கவிப்புயல் இனியவன் கஸல் 650 - 670

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
மூச்சாக இருக்கிறேன் 
திணறுகிறது நுரையீரல் 

நீ காதல் ஒளி 
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி மறைகிறாய் 

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
அதில் சுவாமி நீ 
பூசாரியாக .......
நான் இல்லை ...!!!

கஸல் 651

-----

காதலுக்காக ஏங்குகிறேன் ...
காதலை மறுக்க துடிக்கிறாய் 
நீ .......................!!!

குழந்தை பசிக்கு அழும் 
முதுமை பாசத்துக்கு அழும் 
நான் காதலுக்கு அழுகிறேன் 
நீ விடை கொடுக்கிறாய் ...!!!

மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் போது -நீ 
இதயத்தை கொண்டு சென்று 
விட்டாய் ....!!!


கஸல் 652

------

முககண்ணால் பார்த்தேன் 
இதயகண்ணில் வைத்தேன் 
முக கண்ணும் அழுகிறது 
இதயக்கண்ணும் அழுகிறது 


என் காதலில் நீ 
என்றும் இருப்பாய் ...
இதயத்தில் உடைந்த 
கல்லாக 
சிதைந்த சிலையாக 

காதல் சூரியன் போல் 
பிரகாசமாக இருந்தால் 
இன்பம் -நீ மேற்கு திசை 
சூரியன் 


கஸல் 653

----

நான் ...
உன்னை காதலிக்க ..
முன்னரே 
காதலில் தோற்க கற்று 
கொண்டுவிட்டேன் ...!!!

காதல் 
கண்ணுக்கு வந்து 
நெஞ்சுக்கு பாரம் தரும் 
காதல் வலிக்காமல் 
இனிக்காது ...!!!

காதல் சந்தன காற்று 
உனக்கு ஏன் - சூறாவளி ...?

கஸல் 654

-----

காதல் அழகும் ...
அழுக்கும் நிறைந்தது ...
எனக்கு மிஞ்சியது 
வலிதான்....!!!

என்னை நானே ..
தேடுகிறேன் ..
உன்னில் இருப்பதை ..
மறந்துவிட்டேன் 
நீ எங்கே சென்று விட்டாய் ..?

காதல் பொழுது விடியும் 
என்று காத்திருந்தேன் 
மங்கலாக விடிந்தது ....!!!

கஸல் 655

-----

நான் 
ஏறுவரிசையில்
உன்னை காதலிக்கிறேன் 
நீ இறங்குவரிசை ....!!!

நான் 
விடும் கண்ணீர்கூட 
உன்னைப்போல் அழகானது 
அழுக்காக்கி விடாதே ...!!!

நீ என்னை விலக்கி
விட்டாய் -ஆனால் 
என் இதயத்தை 
இன்னும் தரவில்லை ....!!!


கஸல் 656

-----

என் கண் தான் 
எனக்கு முதல் எதிரி 
வலியால் துடிக்கும் 
என் இதயத்துக்கு .....!!!

பூக்களில் பனித்துளி 
போல் யாருக்கும் 
தெரியாமல் இரவில் 
அழுகிறேன் -நீ 
ரசிக்கிறாய் .....!!!

நான் உன் கண் 
மூடினாலும் 
மீண்டும் திறப்பேன் ....!!!

கஸல் 657

-----

இதயம் வலிக்கும் போது 
கவிதை எழுதுகிறேன் 
வலியின் இன்பத்தை 
இதயத்தில் பதிகிறேன் ....!!!

நீ தலை குனிகிறாய் 
நான் துடிக்கிறேன் 
நான் தலை குனிகிறேன் 
நீ எங்கே சென்றாயோ ..?

இராஜ நாகத்தின் விஷம் 
உன் பார்வை -நீ 
எப்போதோ குற்றி விட்டாய் 
நான் 
இறக்காமல் இருக்கிறேன் 


கஸல் 658

-----

நான் 
விடுவது எழுத்து 
பிழையில்லை 
என் காதலின் பிழை 
உன்னிடம் அவசரப்படுகிறேன் ...!!!

என் கண்ணில் இருக்கும் 
காதல் எப்போது வரும் 
என்று எதிர் பார்க்காதே 
கண்ணீராய் வந்து விடலாம் 

நான் வானத்தில் 
நின்று காதலிக்கிறேன் 
நீ அண்ணார்ந்து பார்க்கிறாய் ...!!!

கஸல்  659

----

உன்னை நினைத்து 
கவிதை எழுதிவிட்டேன் 
முகவரி தராததால் 
தேங்கி கிடக்கறது ...!!!

நம் காதல் 
ஒரு முக்கோணம் 
வலி ,ஏக்கம் ,கனவு 
பக்கங்களால் 
அடைபட்டுள்ளது ....!!!

வானத்தின் நட்சத்திரம் 
உன் நினைவுகள் 
அடிக்கடி முகில் 
மறைப்பது போல் 
மறைந்து 
கொண்டும் இருக்கிறது .....!!!


கஸல் 660

-----

காதல் 
வரம் கேட்டு 
உன்னை காதல் கடவுளாய் 
பார்க்கிறேன் - நீயோ
என்ன 
வேண்டும் என்கிறாய்....!!!

காதலின் உச்சியில் 
நான் நிற்கிறேன் 
நீ அடிமரத்தை 
வெட்டுகிறாய் .....!!!

