
கஸல் 677
-----
நீ
என்ன சொல்கிறாய்
இதழ்களால் மறுக்கிறாய்
கண்களால் அழைக்கிறாய்
நான் மத்தளம் ஆகினேன் ...!!!
உன் காதல்
மலரில் உள்ள தேனா..?
மலர் மேல் இருக்கும்
தேனியா ..?
உன்
கண்கள் உனக்கு அழகு
எனக்கு ஆயுள் கைதி ...!!!
கஸல் 678
-------
உன் பாசம் தான்
எனக்கு அமிர்தமும்
விஷமும் விஷம்
கொஞ்சம் அதிகம்
காதல்
பட்டாம் பூச்சியாய்
பறந்து திரிந்தேன்
உன்னிடம் முள் இருப்பதை
மறந்து சிக்கி விட்டேன் ...!!!
உன்னை நினைத்து
எழுதிய கவிதைகள்
மற்றவர்கள் ரசிக்கிறார்கள்
நீ கிழித்து எறிகிறாய்...!!!
கஸல் 679
------
என்னவனே இன்று
இயமன் பாச கயிற்றோடு
வந்தான் -நிச்சயம் செய்த
பாப்பிள்ளை தாலியுடன் ...!!!
ஜோடியாக வானில்
பரந்த பறவை ஒன்றோடு
ஒன்று மோதி சிறகு உடைந்தது
போல் நம் காதல் மோதி
உடைந்து விட்டது ...!!!
திருமணத்தில்
சாட்சி இடுவர்
நீ காதலிப்பதற்கு சாட்சி
கேட்கிறாய் ....?
கஸல் 680
-----
காதலில் கனவுதான்
ஆணி வேர்
நான் குதூகலத்தில்
காதல் கொப்பில்
நீ கோடரியுடன் என்
அருகில் ....!!!
நீ என்
அருகில் வரும் போது
இதயம் சிரிக்க வேண்டும்
இதயம் தூங்குகிறது ...!!!
உன்னை பார்த்த நாளில்
இருந்து நான் காதல்
கிரகதோஷம் அடைந்தேன்
காதல் செவ்வாய் குற்றமாம் ...!!!
கஸல் 681
------
நீ காதல் சின்னமாக
தந்த உன் புகைப்படம்
புகை பிடித்து போகிறது
புகை இதயத்துக்கு கூடாது ...!!!
உன்னோடு சேர்ந்து
நடந்த பாதைகள் இப்போ
என்னை பார்த்து சிரிக்கிறது
நான் தனியே போவதால் ,,?
உன்னை நினைத்தால்
காயங்கள் நினைவு
வருகிதில்லை ...!!!
அவை தழும்பாகி விட்டது ...!!!
கஸல் 682
------
காதலையும் உன்னில்
காணமுடியும்
கண்ணீரையும் காண
முடியும் ....!!!
என்னை நான் அழகு
பார்க்க பயன் படுத்திய
புகைப்படம் தான் காதல் ...!!!
மேகமாக நீ இருக்கிறாய்
முகிலைப்போல் நான்
அசைகிறேன் காதல்
மழையாய் அழுகிறது ....!!!
கஸல் 683
------
முட்டைக்குள் இருக்கும்
மஞ்சள் கருபோல்
என் இதயத்தில் உன்
வலி நிறைந்த நினைவுகள் ..!!!
இதயத்தை விட்டு
வெளியேறி சுதந்திரமாய்
நீ திரிகிறாய் நான்
அலைகிறேன் ....!!!
நான்
அழுத்த கண்ணீர்
அதிகாலை பனி துளிகள் ...!!!
கஸல் 684
----
உன்னையே ...
நினைத்ததால் ....
என்னை ....
தேடி அலைகிறேன் ....!!!
உன்னை காதலித்த
காரணத்துக்கு - வலி
என்ற கவிதையால்
என்னை நான்
தண்டிக்கிறேன் ....!!!
காதல் எல்லோருக்கும்
ஒரு மருந்து
வலியில் எப்படி
சிரிப்பது தரும் ...!!!
கஸல் 685
-------
காதல்
மென்மையும் உறுதியையும்
கொண்டிருக்க வேண்டும் ..
பட்ட மரத்தால் பயன் என்ன ..?
நீ தூரே வரும்போது
உன் இதயம் ஓடி வந்து
என்னை தடுக்கிறது
அவள் வருகிறாள்
நீ போய் விடு ....!!!
உன் சிரிப்பால் வந்த
காதல் இப்போ
அழுது கொண்டே போய்
விட்டது ....!!!
கஸல் 686
-----
காயத்தை காயத்தால்
மறைக்கும் காதல் -நம்
காதல் தான் ...!!!
உன்னை
ஒருமுறை சந்தித்தேன்
ஓராயிரம்
முறை துடிக்கிறேன்
காலத்தால் அழியாத
காதல் - உன் கவலை
கொண்ட இதயத்தால்
அழிந்து கொண்டிருக்கிறது ...!!!
கஸல் 687
-----
நம் காதல்
பட்டாம் பூச்சியின்
அழகும்
ஈசலின் வாழ்க்கையும்
போல் ஆகிவிட்டது ...!!!
காதல் பலவர்ண
கனவுடன் வாழும் கலை
எனக்கு கறுப்பும்
வெள்ளையுமாக வருகிறது
நீ ஒன்றில் காதலை
விட்டு விடு -இல்லை
என்னை விட்டு விடு
இரண்டையும் வதைக்காதே ..!!!
கஸல் 688
-----
என் கவிதையை
தூக்கி எறிகிறாய் என்றால்
உனக்கு காதல் இல்லை
முதலில் காதல் செய் ...!!!
பருவ வயதில்
எல்லோருக்கும் காதல்
ஒரு வரம் -எனக்கு
அது வதம் ....!!!
காதலில் எல்லோரும்
சாதனை செய்தனர்
உன்னை காதலித்து -நான்
வேதனையில் சாதனை
செய்கிறேன் ....!!!
கஸல் 689
------
நீ வார்த்தையால்
காதலை மறுக்கிறாய்
உன் இதயம் என்னை
பார்த்து சிரிக்கிறது ....!!!
காதல் என்றால்
கெஞ்சல் இருக்கும்
கொஞ்சல் இருக்கும்
நீ அதை கொலையாக
பார்கிறாய் ...!!!
எழுதிய என் கவிதைகள்
கண்ணிர் விடுகின்றன
நீ
சிரித்தபடி இருக்கிறாய்
கஸல் 690
கருத்துகள்
கருத்துரையிடுக