காதல் ஓடத்தில் 
கைகோர்த்து நிற்கும் 
தருணத்தில் - நீ 
தள்ளி விடுகிறாய் ...!!!

கஸல் தொடர் 661

----

காதலின் அமிர்தத்தை 
நான் தருகிறேன் 
நீ விசத்தை தருகிறாய் 
இனிக்கிறது ....!!!

இரட்டை வீதியில் 
அலங்கரித்து சென்ற 
காதல் -இப்போ 
ஒற்றையடி பாதையில் 
ஒடுங்கியுள்ளது ....!!!

நான் கண்ட 
காதலியும் நீதான் 
சண்டாலியும் நீதான் 
காதலில் வாழ்கிறேன் ...!!!


கஸல் தொடர் 662

----

முன்னோக்கிய காதல் 
பின்னோக்கி செல்ல 
காதல் என்ன பாவம் 
செய்தது ....!!!

வெளிச்சத்தில் நின்று 
காதலை பார்க்கிறேன் 
நீ இருட்டில் நிற்பதை 
மறந்து விட்டேன் ....!!!

எத்தனை நாள் தான் 
சொல்வாய் இன்று போய்
நாளை வா என்று 
மௌனத்தால் ....?

கஸல் தொடர் 663

-----

என் உயிராக இருந்தாய் 
இப்போ நிழலாக 
இருக்கிறாய் -காதல் 
வெளிச்சத்தில் மறைகிறாய் ...!!!

தேன் கூடாய் இருந்த 
காதலில் இப்போ 
தேன் இல்லை குற்றும் 
குளவிதான் இருக்கிறது ...!!!

காதல் கப்பல் கடலில் 
மிதிக்கணும் -நீ 
கற்பனையில் 
வானத்தில் பறக்கணும் 
என்கிறாய் ....!!!

கஸல் தொடர் 664

----

காதல் ஒரு ஊன்று 
கோல் தடி நம்பிக்கை 
குறைந்தவனுக்கு 
நீ காதலையே 
தரமறுக்கிறாய்...!!! 

உலகில் ஊட்டசத்து 
நிறைந்த உணவு 
காதல் -உன்னிடம் 
சத்து குறைவாக 
இருப்பது ஏன்...?

நேற்று பார்த்தேன் 
இன்று காதலித்தேன் 
நாளை தோற்றேன் 
என்பது காதல் இல்லை ...!!

கஸல் தொடர் 665

-----

சூரியனுடன் - உன் 
காதலை ஒப்பிடேன் 
நீ எரிக்கிறாய் 
என்பதால் -நீயோ 
குளிர்கிறாய் .....!!!

காதல் காற்றில் 
பட்டம் பறக்கிறது 
காதல் நூல் அறுந்த 
நிலையில் ....!!!

கவலை படாதே 
என்று ...
சொல்லிக்கொண்டு 
கவலையை தருகிறாய் 
கண்ணீர் எனது என்பதால் ...!!!


கஸல் தொடர் 666

-----

உன்னிடம் காதலை 
கேட்டேன் நீ 
கண்ணீரை தருகிறாய் 
காதல் என்றால் 
கண்ணீர்தான் ...!!!

உன் வலியால்
அழுகிறேன் -நீ 
கண்ணீரை 
இளநீராக பார்க்கிறாய் ...!!!

உன்னிடம் கண் 
இருந்தால் காதல் 
வந்திருக்கும் -நீ 
வைத்திருப்பது 
கல் கண் .....!!!

கஸல் 667

-----

நீ 
திரும்பி பார்க்கும் 
போது நான் இறந்து 
விட்டேன் - நீ 
அதிர்ச்சி கூட அடைய 
வில்லை -உன் 
இதயத்தை தா பார்க்க 
வேண்டும் ...!!!

கடற்கரையில் 
நம் கால் சுவடுதான் 
அழிய வேண்டும் 
நீ காதலையே 
அழித்து விட்டாய் ....!!!

நல்ல நாள் பார்த்து 
காதல் செய்தேன் 
கேட்ட நாளில் காதல் 
மலர்ந்தது - நீ என்னை 
பிரிந்த நாள் கேட்ட நாள் ...!!!

கஸல் 668

-----

நீ குயிலா காகமா..?
காதல் கீதம் பாடுவாயா ..?
கரைவாயா ...?
காதல் வீணையுடன் 
காத்திருக்கிறேன் ....!!!

திரும்பி பார்க்கும் 
போதெல்லாம் உன் 
உருவம் - இப்போ 
திரும்பி பார்க்கவே 
பயமாக இருக்கிறது ....!!!

காதல் 
விசத்தை குடித்து 
விட்டேன் -என்னை 
காப்பாற்றுவாய் 
என்ற ஆனந்தத்துடன் ...!!!

கஸல் 669

------

என் 
கவிதை பிடித்திருக்கு 
என்னை பிடிக்கவில்லை 
உன்னை பிடித்திருக்கு
நீ காதல் செய்ததால் 
கவிதை அழுகிறது ....!!!

ஏட்டில் படிக்கும் போது
காதல் பிடிக்கும் உனக்கு
நான் வீட்டில் வந்தால் 
பிடிக்குதில்லை ....!!!

எப்படியும் 
காதலிக்கலாம் 
என்ற உலகில் இப்படிதான் 
காதலிக்கனும் என்று
நான் அடம் பிடிப்பது 
வேதனை தான் ....!!!


கஸல் 670

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்